Skip to main content

தசாவதாரம் - பார்க்கலாம்!

'அடியேன் இராமானுஜதாசன்'ன்னு அறிமுகமாகும் போது கண்ணில் நீர் கசிவதைத் தவிர்க்க முடியவில்லை. கமலுக்கு மட்டும் ஏன் திரைப்படங்கள் மீது இந்த வெறி! அவர் கடின உழைப்பு ஒவ்வொரு சட்டத்திலும்(frame) தெறி(க்)கிறது. வைணவர்களின் நம்பிக்கையை உடைத்து வரதராஜப் பெருமாள் பெயர்க்கப் படும்போது, அவர்களுக்காக பரிதாபப் படமுடிகிறது. இப்படித் தான் எல்லோருக்கும் இருக்கும் என்ற உண்மை நெளிய வைக்கிறது.

அடுத்த பத்து நிமிடத்தில் தொடங்குகிறது குட்டிக் கரணங்கள். Roller Coaster - இல் அமர்ந்ததைப் போல் திரையில் யாரெல்லாம் கமல் என சரியாத் தெரியாமல், கதையிலும், அருமையான வசனங்களிலும் ஒட்ட முடியாமல் வியப்பின் ஊடாக படம் பார்க்கிறோம். அதுவும், விமான நிலையத்தில் அவ்தார் சிங் வாந்தி எடுப்பதை கவனிப்பதா, வெள்ளைக் காரன் விஞ்ஞானியைக் கடத்துவதைப் பார்ப்பதா இல்லை நம்ம நாயுடு இந்தியப் பாரம்பரியத்தை கடைபிடிப்பதை நொந்து கொள்வதா எனத் தெரியாமல் காட்சியாடு சேர்ந்து ஒரு சுத்து சுத்துறோம். எல்லோருமே கமல் ஆனதால் இப்படி தொடர முடியாமல் தவிக்கிறோம்னு நினைக்கிறேன். ஒருவேளை பர, பரப்பான திரைக் கதைன்னு ஆறுதல் பட்டாலும் இது போன்ற காட்சிகளில் முன்பு இவ்வாறு குழம்ப நேர்ந்ததில்லை.

பாட்டி கமலிடம் நுண்ணுயிர்க்குப்பி மாட்டுவதில் இருந்து துவங்குகிறது இழுவை.... கதைக்கு தொடர்பே இல்லாமல் கலிஃபுல்லாவும், பூவராகவனும் வருகிறார்கள். எப்படா, இந்த குழப்பம் முடியும்னு ஆகிப் போச்சு. அதுவும் கலிஃபுல்லா பேசுவது எளிதில் விளங்கவில்லை. பூவராகவன் அஞ்சல் பெட்டி 520 சிவாஜியை நினைவுபடுத்துகிறார்.

ஜப்பானிய கமலைக் காட்டும் போதே இறுதிக் காட்சி இவருக்கும், ஃபிளட்சருக்கும் தான் என ஊகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த சண்டைக் காட்சி அருமையாக இருந்தது. தோல்வியடைந்து, சாகும் தருவாயில் ஹாலிவுட் பாணியில் 'என் சாவை உன்னால் தீர்மானிக்க முடியாது' என்று ஃபிளட்சர் குப்பியை கடிக்கும் போது அந்த கதைஉருவின் மேல் சற்று மதிப்பு ஏற்படுகிறது.

அசரடிக்கும் உழைப்பு. வியக்க வைக்கும் தொழில் நுட்பம். ஆனால் அவை எவ்வகையிலும் தரத்திற்கு உதவவில்லை. நெருக்கமான காட்சிகளில் கண்களை ஒட்டி இருக்கும் ஒப்பனை ஒட்டப் பட்டதாகவே தெரிகிறது. இயல்பான மாந்தர்களுடன் ஒப்பனை புனையப்பட்டவர் வரும்போது ஒப்பனையின் 'அழகு' தெள்ளெனத் தெரிகிறது. (நாயுடு ஒப்பனை மட்டும் செம்மையாக இருக்கிறது.) வரைந்து இணைக்கப் பட்ட காட்சிகள் (graphics), மற்ற தமிழ் படங்களுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட தரம் என்றாலும் உயர் தரம் என்று ஒப்புவதற்கில்லை. வரதராஜரை கடலில் போடுவது, சுனாமியில் சிதறுண்ட களம் இவையெல்லாம் கடும் உழைப்பை வெளிப்படையாகக் காட்டுகின்றன. அதுவே அவற்றின் குறையாகவும் அமைந்து விடுகிறது. இறுதிக் காட்சியில் புஷ் மேடையில் இடம் வலமாக நடப்பது, கே. எஸ். ரவிக்குமாரின் கவுண்டமணி நடனம்... சரி, சரி அதெல்லாம் ரசிகர்களுக்கான தூவல், கண்டு கொள்ள வேண்டியதில்லை.

எல்லா தோற்றங்களுக்கும் ஏற்றவாறு திறம்பட உடல் அசைவுகளை வெளிப்படுத்துகிறார் உலக நாயகன். அவரைப் பாராட்டி வேண்டுமானால் தனிப் பதிவு போடலாம். கமலின் ஒப்பனைத் தோற்றங்களைத் தவிர மற்ற அனைத்து நடிகர்களையும் NaCl க்குக்கூட பயன்படுத்தவில்லை. அதனாலேயே திரும்பத் திரும்ப கமலையே பார்த்து அலுத்துச் சலித்துப் போகிறோம்.

தரம், உலகத் தரம்னு எல்லாம் படிச்சுட்டு போனது தான் தப்பு. மத்த படி படம் ஒரு முறை பார்க்கலாம் வகை.

Comments

Sriram said…
நல்ல விமரிசனம். சார்பற்ற முறையில் இருந்தது. நான் கண்டிப்பாகப் பார்ப்பேன், ஆனால் குறைந்த எதிர்பார்ப்புகளோடு.
நல்ல விமர்சனம்.
Bleachingpowder said…
//'அடியேன் இராமானுஜதாசன்'ன்னு அறிமுகமாகும் போது கண்ணில் நீர் கசிவதைத் தவிர்க்க முடியவில்லை//

எனக்கு படம் முடிந்த போதுதான் வந்தது :-).

அதுவும் துப்பாக்கி குண்டு அவ்தார் சிங் உடம்பில் புகுந்து கேன்சரை வெளியே எடுத்து சென்றதாக டாக்டர் சொல்லுவாரே அட அட அட உலக நாயகன் உலக நாயகன் தான்.

ரொம்ப எதிர்பார்பை நம்மிடத்தில் உருவாக்கி ஏமாற்றிய படம் என்றவகையில் தான் எனக்கு இந்த படத்தில் மேல் கோபம். மற்றபடி சிவாஜியை போல் இதுவும் நல்ல பொழுதுபோக்கு படம் அவ்வளவுதான்
முகவை,

தரமான விமர்சனம்.....!
ஸ்ரீராம் வருகைக்கு நன்றி! உங்க பார்வையும் பதிங்க, அவசியம் படிக்கிறேன்.

மனதின் ஓசை, உங்க விமர்சனத்தையும் படிச்சிட்டேன், பின்னூட்டமும் போட்டுட்டேன்.

ப்ளீச்சிங் பௌடர், உங்க ஏமாற்றத்தைப் புரிஞ்சுக்க முடியுது.

//சிவாஜியை போல் இதுவும் நல்ல பொழுதுபோக்கு படம் அவ்வளவுதான்//

வழிமொழிகிறேன்.

வாங்க, கோவி அண்ணா. பாராட்டுக்கு நன்றி. இன்னும் பல மிச்சமிருக்கு. அடுதடுத்த இடுகைகள்ல வாங்கிக்கிறேன் ;-)

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி