Skip to main content

Posts

Showing posts from June, 2008

திங்கள் சத்யா -> அசுரன் -> தொடரும் சோகம்; தீர்வு?

அசுரன்: ''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்! ( திங்கள் சத்யா ) மேலே உள்ள சுட்டியைப் படித்து விட்டு தொடருங்கள். திங்கள் சத்யாவின் இது போன்ற இன்னொரு பதிவினை (இன்னொரு) சத்யா குறிப்பிட்டிருந்தார். படித்து விட்டு பல நாட்கள் மனம் கலங்கிப் போயிருந்தது. இப்போது ஓராண்டுகள் கழித்து அதே சோகம் இன்னொரு இடுகையாக சற்றும் மாற்றமின்றி. இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் இந்த நிலை தொடரத்தான் போகிறதா? 1. ஆயிரமாயிரம் பெருமைகள் கொண்டாடும் நம்மால் ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு சுகாதாரமான முறையில் வேலை செய்ய வழியேற்படுத்த முடியவில்லை. எதனால்? 2. மேலைநாடுகளில் இந்த வேலை எவ்வாறு கையாளப்படுகிறது? 3. அரசின் கவனத்தை ஈர்ப்பது எப்படி? 4. அரசுகள் கையாலாகதவை என்றால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாம் எவ்வாறு உதவ முடியும்? இதை இப்படியே தொடர விடக் கூடாது. இயலவில்லை என்றால் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்று தொட்டுத் தொடரும் நாகரிகம் என்று வெட்கமின்றி கூறித் திரிபவர்களாகவே பார்க்கப் படுவோம்.

எறும்புடன் ஒரு பயணம் - புனைவு

இன்று காலையில் தான் அந்த விநோதம் நிகழ்ந்தது. வழக்கம் போல் தாமதமாக அலுவலகத்துக்கு புறப்பட்டேன். உலகமே அழிந்தாலும் தன் கடமை தவறக்கூடாது எனக் கருதும் என் மனைவி எனக்குக் கட்டுச்சாப்பாட்டை தந்து விட்டு பெப்போவை (என் பையங்க) பால்வாடிக்கு அழைத்துச் சென்றார். நான் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் 24ம் எண் பேருந்தைப் பிடித்தேன். அதுவும் வழக்கம் போல் ஊர்ந்தே நகர்ந்தது. நான் இருக்கும் லொராங் சுவானிலிருந்து பாயா லேபா தொடர் வண்டி நிலையம் செல்ல அரை மணி நேரம் ஆகும். அங்கிருந்து 8 நிமிட தொடர் வண்டிப் பயணம் தானா மேரா நிலையத்திற்கு. அந்த சந்திப்பில் பொதுவாக 10 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வரும் சாங்கி செல்லும் தொடர் வண்டியைப் பிடித்தால் அலுவலகம் அடையலாம். இதுக்குள்ள ஒரு மணி நேரமாகி விடும். இன்னும் பேருந்தில் தான் இருந்தேன். நிமிடக் கணக்கு, நொடிக்கணக்கு எல்லாம் பார்த்தும் 10 மணிக்கு முன் அலுவலகம் அடைய முடியாது என்ற உண்மை வெறுப்பேத்தியது. ஒலி பண்பலையில் ஆனந்தம் ப்ரூவுடன் ஓடிகொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடங்களில் இந்திப் பாட்டு போட்டு விடுவார்கள். நினைக்கும் போதே இன்னமும் வெறுப்பாக இருந்ததது.

இரகு வெண்பா - காவியம் பாடல்

இராமன் கதை இங்கே நாரதர் சொன்ன கதையை காவியமாய் வால்மிகி பாடுதல் நாரதன் ஓதினான் நம்பியின் கதையினை பாரதம் ஏத்துப் படித்திடவே - சாரதியற்(று) ஆயிரம் காட்சிகள் ஆய்ந்தன யாவையும் பாயிரமாய்ச் செய்தார் பரிந்து. இலவ-குசனை அழைத்து பாடப் பணித்தல் இயற்றிய செய்யுள் இசைக்கப் பணித்தார் வயதில் இளையோரை ஈர்த்து - வியன்புவியும் வானமும் உள்ளளவும் வாழ்த்துமே காட்டிடைத் தேனனையும் பாக்களைத் தான். புகழுறப் பாடி அவைதனை அடைதல் பாடிய ஊரெல்லாம் பாராட்டப் பெற்றனர் தேடிய உண்மை தெளிந்ததாய் நாடிய மக்கள் திளைத்தனர்; ஆன்றோர் அவையிலும் ஒக்கவே சென்றார் உவந்து. இசைத்த இளையோர் இருவரும் மன்றில் அசைத்த அகமொரு வாரி - விசையுறு வாசகம் கேளுமின் வேந்தனின் மக்களே யாசகம் பாடும் சிறார். வேள்வியில் இடையே பாடலைக் கேட்டவர், பாடலை கேட்க இடைவெளி பெற்றனர். மன்னன் நடத்திய மாபெரும் வேள்வியை இன்னிசை பாடியே எட்டினர் - பண்ணுடையப் பாடலை அந்தணர் போற்றினர் வேள்வியில் இடைவெளி வேண்டியேப் பெற்று. சிறுவர் பற்றி அறிந்த இராமன் தம்முன் பாட அழைத்தது முன்னம் பிரிந்தார் முகங்கொள நேர்ந்தது மன்னன் அழைத்தான் மகவினை - இன்னும் அறியா திருந்தவன் ஆழ்ந்தான் கதையில் ச

இரகு வெண்பா - வால்மீகி

இராமன் கதை இங்கே காட்டில் கொள்ளையராய் வாழ்ந்த வலியனை நாரதர் சந்தித்தல் கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்; கள்ளம் நிறைந்த வலியனை வெல்லும் தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான் 'கருமப் பழியார் உடைத்து?' வலியன் மறுமொழி துச்சமென்பார் எம்குலத்தோர் என்பழியை ஏற்றிடவே அச்சமில்லை எப்பொழுதும் மேதினியில் - மிச்சமின்றி கூவிடுவேன் யாவரையும்; என்பழிக்காய் போட்டியிட மேவிடுவோர் எண்ணிக்கை மேல். பழி ஏற்க யாருமின்றி வால்மிகியாக துறவறம் தழுவுதல் அல்லன ஆற்றுவான் ஈட்டு(ம்)பழி ஒப்புவர் இல்லை உவனிடம், உள்பட பொல்லாமை நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன் இங்ஙனம்இல் வாழ்வு துறந்து. உள்பட - உண்மை உள்ளத்தில் பட இனியவர் தேடி இரகுவினை அறிதல் முனிவராய் வாழ்ந்த வலியுமே கேட்டார் 'இனியவர் யாருளர் இங்கே?' - இனிவரும் காதையில் தன்னை மறந்தார்; கலைத்ததே காடையின் கதறும் ஒலி! வேடனை வெருண்டு முதல் பாடல் விளம்புதல் கண்ணுற நேர்ந்ததே கண்ணீரில் காடையை புண்ணுற வீழ்ந்ததே உந்தியும் - தன்னிலை விண்ணுற தீஞ்சொல் மொழிந்தாரே வேடற்கு மண்ணுற வாழும் முதல். உந்தி - துணை, பறவை முதல் - தொடக்கம் பறவை உயிரைப் பறித்த தருணம் துறவி பலுக்கும்

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி

தசாவதாரம் - பார்க்கலாம்!

'அடியேன் இராமானுஜதாசன்'ன்னு அறிமுகமாகும் போது கண்ணில் நீர் கசிவதைத் தவிர்க்க முடியவில்லை. கமலுக்கு மட்டும் ஏன் திரைப்படங்கள் மீது இந்த வெறி! அவர் கடின உழைப்பு ஒவ்வொரு சட்டத்திலும்(frame) தெறி(க்)கிறது. வைணவர்களின் நம்பிக்கையை உடைத்து வரதராஜப் பெருமாள் பெயர்க்கப் படும்போது, அவர்களுக்காக பரிதாபப் படமுடிகிறது. இப்படித் தான் எல்லோருக்கும் இருக்கும் என்ற உண்மை நெளிய வைக்கிறது. அடுத்த பத்து நிமிடத்தில் தொடங்குகிறது குட்டிக் கரணங்கள். Roller Coaster - இல் அமர்ந்ததைப் போல் திரையில் யாரெல்லாம் கமல் என சரியாத் தெரியாமல், கதையிலும், அருமையான வசனங்களிலும் ஒட்ட முடியாமல் வியப்பின் ஊடாக படம் பார்க்கிறோம். அதுவும், விமான நிலையத்தில் அவ்தார் சிங் வாந்தி எடுப்பதை கவனிப்பதா, வெள்ளைக் காரன் விஞ்ஞானியைக் கடத்துவதைப் பார்ப்பதா இல்லை நம்ம நாயுடு இந்தியப் பாரம்பரியத்தை கடைபிடிப்பதை நொந்து கொள்வதா எனத் தெரியாமல் காட்சியாடு சேர்ந்து ஒரு சுத்து சுத்துறோம். எல்லோருமே கமல் ஆனதால் இப்படி தொடர முடியாமல் தவிக்கிறோம்னு நினைக்கிறேன். ஒருவேளை பர, பரப்பான திரைக் கதைன்னு ஆறுதல் பட்டாலும் இது போன்ற காட்சிகளில் முன

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக

இலந்தை திண்ணும் வாழ்வு

இனம்புரியா இச்சை ஒன்று, இலந்தைப் பழம் போல் என்னுள்! உரித்துத் தின்ன இயலாது; முற்றும் முழுங்கவும் முடியாது; மிச்சம் வைத்து பிறகொரு முறை திண்பதும் கூடாது! அடங்கி உறுத்தும் ஆவல், தினந்தோறும்.