Skip to main content

உலக அதிசயங்கள் - பகுதி 2 ஈஸ்டர் தீவுகள்

தென் பசிபிக் கடலில் இருக்கும் சற்றே விரிந்த கவட்டை (புரியாதவர்களுக்கு பூமராங்) வடிவிலான அந்தத் தீவில் சுமார் 3000 பேர் வசிக்கிறார்கள். சிலி நாட்டுக்கு சொந்தமானது. இந்த சிறிய தீவில் என்ன சிறப்பு?

கடற்கரை முழுவதும் ஓரளவு சீரான இடைவெளியில் கடலை பார்த்தவாறு மார்பளவில் அமைந்திருக்கும் சிலைகள் தான். சற்றே நெருங்கினால் “விலகு, நான் எதிர்பார்த்திருப்பது வேறொருவரை” என்பது போல் இன்னும் வெறித்த பார்வை. நிழற்படத்தில் பார்த்தாலே 'ஊ'வென காதில் இரையும் காற்று. பொட்டல் காட்டின் நடுவே இருக்கும் குலசாமியை தனியே பார்க்க வந்த உணர்வு. யார் செய்த சிலைகள்? எப்படி இங்கே வந்தன?

இந்த தீவே எரிமலை சாம்பல் மேடுறுத்தி உருவானது என்கின்றனர் ஆய்வாளர்கள். இங்கு முதன் முதலில், சுமார் தற்காலம் (CE) 500 - 800 அல்லது 1000-1200 வாக்கில் ஹொட்டு மடுவா என்பவர் தன் கூட்டத்துடன் குடியேறி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர் வழித்தோன்றல்கள் தங்களுக்காகவும், மூதாதையர் மற்றும் கடவுளர்களுக்காகவும் செய்த சிலைகள் இவை. மேலும் கப்பல்களில் வரும் எதிரிகளை அச்சுறுத்த இப்படி பிரமாண்ட சிலைகளை வைத்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

இந்த சிலைகள் ஒவ்வொன்றும் 500 முதல் 700 கிலோ எடை கொண்டவை. இவற்றை அருகிலுள்ள குன்றை குடைந்து, சிலையாக வடித்து பின்னர் அங்கிருந்து கடற்கரைக்கு 'உருட்டி' வந்துள்ளனர். ஆம், அம்மக்கள் கயிறு மற்றும் கம்புருளைகளை பயன்படுத்தி உள்ளனர்.

இந்த சிலைகள் பார்ப்பதற்கு மார்பளவு எனத் தெரிந்தாலும், முழு உருவச்சிலைகளே. மண்ணில் புதைபக்கப்பட்டவை சில, மல்லாக்க கிடத்தப்பட்டவை சில. நிமிர்த்துவதற்குள் எதிரிகள் வந்துவிட்டார்கள் போலும்! இன்னும் இறக்கப்படாத ஒரு Moai (இப்படித்தான் அழைக்கிறார்கள்) யின் எடை 2700 கிலோ!

இவ்வாறு உருவாக்கி, நிறுவிய மக்களின் வழித்தோன்றல் ஒருவர் கூட இன்று இல்லை. 15 -18-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர்கள் உலகை அறிய கிளம்பி, மற்ற இடங்களில் (மாயன், இன்கா) நிகழ்த்தியதைப் போல இங்கும் மனித வேட்டையாடினார்கள். எஞ்சியவர்களை பெருவிற்கு அடிமைகளாய் கூட்டிப் போனார்கள். மிஞ்சியவர்கள் கண்டுபிடிப்பாளர்கள் கொண்டு வந்த தொற்று நோயால் மாண்டார்கள்.

இந்தப் பதிவை இப்பொழுது எழுத வேண்டிய அவசியம்?

நாளை எழுதுகிறேன்.

Comments

creative360° said…
eagerly looking forward to the next section...
MSATHIA said…
நல்ல கட்டுரை.

கிரேயேட்டிவ் 360க்கு தமிழெழுத ஆர்வமில்லையா?

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

அக்டோபர் மாத போட்டிக்கு

நேரமில்லாது போனதால் இம்முறை என் மனைவி எடுத்த படங்கள். வெண்பா போட்டு அப்புறம் விளக்குறேன். இந்த போட்டிக்காக மட்டுந்தான் என்னோட வலைப்பூ இப்ப இருக்கு போல.

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி