Skip to main content

தனி குறும்படம் - பார்வை

முதன் முதலாக ஒரு குறும்படம் பாக்கப் போறோம்னு ஒரு உணர்வு இல்லைனாலும் இருக்கற மாதிரி நினைச்சுக்குறது நல்லா இருந்துச்சு. தனியா இருக்குற ஒரு ஆளை அவனறியாம உத்துப் பாக்குற முயற்சி தான் தனி.

அவனோட பொழுதுகள் ஏதோ ஒரு புறக்காரணி தரும் இடையூறுகளால் துவங்குகிறது. எழுந்ததும் அருகே இருக்கிற பொத்தகங்களில் ஒண்ணை வாசிக்கிறான். சலித்து குளியலறைக்குள்ள போகிறான். என்ன பண்றான்னு இயக்குனர் பதிய விரும்பலை. ஆனா, அந்த நேரத்துல ஒரு பெண் அவன் மனசுல வந்து போறா. தலைகவிழ்ந்து அவனை முறைக்கிறா. அவனால அவளை நிமிந்து பாக்க முடியலை. அப்படி என்ன பண்றான் உள்ள? தெரியலை. வேர்த்தாப்புல வெளில வர்றான்.

நிறைய மதுப்புட்டிகள். அதுல இருக்குற கடைசி சொட்டுகளை குடிக்கிறான். ப்ச், பத்தலை. வெளில போறான். இப்ப அந்த அறைல திடு,திப்புனு ஒரு பூனை. அந்தப் பூனை மெல்லமா கத்திட்டு அங்க இருந்து வெளில வரப் பாக்குது. மூடிய அறைல இருந்து எப்படி வெளில வர முடியும்? இப்ப அவன் ஒரு மதுப்புட்டியை வாங்கிட்டு வந்துட்டான். குடிக்கிறான். காற்றில் புரளும் பக்கங்களோட படம் முடியுது.

இப்ப என்னோட அசை போட்ட பார்வை. படம் மொத்தமா தனியா இருக்க ஒருத்தனோட ஒரு பொழுதைச் சொல்லுதுன்னு எடுத்துக்கலாம். அவ்வளவு தான். அவ்வளவு தான்னா அவ்வளவே தான். இதுக்கு மேல ஒண்ணும் பெருசா ஆராய்ச்சி பண்ணத் தோணலை (அசை போடும் போது).

சைதாப்பேட்டையில் இருக்கும் ஏதோ ஒரு வீட்டில் நண்பர்களுடன் குடி இருக்கிறீர்கள். விடுமுறைக்கு ஊருக்குச் செல்லப் பிடிக்கலை. நண்பர்கள் சென்று விட்ட பின்பு நீங்கள் உணரும் தனிமைன்னு பாத்தா பொருந்தும். குறும்படங்கள் அவற்றின் கால அளவில் (இந்தப் படம் 10 நிமிடங்கள் ஓடக்கூடியது) தான் சொல்ல வரும் கருத்தை இப்படித் தான் விவரிக்க முடியும். பெரும்படங்கள் பார்த்துப் பழகிய நமக்கு அவ்வளவு தானா படம் என்ற ஏமாற்றம் துவக்கத்தில் இருக்கலாம். ஆனால், புதுப்பாடல்/புதுமைச் சிறுகதைகளை ஓர்ந்து படித்தவர்களுக்கு இந்த உணர்வு போதுமானதாக இருக்கும்.

நுட்பங்கள்னு பாத்தா, காலைல காலதர்(சன்னல்) வழியா கதிர்கள் அழகா அறைக்குள்ள விரியும். தொம், தொம்னு ஓசை கேக்கும். உடனே புரண்டு அப்புறம் எழுந்திருப்பான். புறக்காரணிகள் தான் இப்படி எழுப்புதுங்கறது புரியும். அப்புறம் நடந்த உரையாடலில் அந்த ஓசை யாரோ துணி துவைக்கும் ஓசைன்னு விளங்குனாங்க.

அப்புறம் அந்தப் பெண், யாருன்னு தெரியாது. அவங்க பாட்டுக்கு கையைக் கட்டிட்டு நின்னு வெறிச்சுப் பாப்பாங்க. நாமளா என்ன வேணும்னா உணர்ந்துக்கலாம். அடுத்து அந்தப் பூனை. அது படுக்கைல இருந்து துள்ளி எழுந்து சுவரருகே போய் கத்துவது அவனது தனிமையின்/தனிமைப் படுத்தப் பட்டதின் வலிகளைச் சொல்லுவதா எடுத்துக்கலாம். அந்தப் பூனை டக்குன்னு தவ்வி காலதர்க் கண்ணாடிக் கதவுகள்ல ஏறித் திரும்பும். தப்பிக்க நினைக்கிற மனப்பான்மையா??? பாக்குறவங்களைப் பொறுத்தது.

ரொம்ப அளக்காமப் (யோசிக்காம) படம் பாத்தா எளிமைப் புரியுங்கறது தான் இந்தப் படம் எனக்கு சொல்லும் சேதியாப் படுது. இதே அணுகுமுறைல புதுப் பாதையில் (நவீனங்கள்) வரும் படைப்புகள் காட்டும் மெல்லிய உணர்வுகளை நுகர முடியும்னு நம்பறேன்.

Comments

இன்னாது நம்ம தினம் பண்ணுவதை எடுத்தா அதுக்கு பேரு படமா? ஒன்னு புரியலை. இதுக்கு பேரு ரசனையா? நமக்கு அது எல்லாம் வராதுன்னா? நன்றி.
கதை என்பது என்ன, ஒரு பாடல் என்ன சொல்லுது இது மாதிரி சின்னச் சின்ன கேள்விகள்ல துவங்குங்க.

//நமக்கு அது எல்லாம் வராதுன்னா?//
முன்முடிவுகள் வேண்டாமே :-)

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

அக்டோபர் மாத போட்டிக்கு

நேரமில்லாது போனதால் இம்முறை என் மனைவி எடுத்த படங்கள். வெண்பா போட்டு அப்புறம் விளக்குறேன். இந்த போட்டிக்காக மட்டுந்தான் என்னோட வலைப்பூ இப்ப இருக்கு போல.

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி