பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில் நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து
Comments
அன்புள்ள பெயரிலி, நீங்கள் சொல்வது உண்மை தான். இதை வாசிப்பவனுக்கு பாடலின் நேர்மை குறித்த ஐயம் எழும்பும். கருத்துக்குத் தகுந்த சொல் விளையாட்டு பாடலுக்கு இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரு சமூக அவலத்துக்கு எழுதும் பாடலில் கருத்து மேலோங்கி இருக்குமாறு எழுத வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணமாக இருக்கிறது.
ஆனால், நான் இன்னும் மாணவன்ற நிலையைத் தாண்டலை. என்னுடைய தளத்தில் நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான். வருங்காலத்தில் நல்ல பாடல்கள் எழுத முனைகிறேன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.