இன்றைய நிகழ்ச்சிக்கு உதவித்தொகை (உபயம்) வழங்கியவர் பேச்சாளரின் ஆசிரியரின் பிள்ளை. அந்த ஆசிரியர் அடிக்க மாட்டார் ஆனால் நுள்ளுவார்னு குறிப்பிட்டர். நுள்ளுவார்னா கிள்ளுவார்னு பொருள். இணையத்தில் தேடினால் ஈழத் தமிழர்களின் எழுத்துக்கள் (மட்டுந்) தான் கிடைக்கிறது :-)
சைவக் கோயில்களின் கோபுரம் எவ்வளவு தொலைவு வரைத் தெரிகிறதோ, அந்தத் தொலைவை ஆரமாகக் கொண்டு வரையப் படும் வட்டம் கைலாசத்துக்கு ஈடானதாம். இப்பத் தான் தெரியுது ஏன் கோபுரம் உயரமா இருக்குன்னு. அதுக்குன்னு வலி மிஞ்சியும் கோபுரம் கட்ட முடியாது. ஏன்னு பின்னாடி சொல்றேன். ஆனால் இது போன்ற நம்பிக்கைகள் கோயில்கள் எண்ணிக்கை பெருக உதவி இருக்கலாம்.
இறைவனின் தோற்றரவுகள் எல்லாமே எதிரியைக் கொல்வதாகத் தான் கதைகள் இருக்கும். ஆனால் கந்தன் எதிரியின் தீய எண்ணங்களால் வளர்த்துக் கொண்ட வல்லமையை ஒடுக்கி எளியவராய் ஏற்றுக் கொள்பவனாம். தீய எண்ணங்களை இருள் என்றும் அகற்றும் ஆயுதங்களை ஒளி என்றும் உருவகித்தார். அதனால் தான் கந்தனின் ஆயுதங்களால் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் வேலாயுதம், தண்டாயுதபாணி,செவ்வேல், கதிர்வேல் என்று. இருளில் இருந்து காக்கும் கலன்கள் இல்லையா! வேற எந்தக் கடவுளின் ஆயுதங்களாலும் பெயர் வைப்பதிலை ஏன்னா இருள் இல்லாத மனிதனே இல்லை, அப்புறம் எப்படி இருள் கொண்ட வீட்டை இடிக்கும் ஆயுதத்தால் பெயர் வைப்பது :-)
தட்சன் என்பவன் இருள் நிறைந்த உள்ளம் கொண்ட பிரமனின் மகன். அவன் சிவனிடம் தன் மகளை மணமுடித்துக் கொள்ள வேண்டிய அருள் பெற்றவன். அவனின் மற்ற மகள்களை (27 பேர்) நிலாவுக்கு அனைவரையும் ஒரு சேர பார்த்துக் கொள்ள வேண்டும்னு மணமுடித்துக் கொடுத்தானாம். நிலாவோ இருவரிடம் மட்டும் அன்பாய் இருந்ததால் தட்சன் நிலவை தேய்ந்து அழிய திட்டி விட்டான். நொந்து போய் சிவனிடம் பணிந்த நிலவை வளரும் படி அருள் தந்ததினால் வளர்ந்து, தேய்கிறதாம் நிலா! இந்தக் கதை எதுக்குன்னா மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ளா விட்டால் வாழ்வில் இருள் சூழ்ந்து விடும் என்ற நீதியை உணர்த்தவாம். அப்படின்னா, 27 பேரை மணந்த கொடுமையை எங்கு போய்ச் சொல்வது. பேச்சாளர் நாம் சடங்குகளை, கதைகளை அதன் பொருள் தெரியாது பின் பற்றுகிறோம்னு வருத்தப் பட்டார்.
தட்சன் பிரமனிடம் இரண்டு கேள்விகள் கேட்டான். உலகில் பெரியது எது? பெரியவர் யார்? பிறருக்கு பயன் தரும் வகையில் ஈட்டும் செல்வம் பெரியது, அத்தகைய செல்வம் உடையவர்கள் பெரியவர் என்றாராம் பிரம்மா. நல்ல சிந்தனையாகப் பட்டது. இதனுடன் அவர் சொன்ன இன்னொரு விளக்கம் தலைப்புக்குப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் பட்டது.
மால், அயன் இருவரில் பெரியவர் யார்னு தெரிஞ்சிக்கிறதுக்காக சிவன் இருவரையும் அடிமுடி கண்டு வரப் பணித்தார் இல்லையா? பிரமனின் நாவில் இருப்பவள் கல்விக் கடவுள். இந்தக் கல்வி அறிவின் துணையோடு பிரமனால் சிவனின் முடியைக் காண முடியவில்லை. கல்வி வெறுமனே குறுக்கு வழியைத் தான் காட்டியது :-)
பெருமாளோ செல்வக் கடவுளை நெஞ்சில் நிறுத்தியவர். அவரால் செல்வத்தின் துணையோடு அடியைக் காண முடியவில்லை, குறுக்கு வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த இருவரும் தம்மில் பெரியவர் யார் என்ற அகந்தை இருள் கொண்டதால் கல்வியும், செல்வமும் துணை செய்யவில்லை. அந்த இருளை அகற்றும் விளக்காக, ஓங்கி உயர்ந்தான் ஒளிப் பிழம்பாக அண்ணாமலை. அந்த ஒளி இருவரின் இருளையும் அகற்ற உதவியது. உடன் தாள் பணிந்தார்கள்.
இன்னொரு தகவலும் சொன்னார். இறைவனைக் காண நாமெல்லாம் கோவிலுக்குப் போறோம், இறைவன் மூன்று விதங்களில் கோவிலை விட்டு நம்மைத் தேடி வருவார். வேட்டைக்குப் போதல், சப்பரத்தில் வலம் வருதல், தேர் ஊர்வலம். இதில் சப்பரம் என்பது சக கோபுரம்னு சொன்னார். அதனால் தான் சப்பரம் கோவில் கோபுரத்தின் உயரத்துக்கு இணையாக இருக்கணுமாம். இப்பப் புரியுதா ஏன் கோபுரம் ரொம்ப உயரமா வைக்கிறதில்லைனு :-) கைலாச எல்லை விரிவடைஞ்சாலும் தூக்கிட்டுப் போக வலு வேணுமே!! இந்தத் தேர் கருவறை உயரத்துக்கு இருக்கணுமாம். ஏன் இந்த மாதிரின்னு யாராவது விளக்குங்க. இன்றைய சொற்பொழிவு பிடித்தே இருந்தது.
சைவக் கோயில்களின் கோபுரம் எவ்வளவு தொலைவு வரைத் தெரிகிறதோ, அந்தத் தொலைவை ஆரமாகக் கொண்டு வரையப் படும் வட்டம் கைலாசத்துக்கு ஈடானதாம். இப்பத் தான் தெரியுது ஏன் கோபுரம் உயரமா இருக்குன்னு. அதுக்குன்னு வலி மிஞ்சியும் கோபுரம் கட்ட முடியாது. ஏன்னு பின்னாடி சொல்றேன். ஆனால் இது போன்ற நம்பிக்கைகள் கோயில்கள் எண்ணிக்கை பெருக உதவி இருக்கலாம்.
இறைவனின் தோற்றரவுகள் எல்லாமே எதிரியைக் கொல்வதாகத் தான் கதைகள் இருக்கும். ஆனால் கந்தன் எதிரியின் தீய எண்ணங்களால் வளர்த்துக் கொண்ட வல்லமையை ஒடுக்கி எளியவராய் ஏற்றுக் கொள்பவனாம். தீய எண்ணங்களை இருள் என்றும் அகற்றும் ஆயுதங்களை ஒளி என்றும் உருவகித்தார். அதனால் தான் கந்தனின் ஆயுதங்களால் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் வேலாயுதம், தண்டாயுதபாணி,செவ்வேல், கதிர்வேல் என்று. இருளில் இருந்து காக்கும் கலன்கள் இல்லையா! வேற எந்தக் கடவுளின் ஆயுதங்களாலும் பெயர் வைப்பதிலை ஏன்னா இருள் இல்லாத மனிதனே இல்லை, அப்புறம் எப்படி இருள் கொண்ட வீட்டை இடிக்கும் ஆயுதத்தால் பெயர் வைப்பது :-)
தட்சன் என்பவன் இருள் நிறைந்த உள்ளம் கொண்ட பிரமனின் மகன். அவன் சிவனிடம் தன் மகளை மணமுடித்துக் கொள்ள வேண்டிய அருள் பெற்றவன். அவனின் மற்ற மகள்களை (27 பேர்) நிலாவுக்கு அனைவரையும் ஒரு சேர பார்த்துக் கொள்ள வேண்டும்னு மணமுடித்துக் கொடுத்தானாம். நிலாவோ இருவரிடம் மட்டும் அன்பாய் இருந்ததால் தட்சன் நிலவை தேய்ந்து அழிய திட்டி விட்டான். நொந்து போய் சிவனிடம் பணிந்த நிலவை வளரும் படி அருள் தந்ததினால் வளர்ந்து, தேய்கிறதாம் நிலா! இந்தக் கதை எதுக்குன்னா மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ளா விட்டால் வாழ்வில் இருள் சூழ்ந்து விடும் என்ற நீதியை உணர்த்தவாம். அப்படின்னா, 27 பேரை மணந்த கொடுமையை எங்கு போய்ச் சொல்வது. பேச்சாளர் நாம் சடங்குகளை, கதைகளை அதன் பொருள் தெரியாது பின் பற்றுகிறோம்னு வருத்தப் பட்டார்.
தட்சன் பிரமனிடம் இரண்டு கேள்விகள் கேட்டான். உலகில் பெரியது எது? பெரியவர் யார்? பிறருக்கு பயன் தரும் வகையில் ஈட்டும் செல்வம் பெரியது, அத்தகைய செல்வம் உடையவர்கள் பெரியவர் என்றாராம் பிரம்மா. நல்ல சிந்தனையாகப் பட்டது. இதனுடன் அவர் சொன்ன இன்னொரு விளக்கம் தலைப்புக்குப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் பட்டது.
மால், அயன் இருவரில் பெரியவர் யார்னு தெரிஞ்சிக்கிறதுக்காக சிவன் இருவரையும் அடிமுடி கண்டு வரப் பணித்தார் இல்லையா? பிரமனின் நாவில் இருப்பவள் கல்விக் கடவுள். இந்தக் கல்வி அறிவின் துணையோடு பிரமனால் சிவனின் முடியைக் காண முடியவில்லை. கல்வி வெறுமனே குறுக்கு வழியைத் தான் காட்டியது :-)
பெருமாளோ செல்வக் கடவுளை நெஞ்சில் நிறுத்தியவர். அவரால் செல்வத்தின் துணையோடு அடியைக் காண முடியவில்லை, குறுக்கு வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த இருவரும் தம்மில் பெரியவர் யார் என்ற அகந்தை இருள் கொண்டதால் கல்வியும், செல்வமும் துணை செய்யவில்லை. அந்த இருளை அகற்றும் விளக்காக, ஓங்கி உயர்ந்தான் ஒளிப் பிழம்பாக அண்ணாமலை. அந்த ஒளி இருவரின் இருளையும் அகற்ற உதவியது. உடன் தாள் பணிந்தார்கள்.
இன்னொரு தகவலும் சொன்னார். இறைவனைக் காண நாமெல்லாம் கோவிலுக்குப் போறோம், இறைவன் மூன்று விதங்களில் கோவிலை விட்டு நம்மைத் தேடி வருவார். வேட்டைக்குப் போதல், சப்பரத்தில் வலம் வருதல், தேர் ஊர்வலம். இதில் சப்பரம் என்பது சக கோபுரம்னு சொன்னார். அதனால் தான் சப்பரம் கோவில் கோபுரத்தின் உயரத்துக்கு இணையாக இருக்கணுமாம். இப்பப் புரியுதா ஏன் கோபுரம் ரொம்ப உயரமா வைக்கிறதில்லைனு :-) கைலாச எல்லை விரிவடைஞ்சாலும் தூக்கிட்டுப் போக வலு வேணுமே!! இந்தத் தேர் கருவறை உயரத்துக்கு இருக்கணுமாம். ஏன் இந்த மாதிரின்னு யாராவது விளக்குங்க. இன்றைய சொற்பொழிவு பிடித்தே இருந்தது.
Comments
இந்தச் சொல்லை எந்த அகராதியிலும் காணவில்லை. தமிழ்ச்சொற்களையே தொகுக்காமல் பிற மொழிகளில் கடன் வாங்குவது கொடுமை.
நேற்று அவரோடு தனிமையில் உரையாடினோமே :-) வருகைக்கு நன்றி.