Skip to main content

தமிழ்மணம் மறுப்பு!

எனக்குத் தோன்றியதை பிறருடன் பகிர்ந்து கொள்ள வலைபதிவினைத் தொடங்கினேன். சரி, கருத்துக்களை பட்டை தீட்டி, ஊக்கம் பெற மற்றவர்களின் பின்னூட்டம் பெரிதும் உதவுமேன்னு நினைச்சு தமிழ் மணத்தில் இணைக்க விண்ணப்பித்தேன். தானியங்கி முறை என் பதிவின் தமிழ் எழுத்துக்களின் அளவை ஐயப்பட்டது. மின்னஞ்சலோ, மறுப்புக் கடிதம் மட்டுமே பெற்றது.

காரணத்தை விளக்கக் கோரி எழுதிய மடல் சேர்ந்ததா எனத் தெரியவில்லை. எனவே இந்தப் பதிவில் ஒரு பதிவருக்கு சரிவர பதில் தராத தமிழ்மணத்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவிட்டு யாராவது இந்தப் பக்கமா வந்தீங்கன்னா வழி சொல்லிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை, ஒரு நல்ல எழுத்தாளர் உருவாவது தமிழ்மணத்தால் தாமதமானது என (என்னைப் போலவே) நினைத்தால் உங்கள் கண்டனங்களையும் பதிந்து செல்லுங்கள்.

Comments

Anonymous said…
நானும் பல தடலை முயற்சித்தும் சேர முடியவில்லை, நம்ப ஊருக்காரய்ங்களை எல்லாம் சேக்க மாட்டாங்களோ?
வருகைக்கு நன்றி. நம் ஊர்க்காரர்கள் நிறைய பேர் பதிவு எழுதுகிறார்கள். தமிழ் மணத்திலும் இருக்கிறார்கள். தமிழ் மணத்தின் சேர்க்கை முறையில் ஏதோ தவறு இருக்கிறது. எப்ப இந்தப் பக்கம் திரும்புறாங்கன்னு பார்க்கலாம். அது வரை தேதி மாற்றி முதல் இடுகையாகவே வைத்துக் கொள்ளப் போகிறேன்.
தேன்கூட்டில் தெரிகிறது, tamil.net லும் வருகிறது. google தமிழ்மணத்திலும் இருப்பதாக காட்டியது. எனக்கு மறுப்புக் கடிதம் அனுப்பி விட்டு இணைத்து விட்டார்களோ என்னமோ? இந்த பின்னூட்டம் இணைப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

அக்டோபர் மாத போட்டிக்கு

நேரமில்லாது போனதால் இம்முறை என் மனைவி எடுத்த படங்கள். வெண்பா போட்டு அப்புறம் விளக்குறேன். இந்த போட்டிக்காக மட்டுந்தான் என்னோட வலைப்பூ இப்ப இருக்கு போல.

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி