Skip to main content

Posts

Showing posts from August, 2007

பின்னூட்டம் நீண்டால் பதிவாகும்!

லக்கி அவர்களின் பதிவு க்கு பின்னூட்டம் இட தட்டிய போது மிகவும் நீண்டு விட்டது. அதனால் இப்படி ஒரு பதிவு. என் கொல்டி நண்பன் அரவம் என்பதற்கு அரண்டு போக வைக்கும் கதை ஒன்று சொன்னான். இராவணனை வீழ்த்தி திரும்பும் வழியில் புஷ்பக விமானத்தில் இருந்த வானரங்கள் ஆரவாரத்துடன் இருந்தன. அனுமார் வந்து கண்டித்த போது 'அரவம், அரவம்'னு (தெலுங்கில் அரவம் என்றால் கத்த மாட்டோம்னு பொருள்) சொன்னாங்களாம். சில தடவைக்குப் பிறகு அனுமார் கடுப்பாகி எல்லோரையும் தூக்கி கீழே போட்டுட்டாராம். அவங்க விழுந்த இடம் தமிழ்நாடு. அதனால தான் தமிழ் பேசுறவங்களை அரவம்னு சொல்றாங்க. அப்படி பாத்தா நீங்கள்லாம் குரங்குன்னு சிரிச்சான். 'அதெப்படி அரவம், அரவம்னு தெலுங்குல கத்தினவுங்க தமிழ் நாட்டைச் சேர்ந்தவுங்களா இருக்க முடியும்? புலவர் குழந்தை சொன்ன மாதிரி திராவிடனான இராவணனை தோக்கடிச்சவுங்கன்ற கடுப்புல கீழ விழுந்தவுங்களை துரத்தி அடிச்சுட்டாங்க தமிழ்நாட்டு மக்கள். அவங்கலாம் திருப்பதிக்கு அப்பால ஓடிப்போயிட்டாங்கன்னு' சொன்னேன். அப்ப நண்பனின் முகம் நான் சொன்னதை உறுதிப்படுத்துவது போல இருந்தது.

எங்கும் இந்தியா

அண்மைக் காலமாக வெளிவரும் செய்திகள் மனதுக்கு உவகையூட்டுவதாக உள்ளது. இந்தியர்கள் மிகவும் வேண்டப்பட்டவர்களாக பார்க்கப்படுகின்றனர். வெளி நாடுகளில் இந்தியப் தயாரிப்புகள் மீது வாங்குவாரின் நம்பிக்கை கூடியுள்ளது. இது எல்லாவற்றையும் விட, அனைவரும் நம்மை நண்பர்களாகத் தான் பார்க்கின்றனர். ஒரு பக்கம் பிரேசில், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் இணைந்து ஐ.நாவில் நிரந்தர உறுப்பு நாடாக முயற்சித்து வருகின்றன. அடுத்து பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா தங்களை BRIC நாடுகள் என அழைந்துக் கொள்கின்றனர். ஒத்துழைக்க முனைகின்றனர். அமெரிக்கா ஒரு படி மேலே சென்று இந்தியாவுடன் (மட்டும்) அணு ஆயுத ஒப்பந்தம் செய்து கொள்ள துடிக்கிறது. இந்த வாரம் இந்தியா வந்த ஜப்பான் தலைவர் (பிரதமரை என்னவென்று அழைப்பது?) அபே இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுடனான வணிகம் 500 கோடியை எட்டும் என்கிறார். அத்துடன், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஒரு வணிகக் கூட்டமைப்பை ஏற்படுத்த அழைப்பு விடுத்தார். இப்படி பல நாடுகளின் போக்கு அமைந்ததற்கு கடந்த பத்து - பதினைந்து ஆண்டு நிகழ்வுகள் முக்கிய காரணிகளாக அமைந்தன. 1. திறந்த பொருளாதார கொள்கை. பிற நாட்டினர் நம் மீத

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்....

இரு மாதங்களுக்கு முன் பள்ளிக்கூடம் படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். ஆனால் இந்த பதிவு படத்தைப் பற்றியது அல்ல. (இன்னும் படம் பார்க்கவில்லை) சில காட்சிகளே என்னை உலுக்க போதுமானதாக இருந்தது. உண்மையில் 'முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சரி'ன் தொடர்ச்சி அது. என் பள்ளிகளையும், எனக்கு கற்றுவித்த ஆசிரியர்களையும் சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நின்றது. ஆனால் மனதிற்குள் ஏகப்பட்ட கேள்விகள். என்னை நினைவில் வைத்திருப்பார்களா? திடீரென்று எப்படி பார்ப்பது? திரைப்படத்தை எதிர்மறையாக உரைத்தவர்களிடம் ஒரு திரைப்படத்தின் உந்துதலால் வந்தேன் எனக்கூறினால் மலிவாக இருக்காதா? பரிசு என்ன வாங்கிச் செல்வது? ஒருவேளை, பள்ளிக்கு நிதி வழங்க வேண்டுமோ? இல்லை, விரிவாக்கத் திட்டத்துக்கு உதவ வேண்டுமா? இன்னும் பல தத்துப்பித்தான கேள்விகள் ஓடின. இத்தனை தயக்கத்தையும் தாண்டி நினைவுகளை தேடிச் செல்வேனா? செடியை வளர்த்தவர்கள் முன் மரமாய் நிற்க ஏன் தயக்கம்? பதில் தெரியும். ஒப்புக்கொள்ளத்தான் தயக்கம். முதலில் நாளை எழுதுவதாக கூறி பாதியில் விட்ட பதிவுகளை நிறைவு செய்ய வேண்டும். உங்கள் நினைவுகளை மேலும் உரச செல்வேந்திரனைய