கடந்த காரிக்கிழமை நண்பர் பாண்டித்துரையும், அறிவுநிதியும் தயாரித்த (சென்னையில் முன்பே வெளியான) தனி என்ற குறும்பட வெளியீடு அமோக்கியோ நூலக வளாகத்தில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர் (100 பேர்ன்றது சிங்கைல பெரிய கூட்டந்தான்). இயக்கம் அய்யப்ப மாதவன், ஒளிப்பதிவு செழியன். செழியன் இந்த தனி குறும்பட வெளியீட்டு விழாவுக்காகவென்றே சிங்கை வந்திருந்தார்.
திருமதி சித்ரா ரமேஷ் கூட்டத்தை நெறிப் படுத்தினார். இவருக்கு அவைக்கூச்சம் என்பதே இல்லை. நம்மிடம் எப்படி உரையாடுவாரோ அதே மாதிரி மேடையில் பேசுவார். அப்ப இணைத் திரைப்படங்கள்னு (parallel cinema) ஒண்ணு தமிழ்ல இல்லவே இல்லைன்னு குறைபட்டுக் கொண்டார். அதனை இது போன்ற குறும்படங்களின் வரவு நிறைவாக்கும்னு சொன்னார். எனக்கு இணைத் திரைப்படம்னு ஒண்ணு இருக்குறதே அப்பத் தான் தெரியும்.
பின்னர் ஒரு குறும்பட அறிமுகம் காட்டப்பட்டது. தொடர்ந்து தனி குறும்படம் பற்றிய மதிப்புரை தேர்ந்தெடுத்த சிலரால் வழங்கப்ப்படது. தனி, தனிமை குறித்த வேறுபாடுகளும் பேசப்பட்டது. படத்தைப் பற்றிக் கிட்டத்தட்ட வெவ்வேறு விதமான பார்வைகள் பதியப் பட்டன. எனக்கோ குழப்பமாக இருந்தது. ஒரே படத்தைப் பார்த்தவர்கள் எப்படி வெவ்வேறு விதமாக அணுகினார்கள்னு புரியலை(அடுத்த பதிவுல என்னோட பார்வையச் சொல்றேன்).
இடையில் குறும்பட அடர்தட்டு விரும்புவோருக்காக 10 வெள்ளி நன்கொடை பெற்று வழங்கப்பட்டது. நூறு வட்டுகளாவது விற்றிருந்தால் தயாரிப்பாளர் கையை வலுப்படுத்தி இருக்கும். நானும் 5 வட்டுகள் பெற்றுக் கொண்டேன். வர முடியாதவர்களுக்காவும், ஊரில் கொண்டு போய் காட்டலாம்னு தான்.
பின்னர் நேரமின்மையால் மிகச்சுருக்கமான கலந்துரையாடல் செழியனுடன் நடந்தது. அதிலும் வழமையான கேள்விகள் தான். திரைப்படங்கள் ஆபாசமா இருக்கு, பாடல்கள் தரக்குறைவா இருக்கு.. இந்த மாதிரி. செழியன் 'படங்கள் வணிகம் சார்ந்தவை. நீங்க படங்களைத் தேர்ந்தெடுத்துப் பாருங்க. சில படங்களின் வெற்றியே நல்ல படங்களின் விழுக்காட்டைக் கூட்டும்'னு சொன்னார்.
பதிவர் குழலி குறும்படங்கள் என்றாலே அழுகையும் தனி மனித உணர்ச்சிகளும் மட்டுந்தான் முன்னிறுத்தப் படுவதேன்னு கேட்டார். அதற்கு முதல்ல வரக்கூடிய படங்கள் பெரும்பாலும் இப்படித்தான் ஒருமை சார்ந்ததா இருக்கும். பின்னாடி கலங்கித் தெளியும்னார்.
அடுத்த கேள்வியா இதழ்கள்ல சிற்றிலக்கிய வகை இருக்கும் போது அப்படி வணிகம் சாராத படங்கள் வருவதைத் தடுத்தது எதுன்னு கேட்டார். செழியன், அப்படி ஒரு வெற்றிடம் இருப்பது உண்மை தானென்றும் இது போன்ற மாற்றுத் திரைப்படங்கள் குறித்த விழிப்புணர்வு அந்த நிலையை மாற்றும்னு தான் நம்புவதாக்க் குறிப்பிட்டார்.
வழக்கம் போல் நூலக நிர்வாகம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர். இனிப்பும், வடையும், தேனீரும் இருந்தன ;-) கேசரிக்கு சட்னி தொட்டு தின்றேன். உடன் வந்த பதிவர்களும் இந்த சேர்க்கை நல்லா இருக்கிறதா சொன்னாங்க! கூட்டம் முடித்து கிளம்பினோம். எங்கன்னு அடுத்த இடுகைல பாப்போம்.
திருமதி சித்ரா ரமேஷ் கூட்டத்தை நெறிப் படுத்தினார். இவருக்கு அவைக்கூச்சம் என்பதே இல்லை. நம்மிடம் எப்படி உரையாடுவாரோ அதே மாதிரி மேடையில் பேசுவார். அப்ப இணைத் திரைப்படங்கள்னு (parallel cinema) ஒண்ணு தமிழ்ல இல்லவே இல்லைன்னு குறைபட்டுக் கொண்டார். அதனை இது போன்ற குறும்படங்களின் வரவு நிறைவாக்கும்னு சொன்னார். எனக்கு இணைத் திரைப்படம்னு ஒண்ணு இருக்குறதே அப்பத் தான் தெரியும்.
பின்னர் ஒரு குறும்பட அறிமுகம் காட்டப்பட்டது. தொடர்ந்து தனி குறும்படம் பற்றிய மதிப்புரை தேர்ந்தெடுத்த சிலரால் வழங்கப்ப்படது. தனி, தனிமை குறித்த வேறுபாடுகளும் பேசப்பட்டது. படத்தைப் பற்றிக் கிட்டத்தட்ட வெவ்வேறு விதமான பார்வைகள் பதியப் பட்டன. எனக்கோ குழப்பமாக இருந்தது. ஒரே படத்தைப் பார்த்தவர்கள் எப்படி வெவ்வேறு விதமாக அணுகினார்கள்னு புரியலை(அடுத்த பதிவுல என்னோட பார்வையச் சொல்றேன்).
இடையில் குறும்பட அடர்தட்டு விரும்புவோருக்காக 10 வெள்ளி நன்கொடை பெற்று வழங்கப்பட்டது. நூறு வட்டுகளாவது விற்றிருந்தால் தயாரிப்பாளர் கையை வலுப்படுத்தி இருக்கும். நானும் 5 வட்டுகள் பெற்றுக் கொண்டேன். வர முடியாதவர்களுக்காவும், ஊரில் கொண்டு போய் காட்டலாம்னு தான்.
பின்னர் நேரமின்மையால் மிகச்சுருக்கமான கலந்துரையாடல் செழியனுடன் நடந்தது. அதிலும் வழமையான கேள்விகள் தான். திரைப்படங்கள் ஆபாசமா இருக்கு, பாடல்கள் தரக்குறைவா இருக்கு.. இந்த மாதிரி. செழியன் 'படங்கள் வணிகம் சார்ந்தவை. நீங்க படங்களைத் தேர்ந்தெடுத்துப் பாருங்க. சில படங்களின் வெற்றியே நல்ல படங்களின் விழுக்காட்டைக் கூட்டும்'னு சொன்னார்.
பதிவர் குழலி குறும்படங்கள் என்றாலே அழுகையும் தனி மனித உணர்ச்சிகளும் மட்டுந்தான் முன்னிறுத்தப் படுவதேன்னு கேட்டார். அதற்கு முதல்ல வரக்கூடிய படங்கள் பெரும்பாலும் இப்படித்தான் ஒருமை சார்ந்ததா இருக்கும். பின்னாடி கலங்கித் தெளியும்னார்.
அடுத்த கேள்வியா இதழ்கள்ல சிற்றிலக்கிய வகை இருக்கும் போது அப்படி வணிகம் சாராத படங்கள் வருவதைத் தடுத்தது எதுன்னு கேட்டார். செழியன், அப்படி ஒரு வெற்றிடம் இருப்பது உண்மை தானென்றும் இது போன்ற மாற்றுத் திரைப்படங்கள் குறித்த விழிப்புணர்வு அந்த நிலையை மாற்றும்னு தான் நம்புவதாக்க் குறிப்பிட்டார்.
வழக்கம் போல் நூலக நிர்வாகம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர். இனிப்பும், வடையும், தேனீரும் இருந்தன ;-) கேசரிக்கு சட்னி தொட்டு தின்றேன். உடன் வந்த பதிவர்களும் இந்த சேர்க்கை நல்லா இருக்கிறதா சொன்னாங்க! கூட்டம் முடித்து கிளம்பினோம். எங்கன்னு அடுத்த இடுகைல பாப்போம்.
Comments
இணையத்தில் பார்த்த குறும்படங்களின் பாதிப்பாக இருக்கும்
:)
சாப்பாட்டு விஷயம் இன்னும் மாறலையா ?
வருகைக்கு நன்றி. சிறப்பான ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு வந்த உடனேயே இங்கு ஆர்வமா பின்னூட்டமிட்ட அன்பு நெகிழ வைக்கிறது ;-)
@நசரேயன்
என்ன செய்ய, நாவை மட்டுறுத்துவது இன்னமும் பெரும்பாடாத் தான் இருக்கு.
- பொன்.வாசுதேவன்