இராமன் கதை இங்கே சிந்தனையால் செலுத்தப்பட்ட மனிதர்கள். கூர்முள் உடைய குதிரை, தலைவனொடு பார்வை பிரிந்தநற் பாவைஉடன் ஓர்சொல் இழந்த இளவல் எனவகைப் பட்டார் அழுந்தும் கடிவாளம் காண். கூர்முள் - குதிரை செலுத்தும் கருவி இலக்குவன் வருத்தத்தை சீதை மாறுபட்டு புரிந்து கொள்ளுதல் உறுவல் அழுந்த ஒருவன் இளவல் மறுகரை சேர்ந்தான் மனதும் மறுக முறுவல் அணிந்த குலப்பெண் உவனைத் தறுக உணர்ந்தாள் தனித்து. தறுக - தவறாக ஆறுதல் கூற அமைதியாய் நோக்கினாள் 'தேறுதல் அடைவாய், தெரிந்துநான் மாறுதல் கொண்டேன், மயக்கம் குறைந்து; பரிசினைத் தந்தேத் திரும்பலாம் தாழ்ந்து'. அன்பின் அழுத்தம் தாங்காது இலக்குவன் நடந்தவை உரைத்தல் இன்னும் கலங்கினான் இவ்வளவும் நேர்ந்தன சொன்னான் பிதற்றும் தொனியொன்ற - கண்கள் தாழ்ந்தே இயல்பு தடுமாறி போர்தனில் வீழ்ந்தவன் போல்தான் விளர்ந்து. விளர்தல் - வெளுத்தல், வெட்குதல் சீதையின் கைவிடப்பட்ட நிலை கண்ட துறவோர்கள் வால்மீகி குடிலுக்கு அழைத்துச் சென்றனர் 'சுமக்கும் வயிற்றின் சுமைதளர் காலம் உமக்கும் பொறுக்க முடிந்ததோ' - விம்மலாய்ச் சுட்டினாள் இளவலிடம் ஒண்ணா(து) உணர்த்திட கட்டறுந்த கண்கள் கசிந்து. வேற...