Skip to main content

சச்டி உரை - இரண்டாம் நாள் - இருளும் ஒளியும்

இன்றைய நிகழ்ச்சிக்கு உதவித்தொகை (உபயம்) வழங்கியவர் பேச்சாளரின் ஆசிரியரின் பிள்ளை. அந்த ஆசிரியர் அடிக்க மாட்டார் ஆனால் நுள்ளுவார்னு குறிப்பிட்டர். நுள்ளுவார்னா கிள்ளுவார்னு பொருள். இணையத்தில் தேடினால் ஈழத் தமிழர்களின் எழுத்துக்கள் (மட்டுந்) தான் கிடைக்கிறது :-)

சைவக் கோயில்களின் கோபுரம் எவ்வளவு தொலைவு வரைத் தெரிகிறதோ, அந்தத் தொலைவை ஆரமாகக் கொண்டு வரையப் படும் வட்டம் கைலாசத்துக்கு ஈடானதாம். இப்பத் தான் தெரியுது ஏன் கோபுரம் உயரமா இருக்குன்னு. அதுக்குன்னு வலி மிஞ்சியும் கோபுரம் கட்ட முடியாது. ஏன்னு பின்னாடி சொல்றேன். ஆனால் இது போன்ற நம்பிக்கைகள் கோயில்கள் எண்ணிக்கை பெருக உதவி இருக்கலாம்.

இறைவனின் தோற்றரவுகள் எல்லாமே எதிரியைக் கொல்வதாகத் தான் கதைகள் இருக்கும். ஆனால் கந்தன் எதிரியின் தீய எண்ணங்களால் வளர்த்துக் கொண்ட வல்லமையை ஒடுக்கி எளியவராய் ஏற்றுக் கொள்பவனாம். தீய எண்ணங்களை இருள் என்றும் அகற்றும் ஆயுதங்களை ஒளி என்றும் உருவகித்தார். அதனால் தான் கந்தனின் ஆயுதங்களால் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் வேலாயுதம், தண்டாயுதபாணி,செவ்வேல், கதிர்வேல் என்று. இருளில் இருந்து காக்கும் கலன்கள் இல்லையா! வேற எந்தக் கடவுளின் ஆயுதங்களாலும் பெயர் வைப்பதிலை ஏன்னா இருள் இல்லாத மனிதனே இல்லை, அப்புறம் எப்படி இருள் கொண்ட வீட்டை இடிக்கும் ஆயுதத்தால் பெயர் வைப்பது :-)

தட்சன் என்பவன் இருள் நிறைந்த உள்ளம் கொண்ட பிரமனின் மகன். அவன் சிவனிடம் தன் மகளை மணமுடித்துக் கொள்ள வேண்டிய அருள் பெற்றவன். அவனின் மற்ற மகள்களை (27 பேர்) நிலாவுக்கு அனைவரையும் ஒரு சேர பார்த்துக் கொள்ள வேண்டும்னு மணமுடித்துக் கொடுத்தானாம். நிலாவோ இருவரிடம் மட்டும் அன்பாய் இருந்ததால் தட்சன் நிலவை தேய்ந்து அழிய திட்டி விட்டான். நொந்து போய் சிவனிடம் பணிந்த நிலவை வளரும் படி அருள் தந்ததினால் வளர்ந்து, தேய்கிறதாம் நிலா! இந்தக் கதை எதுக்குன்னா மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ளா விட்டால் வாழ்வில் இருள் சூழ்ந்து விடும் என்ற நீதியை உணர்த்தவாம். அப்படின்னா, 27 பேரை மணந்த கொடுமையை எங்கு போய்ச் சொல்வது. பேச்சாளர் நாம் சடங்குகளை, கதைகளை அதன் பொருள் தெரியாது பின் பற்றுகிறோம்னு வருத்தப் பட்டார்.

தட்சன் பிரமனிடம் இரண்டு கேள்விகள் கேட்டான். உலகில் பெரியது எது? பெரியவர் யார்? பிறருக்கு பயன் தரும் வகையில் ஈட்டும் செல்வம் பெரியது, அத்தகைய செல்வம் உடையவர்கள் பெரியவர் என்றாராம் பிரம்மா. நல்ல சிந்தனையாகப் பட்டது. இதனுடன் அவர் சொன்ன இன்னொரு விளக்கம் தலைப்புக்குப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் பட்டது.

மால், அயன் இருவரில் பெரியவர் யார்னு தெரிஞ்சிக்கிறதுக்காக சிவன் இருவரையும் அடிமுடி கண்டு வரப் பணித்தார் இல்லையா? பிரமனின் நாவில் இருப்பவள் கல்விக் கடவுள். இந்தக் கல்வி அறிவின் துணையோடு பிரமனால் சிவனின் முடியைக் காண முடியவில்லை. கல்வி வெறுமனே குறுக்கு வழியைத் தான் காட்டியது :-)

பெருமாளோ செல்வக் கடவுளை நெஞ்சில் நிறுத்தியவர். அவரால் செல்வத்தின் துணையோடு அடியைக் காண முடியவில்லை, குறுக்கு வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த இருவரும் தம்மில் பெரியவர் யார் என்ற அகந்தை இருள் கொண்டதால் கல்வியும், செல்வமும் துணை செய்யவில்லை. அந்த இருளை அகற்றும் விளக்காக, ஓங்கி உயர்ந்தான் ஒளிப் பிழம்பாக அண்ணாமலை. அந்த ஒளி இருவரின் இருளையும் அகற்ற உதவியது. உடன் தாள் பணிந்தார்கள்.

இன்னொரு தகவலும் சொன்னார். இறைவனைக் காண நாமெல்லாம் கோவிலுக்குப் போறோம், இறைவன் மூன்று விதங்களில் கோவிலை விட்டு நம்மைத் தேடி வருவார். வேட்டைக்குப் போதல், சப்பரத்தில் வலம் வருதல், தேர் ஊர்வலம். இதில் சப்பரம் என்பது சக கோபுரம்னு சொன்னார். அதனால் தான் சப்பரம் கோவில் கோபுரத்தின் உயரத்துக்கு இணையாக இருக்கணுமாம். இப்பப் புரியுதா ஏன் கோபுரம் ரொம்ப உயரமா வைக்கிறதில்லைனு :-) கைலாச எல்லை விரிவடைஞ்சாலும் தூக்கிட்டுப் போக வலு வேணுமே!! இந்தத் தேர் கருவறை உயரத்துக்கு இருக்கணுமாம். ஏன் இந்த மாதிரின்னு யாராவது விளக்குங்க. இன்றைய சொற்பொழிவு பிடித்தே இருந்தது.

Comments

வாவ்...அப்படியே சொற்பொழிவு கேட்ட மாதிரியே இருக்கு..அருமையான தொகுப்பு முகவையாரே :-)
கொழுவல் என்ற சண்டையைக் குறிக்கும் சொல்லைப் பற்றியும் குறிப்பிட மறந்து விட்டேன். கொழுவல் என்பது வளைந்த கம்பைக் குறிக்கும். இரண்டு கொழுவல் கம்புகள் ஒன்றோடு ஒன்று கோர்த்தால் கொழுவல் தான். ஏதாவது ஒரு கொழுவல் நிமிர்ந்தால், விட்டுக் கொடுத்தால் அடுத்த கம்பு கொழுவிக் கொழுவி கொழுவல் தீர்ந்து தானும் நிமிர்ந்து விடும்.

இந்தச் சொல்லை எந்த அகராதியிலும் காணவில்லை. தமிழ்ச்சொற்களையே தொகுக்காமல் பிற மொழிகளில் கடன் வாங்குவது கொடுமை.

நேற்று அவரோடு தனிமையில் உரையாடினோமே :-) வருகைக்கு நன்றி.

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி