Skip to main content

சுனைப்பூ சூடியவள் - இன்று மலர்ந்தவை

தேனு, உன்னைய எனக்கு ரொம்பப் புடிக்கும்

இன்னிக்கு தான் தோணுச்சாக்கும்

எப்பவுமே புடிக்கும் தேனு

எனக்கு அப்படித் தெரியலையே

மெய்யாலுமே தேனு

ம், சரி எவ்வளவு புடிக்கும், ஒரு காப்படி?

அய்யோ, நான் உண்மையத்தான் சொல்றேன். என் உடம்புல இருக்க ஒவ்வொரு அணுவுலயும் உன்னைத் நிறைச்சிருக்கேன் தெரியுமா!

கதை விடற. எப்படி நான் நம்புறது?

வேணும்னா என் மூச்சுக் காத்தைக் கேளு.

அப்ப மூச்சுல முடிஞ்சு வைச்சிருக்கன்னு சொல்லு.

நான் முடிச்சு வைக்கல. உன் நினைப்ப உடம்போட ஒவ்வொரு நாளமும் காத்தா முடிச்சு வைச்சு அனுப்புது.

அப்ப என் நினைவுகள் கொஞ்சநாள்ல தீந்து போயிருமே?

அப்ப புதுசா காத்தை உள்ள இழுத்து உன் நினைவுகளை முடிஞ்சு உள்ள அனுப்புவேன்.

உன் பேச்சு தான் என்னய இப்படி கிறுக்கா உக்கார வைச்சிருக்கு.

இருவரும் பேசவில்லை. ஒரே நேரத்தில் பெருமூச்சு எழுகிறது.

ம், இப்படி பெருமூச்சு வந்ததே, அது என்னவாம்.

தீராத ஏக்கம் இருந்துச்சுன்னா ஏக்கம் இன்னும் பல எண்ணங்களை உருவாக்கும். அந்ம எண்ணங்களின் முடிச்சுகள் காத்துல நிரப்பி அனுப்ப நேரமாகும். அதனால மூச்சு பெரிசாயிரும்.

மகிழ்ந்து சிரிக்கிறாள்.

உன்னய மடக்க முடியாது.

நீ எம்மேல நம்பிக்கை இல்லாமத் தானே இவ்வளவு கேள்வி கேக்குற.

அப்படில்லாம் இல்ல. ஆனா உன்னய பாத்தா எனக்கு நிறைய கேக்கத் தோணும்.

அப்படியா, வேற என்ன கேக்கத் தோணுது?

என்னய உனக்கு ரொம்பப் புடிக்குமா?

பேதைப் பெண் நீ

என்னைய முட்டாள்னா சொல்ற

நீ முட்டாள்னா உன்ட்ட மனசப் பறிகொடுத்த நான் அறிவாளியா? தெரிஞ்சத திரும்பக் கேக்குறியே அதனால சொன்னேன்.

அப்படின்னா என்னைய விடவும் பேதைமையான பெண் யாரும் இருக்காளா?

நீ போட்டு வாங்குற. எனக்கு நேரடியாத் தெரியாது, ஆனா சொல்லிருக்காங்க.

எனக்கும் சொல்லேன்.

அந்தப் பெண் ஓடையில் பூத்த மலர்களைச் சூடுவாளாம். தினைக்காட்டுல குருவிகளை கல்லால விரட்டாம செல்லமா கடிந்து பேசுவாளாம். அந்தளவு பேதையாம் அவள்.

அடிப்பாவி!  இவள வச்சு எப்படிக் குடும்பம் நடத்துறது?

அவன் சொல்றான், அதைக் கூடப் பொறுத்துக்குவேன். இப்பப் பணம் சம்பாதிக்க அசலூர் வந்துருக்கேன். நான் நாளும் அவளை நினைச்சு நள்ளிரவு தூங்கும் யானையின் மூச்சைப் போல் பேரொலி கிளப்பும் ஏக்கப் பெருமூச்சு விடுவதை பேதை அவள் அறிவாளா? நான் அவள மறந்துட்டேன்னு துன்பப் படுவாளேன்னு கண்ணீர் விடுறான்.

பாவம் இல்ல! இதை வைச்சுத்தான் இன்னிக்கு மூச்சுல கலந்தவளேன்னு என்ட்ட படம் ஓட்டுனியா?

சிரிப்பு.

உனக்கு எப்படி இந்தக் கதை தெரியும்?

ஒரு பாட்டுல படிச்சேன்.

எனக்கும் சொல்லேன்.

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் 

புனக்கிளி கடியும் பூங்கண் பேதை 

தானறிந் தனளோ இலளோ பானாள்

பள்ளி யானையி னுயிர்த்தென் 

உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே.

Comments

Popular posts from this blog

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி