ஒன்றுமில்லை!
பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில் நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து
Comments
//வரும் ஞாயிற்றுக்கிழமை (15-06-08) அன்று சென்னை எல்டாம்ஸ் ரோடு பார்வதி மினி ஹாலில் தமிழ்மண நிர்வாகிகளோடு நேருக்கு நேர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.// நம்ம லக்கி லுக் இல்லீன்னா பாலபாரதி பிளாக்குக்கு போய் உங்க பிரச்சினைய போட்டு வைங்க. அவங்க கேட்டு பதில் தருவாங்க..
தொடர்ந்து எழுதுங்க.
show details 6:13 PM (25 minutes ago) Reply
அவர் இன்னும் பல வெண்பாக்களைப் படித்தால் அவரது எழுத்து இன்னும் சிறப்பாக அமையும்.
ஒவ்வொரு அடிக்குள்ளும் மோனை இருக்கவேண்டும். 1-3 சீர்களில் இருந்தால் சிறக்கும்.
------------------
கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்;
கள்ளம் நிறைந்தார் வலியனை வெல்லும்
தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான்
'கருமப் பழியார் உடைத்து?'
வெண்பாவில் பொதுவாக இரண்டு வகை. - இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா. 4 அடி வெண்பாக்கள் இவ்விரண்டுள் ஒன்றாகும்.
4 அடிகளும் ஒரே எதுகை அமைவது ஒன்று.
1,2 அடிகள், 2ம் அடியின் 4வது சீர் - இவை ஒரு எதுகை பெற்றும், 3,4 அடிகள் வேறு எதுகை பெற்றும் அமைவது இன்னொரு வகை.
'வெல்லும்' என்பதைக் 'கள்ளம்', 'கொள்லை' என்பவற்றோடு சேர்த்து இன எதுகை என்று கொள்ளலாம். (அதாவது எல்லாம், ல்,ள், போல இடையின எழுத்துகாளால் அமைந்துள்ளது). ஆனால் அது அவ்வளவு சிறப்பு அன்று.
------
அல்லது ஆற்றுவான் ஈட்டும்பழி ஒப்புவர்
இல்லை உவனிடம், உண்மையிது! - பொல்லாமை
நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன்
இங்கனம் இல்வாழ்வு துறந்து.
குற்றியலுகரப் புணர்ச்சியில் கவனம் தேவை.
கனிச்சீர் வரக்க்கூடாது.
வெண்டளை கட்டாயம் இருக்க வேண்டும்.
"இங்கனம் இல்வாழ்வு துறந்து" என்பதை
'இங்ஙனம்இல் வாழ்வு துறந்து' என்று பிரித்தால் வெண்டளை சரியாக இருக்கும்.
----------
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
திரு முகவை மைந்தன், என் நண்பருக்கு உங்கள் கவிதையை அனுப்பினேன். சிறந்த ஆசுகவி ஆன அவரின் பதில் இது. உங்களுக்கு ஏதானும் சந்தேகம் இருந்தால் அவரின் ஐடியைக் கொடுக்கலாமா எனக் கேட்டு வாங்கித் தருகின்றேன். இதை வெளியிடுவதும், வெளியிடாததும் உங்கள் விருப்பைப் பொறுத்தது. மிக்க நன்றி, உங்கள் பின்னூட்டத்துக்கும், வரவுக்கும், தொடர்ந்து பின்னூட்டங்களை முடிந்த போது அளிக்கவும். நன்றி.
//நம்ம லக்கி லுக் இல்லீன்னா பாலபாரதி பிளாக்குக்கு போய் உங்க பிரச்சினைய போட்டு வைங்க. அவங்க கேட்டு பதில் தருவாங்க.. //
இரண்டாவது விண்ணப்பம் தமிழ்மணத்தின் ஒப்புதலைப் பெற்று என் பதிவுகள் அங்கே தெரிகின்றன. உதவிக்கு நன்றி. பதிவுகளை தொடர்ந்து வாசியுங்கள்.
கீதாம்மா, வழிகாட்டுதலுக்கு நன்றி. சுட்டி தந்து என் பதிவில் வெண்பாக்களை வெளியிடுகிறேன். அவ்வப்போது சரி பாருங்கள்.
ஜெகதீசன், இங்கயும் புன்னகை தானா? வருகைக்கு நன்றி.
ஒன்றுமில்லை என்று உணர்பவரே
அறியார், தெறியார், வெறியார்.
உங்களை அல்ல:)