லக்கி அவர்களின் பதிவு க்கு பின்னூட்டம் இட தட்டிய போது மிகவும் நீண்டு விட்டது. அதனால் இப்படி ஒரு பதிவு. என் கொல்டி நண்பன் அரவம் என்பதற்கு அரண்டு போக வைக்கும் கதை ஒன்று சொன்னான். இராவணனை வீழ்த்தி திரும்பும் வழியில் புஷ்பக விமானத்தில் இருந்த வானரங்கள் ஆரவாரத்துடன் இருந்தன. அனுமார் வந்து கண்டித்த போது 'அரவம், அரவம்'னு (தெலுங்கில் அரவம் என்றால் கத்த மாட்டோம்னு பொருள்) சொன்னாங்களாம். சில தடவைக்குப் பிறகு அனுமார் கடுப்பாகி எல்லோரையும் தூக்கி கீழே போட்டுட்டாராம். அவங்க விழுந்த இடம் தமிழ்நாடு. அதனால தான் தமிழ் பேசுறவங்களை அரவம்னு சொல்றாங்க. அப்படி பாத்தா நீங்கள்லாம் குரங்குன்னு சிரிச்சான். 'அதெப்படி அரவம், அரவம்னு தெலுங்குல கத்தினவுங்க தமிழ் நாட்டைச் சேர்ந்தவுங்களா இருக்க முடியும்? புலவர் குழந்தை சொன்ன மாதிரி திராவிடனான இராவணனை தோக்கடிச்சவுங்கன்ற கடுப்புல கீழ விழுந்தவுங்களை துரத்தி அடிச்சுட்டாங்க தமிழ்நாட்டு மக்கள். அவங்கலாம் திருப்பதிக்கு அப்பால ஓடிப்போயிட்டாங்கன்னு' சொன்னேன். அப்ப நண்பனின் முகம் நான் சொன்னதை உறுதிப்படுத்துவது போல இருந்தது.