Skip to main content

இந்து மதத்தின் ஒப்பற்ற தத்துவம்!

ஒன்றுமில்லை!

Comments

பதிவெல்லாம் படிச்சேன்.. நல்லா இருக்கே உங்கள் எழுத்துகள்.

//வரும் ஞாயிற்றுக்கிழமை (15-06-08) அன்று சென்னை எல்டாம்ஸ் ரோடு பார்வதி மினி ஹாலில் தமிழ்மண நிர்வாகிகளோடு நேருக்கு நேர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.// நம்ம லக்கி லுக் இல்லீன்னா பாலபாரதி பிளாக்குக்கு போய் உங்க பிரச்சினைய போட்டு வைங்க. அவங்க கேட்டு பதில் தருவாங்க..

தொடர்ந்து எழுதுங்க.
Siva Siva to me
show details 6:13 PM (25 minutes ago) Reply


அவர் இன்னும் பல வெண்பாக்களைப் படித்தால் அவரது எழுத்து இன்னும் சிறப்பாக அமையும்.

ஒவ்வொரு அடிக்குள்ளும் மோனை இருக்கவேண்டும். 1-3 சீர்களில் இருந்தால் சிறக்கும்.
------------------
கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்;
கள்ளம் நிறைந்தார் வலியனை வெல்லும்
தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான்
'கருமப் பழியார் உடைத்து?'

வெண்பாவில் பொதுவாக இரண்டு வகை. - இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா. 4 அடி வெண்பாக்கள் இவ்விரண்டுள் ஒன்றாகும்.

4 அடிகளும் ஒரே எதுகை அமைவது ஒன்று.
1,2 அடிகள், 2ம் அடியின் 4வது சீர் - இவை ஒரு எதுகை பெற்றும், 3,4 அடிகள் வேறு எதுகை பெற்றும் அமைவது இன்னொரு வகை.

'வெல்லும்' என்பதைக் 'கள்ளம்', 'கொள்லை' என்பவற்றோடு சேர்த்து இன எதுகை என்று கொள்ளலாம். (அதாவது எல்லாம், ல்,ள், போல இடையின எழுத்துகாளால் அமைந்துள்ளது). ஆனால் அது அவ்வளவு சிறப்பு அன்று.
------
அல்லது ஆற்றுவான் ஈட்டும்பழி ஒப்புவர்
இல்லை உவனிடம், உண்மையிது! - பொல்லாமை
நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன்
இங்கனம் இல்வாழ்வு துறந்து.



குற்றியலுகரப் புணர்ச்சியில் கவனம் தேவை.
கனிச்சீர் வரக்க்கூடாது.
வெண்டளை கட்டாயம் இருக்க வேண்டும்.

"இங்கனம் இல்வாழ்வு துறந்து" என்பதை
'இங்ஙனம்இல் வாழ்வு துறந்து' என்று பிரித்தால் வெண்டளை சரியாக இருக்கும்.


----------
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

திரு முகவை மைந்தன், என் நண்பருக்கு உங்கள் கவிதையை அனுப்பினேன். சிறந்த ஆசுகவி ஆன அவரின் பதில் இது. உங்களுக்கு ஏதானும் சந்தேகம் இருந்தால் அவரின் ஐடியைக் கொடுக்கலாமா எனக் கேட்டு வாங்கித் தருகின்றேன். இதை வெளியிடுவதும், வெளியிடாததும் உங்கள் விருப்பைப் பொறுத்தது. மிக்க நன்றி, உங்கள் பின்னூட்டத்துக்கும், வரவுக்கும், தொடர்ந்து பின்னூட்டங்களை முடிந்த போது அளிக்கவும். நன்றி.
ஆஹா, கமெண்ட் மாடரேஷன் இல்லையா? அதைக் கவனிக்கலையே???? :(((((((
பரிசல்காரன், வருகைக்கு நன்றி.

//நம்ம லக்கி லுக் இல்லீன்னா பாலபாரதி பிளாக்குக்கு போய் உங்க பிரச்சினைய போட்டு வைங்க. அவங்க கேட்டு பதில் தருவாங்க.. //

இரண்டாவது விண்ணப்பம் தமிழ்மணத்தின் ஒப்புதலைப் பெற்று என் பதிவுகள் அங்கே தெரிகின்றன. உதவிக்கு நன்றி. பதிவுகளை தொடர்ந்து வாசியுங்கள்.

கீதாம்மா, வழிகாட்டுதலுக்கு நன்றி. சுட்டி தந்து என் பதிவில் வெண்பாக்களை வெளியிடுகிறேன். அவ்வப்போது சரி பாருங்கள்.

ஜெகதீசன், இங்கயும் புன்னகை தானா? வருகைக்கு நன்றி.
Anonymous said…
அந்த ஒன்றுமில்லையில்,

ஒன்றுமில்லை என்று உணர்பவரே

அறியார், தெறியார், வெறியார்.

உங்களை அல்ல:)

Popular posts from this blog

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக...

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி...

தன் முயற்சியில் சற்றும் தளராத அளசிங்கப் பெருமாள் (அல்லது) இளைஞர் இருவர் இந்திய சிந்தனையை உலகுக்கு அறிவித்த கதை

இரண்டு இளைஞர்களில் விவகானந்தரை எல்லாருக்கும் தெரியும். இந்தக் கட்டுரையில் நாம் முதன்மைப் படுத்தப் போவது இன்னொரு இளைஞரான அளசிங்கப் பெருமாளை. அளசிங்கப் பெருமாள் தந்தை அன்றைய சென்னை மாகாணத்தின் சிக்கமகளூரில் இருந்து வேலைக்காக சென்னை வந்தவர். இங்கேயே படித்து முடித்த அளசிங்கப்பெருமாள் கும்பகோணத்தில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்து சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரானார். ஆன்மிகத்தில் நாட்டமுடையவராக இருந்த அளசிங்கப் பெருமாள் அமெரிக்காவில் அனைத்து மதங்களுக்கான மாநாடு ஒன்று நடக்க இருப்பதை தன் கிருத்துவக் கல்லூரி தொடர்புகள் வழியாக அறிந்தார். இந்து சமயம் சார்பாக உரையாற்றப் பலர் தயாராக இருந்த போதும் அப்போதிருந்த மதக் கட்டுப்பாடுகள் காரணமாகக் கடல் தாண்டிச் செல்ல முன் வரவில்லை. அவருடைய தாய்மாமா ஒருவர் வைஷ்ணவம் குறித்த குறிப்புகளைத் தந்து யாரையாவது அமெரிக்க மாநாட்டில் வாசிக்கச் சொன்னார். அந்த நேரத்தில் தன் இந்தியப் பயணத்தைக் கன்னியாகுமரியில் முடித்து விட்டு சென்னை திரும்பியிருந்தார் விவேகானந்தர். விவேகானந்தரைப் பற்றி அறிந்திருந்த அளசிங்கப் பெருமாள் அவரிடம் தன்னிடமிருந்த குறி...