Skip to main content

எறும்புடன் ஒரு பயணம் - புனைவு

இன்று காலையில் தான் அந்த விநோதம் நிகழ்ந்தது. வழக்கம் போல் தாமதமாக அலுவலகத்துக்கு புறப்பட்டேன். உலகமே அழிந்தாலும் தன் கடமை தவறக்கூடாது எனக் கருதும் என் மனைவி எனக்குக் கட்டுச்சாப்பாட்டை தந்து விட்டு பெப்போவை (என் பையங்க) பால்வாடிக்கு அழைத்துச் சென்றார். நான் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் 24ம் எண் பேருந்தைப் பிடித்தேன். அதுவும் வழக்கம் போல் ஊர்ந்தே நகர்ந்தது.

நான் இருக்கும் லொராங் சுவானிலிருந்து பாயா லேபா தொடர் வண்டி நிலையம் செல்ல அரை மணி நேரம் ஆகும். அங்கிருந்து 8 நிமிட தொடர் வண்டிப் பயணம் தானா மேரா நிலையத்திற்கு. அந்த சந்திப்பில் பொதுவாக 10 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வரும் சாங்கி செல்லும் தொடர் வண்டியைப் பிடித்தால் அலுவலகம் அடையலாம். இதுக்குள்ள ஒரு மணி நேரமாகி விடும்.

இன்னும் பேருந்தில் தான் இருந்தேன். நிமிடக் கணக்கு, நொடிக்கணக்கு எல்லாம் பார்த்தும் 10 மணிக்கு முன் அலுவலகம் அடைய முடியாது என்ற உண்மை வெறுப்பேத்தியது. ஒலி பண்பலையில் ஆனந்தம் ப்ரூவுடன் ஓடிகொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடங்களில் இந்திப் பாட்டு போட்டு விடுவார்கள். நினைக்கும் போதே இன்னமும் வெறுப்பாக இருந்ததது.

அப்போது தான் அந்த எறும்பைக் கவனித்தேன். என் சாப்பாட்டுப் பையின் மேல் ஒரு கடி எறும்பு (சிவப்பா இருக்குமே அது தான்) ஊர்ந்து கொண்டிருந்தது. இது எப்படி இங்கே? பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது தொத்திக் கொண்டிருக்க வேண்டும். இப்படியே பேருந்தில் விட்டால் யார் காலிலாவது பட்டு நசுங்கி விடும். பையின் விளிம்புக்கு வரும் போதெல்லாம், அதைப் பிடித்து மீண்டும் நடுவில் விட்டு கண்காணித்துக் கொண்டிருந்தேன். இறங்க வேண்டிய நிறுத்ததில் ஏதாவது செடியின் மேல் விட்டு விடலாம் என்று முடிவு.

இரண்டு நிமிடங்கள் கூட என்னால் இப்படித் தொடர முடியலை. விரலில் ஏறிய எறும்பு விரலசைவில் தன் சமநிலை தவறி காற்றில் மெல்ல அசைந்து இருக்கைக்கும், பேருந்தின் உட்புறச்சுவருக்கும் இடையே தன் கைகளை பிடிமானத்துக்காக விசிறியவாறு விழுந்தது. அது கைகளை விசிறிய போது அப்படியே மெதுவாக உருமாறி என் பெப்போவைப் போல் தெரிந்தது. 'அய்யோ, என்ன செய்வேன்' என்று பதறி ஒரு நொடியில் கீழே விழுந்த பெப்போவைத் (அதாங்க, எறும்பு) தேடலானேன். பக்கத்தில் அமர்ந்திருந்த சீனப் பெண் 'என்னாச்சு, இவனுக்கு' என்பது போல் பார்த்தார். அசடு வழிந்த நான் இருக்கையில் அமர்ந்த படி கால்களை அகட்டிக் கொண்டும், பையை நகர்த்திக் கொண்டுமிருந்தேன். கடுப்பாகி, அந்தப்பெண் வேறு இருக்கைக்கு மாறிக் கொண்டார்.

எல்லோரும் என்னைப் பார்த்த போதும், இப்போது கொஞ்சம் வசதியாய் இருக்கவே நன்றாக குனிந்து தேடினேன். அகப்பட்டுக் கொண்டது. மகிழ்ச்சியுடன் கையில் எடுத்து உத்துப் பார்த்தேன். ஏதாவது அடி பட்டிருக்கப் போவுது. உற்றுக் கவனித்ததில் அது பெப்போ இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன். நிறுத்தம் வந்தவுடன் அந்த எறும்பை அங்கிருந்த மதில் சுவர் செடியில் விட்டு, விட்டு 'அப்பாடா'ன்னு சாலையைக் கடந்து தொடர் வண்டி நடை மேடைக்கு வந்தேன். எல்லாம் போன ஞாயிறு 'honey, I shrunk the kids' சன் தொலைக்காட்சியில் பார்த்ததால் வந்த உள்ளக் குளறல். எப்படியோ ஒரு எறும்பை காப்பாத்தி இருக்கேன். :-)

Comments

நல்லா கவனிச்சீங்களா முகவை! உங்க மனைவி கட்டுச்சோற்றைத் தந்தாங்களா? கட்டுச்சாப்பாட்டையா? அந்த சீனப்பெண் உங்களைத் திட்டாமலா போனாங்க? ஏதோ சிங்கைங்கிறதால தப்பிச்சீங்க. நம்ம ஊராயிருந்தா நடத்துனர் உங்களைப் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டிருப்பாரு. உங்க நல்ல மனசுக்கென் பாராட்டுக்கள். அந்த எறும்பைக் காப்பாற்ற வேண்டும் என்று உங்களுக்காவது தோனிற்றே. நீங்க பேருந்தைவிட்டு இறங்கி அங்கிருந்த மதிலில் எறும்பை விடும்போது அது உங்கள்ட ஒண்ணு சொல்லிச்சே அதஏன் சொல்ல மறந்தீங்க. 'ஏன் இப்படி வேலைக்குத் தாமதமா போற? என்னமாரி சுறுசுறுப்பா இரு அப்டின்னு சொல்லுச்சா இல்லியா?'
:-))))

பாவம். அதை வேற பேட்டையில் கொண்டு விட்டீங்க? இனி எப்படித் தன் குடும்பத்தைக் கண்டு பிடிக்கும்?

அதோட மனைவி, அதோட பெப்பா எல்லாம் அப்பாவைத் தேடி அழமாட்டாங்களா?

இதுக்குத்தான் 'குடும்பப் பாட்டு' ஒன்னு வச்சுக்கணும்!
எறும்பைக் காப்பாற்றியாச்சு...பாராட்டுக்கள்...வயத்துக்குள்ள போன / போக இருக்கிற சிக்கன் ?
:)
@அமுதா
//உங்க மனைவி கட்டுச்சோற்றைத் தந்தாங்களா? கட்டுச்சாப்பாட்டையா?//

எலுமிச்சைசாதம், தயிர்சாதம், புளியோதரை, இவற்றைத் தானே கட்டுச்சோறுன்னு சொல்லுவோம்? சாம்பார்/புளிக்குழம்பு ஊத்தி பிசைஞ்சு தர்றத கட்டுச் சாப்பாடுன்னு தானே சொல்லணும்.

இது பாதி உண்மை, பாதி புனைவு. அதனால மத்த கருத்துக்களை அப்படியே விட்டுடறேன்.

@துளசி கோபால்,
புன்னகைக்கு நன்றி.
//பாவம். அதை வேற பேட்டையில் கொண்டு விட்டீங்க? இனி எப்படித் தன் குடும்பத்தைக் கண்டு பிடிக்கும்?

அதோட மனைவி, அதோட பெப்பா எல்லாம் அப்பாவைத் தேடி அழமாட்டாங்களா?//

ஆமால்ல, பாவம் அதோட குடும்பம்.

//இதுக்குத்தான் 'குடும்பப் பாட்டு' ஒன்னு வச்சுக்கணும்!//

சரி விடுங்க, இந்நேரம் குடும்பப் பாட்டைப் பாடி ஒண்ணு சேந்துருப்பாங்கன்னு நினைச்சுக்குவோம்.

@கோவி
//எறும்பைக் காப்பாற்றியாச்சு...பாராட்டுக்கள்...வயத்துக்குள்ள போன / போக இருக்கிற சிக்கன் ?//

ம்ஹூம், எவ்வளவு யோசிச்சு(!) சிங்கப்பூர் காலை வாழ்க்கைய ஒரு புனைவா குடுத்தா கேக்குற கேள்வியைப் பாருங்க!
Aruna said…
கோவி.கண்ணன் said...
எறும்பைக் காப்பாற்றியாச்சு...பாராட்டுக்கள்...வயத்துக்குள்ள போன / போக இருக்கிற சிக்கன் ?
:)
repeat!!!!!!!
anbudan aruna
கிரி said…
:-)))) :-))))

இந்த பின்னூட்டம் ஜெகதீசன் அவர்களுக்கும் சேர்த்து ;-)
திரும்பக் கேட்கும் அருணா மற்றம் புன்னகை பூத்த கிரி, மனதின் ஓசை வரவிற்கு நன்றி.

@அருணா, 50க்கு வாழ்த்துகள்.

@கிரி, 50 குறைவா பின்னூட்டம் வாங்கறது இல்ல போல;-) ஜேக் பேரைச் சொல்லி நீங்களும் புன்னகையோட கிளம்பிட்டீங்க. வாழ்க!
கிரி said…
//@கிரி, 50 குறைவா பின்னூட்டம் வாங்கறது இல்ல போல;-) //

இதெல்லாம் எப்போது வேண்டும் என்றாலும் 5 கூட வராமல் போகலாம்..நான் எழுதுவதை எப்போதும் போல் தொடர்கிறேன்.

//ஜேக் பேரைச் சொல்லி நீங்களும் புன்னகையோட கிளம்பிட்டீங்க.//

ஜெகதீசனை அவர்களை தான் இப்படி சொன்னீங்களா ..நான் குழம்பி விட்டேன்..உண்மையாகவே..:-))

உங்க பதிவுக்கு பதில் என்ன சொல்றதுன்னு தெரியல கோவி கண்ணன் பின்னூட்டம் பார்த்து.. அதனால் வேற வழி இல்லாமல் இப்படி செய்தேன்..
உங்களுக்கு எறும்பு ச்சீய்.. கரும்பு மனசு.

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

அக்டோபர் மாத போட்டிக்கு

நேரமில்லாது போனதால் இம்முறை என் மனைவி எடுத்த படங்கள். வெண்பா போட்டு அப்புறம் விளக்குறேன். இந்த போட்டிக்காக மட்டுந்தான் என்னோட வலைப்பூ இப்ப இருக்கு போல.

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி