கடையெழு வள்ளல்கள் பற்றி கேட்டபொழுது, அந்த சிறு வயதில் வியப்பே மேலிட்டு நின்றது.
இல்லையென சொல்ல மாட்டார்களாமே; ஈயேன் என்பது இழிவு என வாழ்ந்தார்களாமே எனப் பல முறை வியந்து போனதுண்டு.
அதியமான் நெல்லிக்கனி ஈந்த போது ஔவையை விட நான் அதிக உவகையுற்றேன்.
அத்தனையும் பாரியையும், பேகனையும் அறிந்தவுடன் பொசுக்குனு மறைஞ்சு போச்சு. (உபயம்; பாதி ஆசிரியர், மீதி என் பற்றா அறிவு).
மேகம் கண்டு, மோகம் கொண்டு மயில் ஆடினால்,
பேகன் பட்டுப் போர்வை தந்தது அறிவு மட்டு.
தன் நிலை கொள்ளா முல்லை; கண்டதும்
பாரியின் தேர் அவனிடம் இல்லை.
இப்படி சிந்திக்காமல் ஈதல் எப்படி வள்ளல் தன்மை ஆகும்? சே, சுத்த பைத்தியகாரத்தனம்னு நினைச்சேன்.
அண்மைக் காலமாக வரும் எட்டாவது வள்ளல், ஒன்பதாவது வள்ளல் அறிவிப்புகள் மீண்டும் பழைய ஞாபகங்களை தூண்டியது.
இவர்கள் நிச்சயம் பணக்காரர்கள். ஆனால், மனசாட்சி இவர்களை வள்ளல்கள் என ஏற்க மறுத்தது. ஆயிரம் பேருக்கு என எண்ணி அன்னதானம் செய்பவர், ஆதாயம் எண்ணி செய்பவர் எப்படி வள்ளலாக முடியும்?
ஆம்!
எண்ணி, எண்ணி செய்பவன் பணக்காரன்;
எண்ணிய உடன் செய்பவன் வள்ளல்.
பாரியும், பேகனும், அதியமானும் எண்ணிய உடன் வழங்கினார்கள். எதிர்காலம் எள்ளும் என எண்ணாமல் வழங்கினார்கள். அதனால் தான் அவர்கள் வள்ளல்கள், காலம் பல கடந்தும்.
அந்த வரிசையில் நமக்கு வாய்த்தவர் தான் கொடுத்துச்சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் என்றும் பொன்மனச்செம்மல் என்றும் அன்போடு அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள். அவரை வள்ளல் என அழைக்கப் போதுமான காரணிகள் பல இருப்பினும் எடுத்துக்காட்டிற்கு ஒன்று இங்கே.
அது 1983 ஆம் ஆண்டு. இலங்கையில் இருந்து வந்த இளைஞர்கள் (பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம்) இனம் காக்க உதவி வேண்டிய பொழுது, தன் சொந்தத் பணத்தில் இருந்து 2 கோடி ரூபாயை வழங்கினார். அரசு மூலமாக வழங்கலாமே என அவர்கள் கேட்டதற்கு 'அரசு மூலம் பணம் வழங்க கால தாமதம் ஏற்படும் எனவே என் பணத்தில் இருந்து தருகிறேன்' என பதிலளித்து வியப்பிலாழ்த்தினார் நம் வள்ளல். எண்ணிய உடன் செய்வதற்கு வள்ளல்களுக்குத் தானே மனம் வருகிறது.
அள்ளிப் போட்ட தகவல் இல்லை, ஆதாரம் உரைப்பவர் நன்றியுடன் நினைவு கூறும் பிரபாகரன் அவர்கள்.
இல்லையென சொல்ல மாட்டார்களாமே; ஈயேன் என்பது இழிவு என வாழ்ந்தார்களாமே எனப் பல முறை வியந்து போனதுண்டு.
அதியமான் நெல்லிக்கனி ஈந்த போது ஔவையை விட நான் அதிக உவகையுற்றேன்.
அத்தனையும் பாரியையும், பேகனையும் அறிந்தவுடன் பொசுக்குனு மறைஞ்சு போச்சு. (உபயம்; பாதி ஆசிரியர், மீதி என் பற்றா அறிவு).
மேகம் கண்டு, மோகம் கொண்டு மயில் ஆடினால்,
பேகன் பட்டுப் போர்வை தந்தது அறிவு மட்டு.
தன் நிலை கொள்ளா முல்லை; கண்டதும்
பாரியின் தேர் அவனிடம் இல்லை.
இப்படி சிந்திக்காமல் ஈதல் எப்படி வள்ளல் தன்மை ஆகும்? சே, சுத்த பைத்தியகாரத்தனம்னு நினைச்சேன்.
அண்மைக் காலமாக வரும் எட்டாவது வள்ளல், ஒன்பதாவது வள்ளல் அறிவிப்புகள் மீண்டும் பழைய ஞாபகங்களை தூண்டியது.
இவர்கள் நிச்சயம் பணக்காரர்கள். ஆனால், மனசாட்சி இவர்களை வள்ளல்கள் என ஏற்க மறுத்தது. ஆயிரம் பேருக்கு என எண்ணி அன்னதானம் செய்பவர், ஆதாயம் எண்ணி செய்பவர் எப்படி வள்ளலாக முடியும்?
ஆம்!
எண்ணி, எண்ணி செய்பவன் பணக்காரன்;
எண்ணிய உடன் செய்பவன் வள்ளல்.
பாரியும், பேகனும், அதியமானும் எண்ணிய உடன் வழங்கினார்கள். எதிர்காலம் எள்ளும் என எண்ணாமல் வழங்கினார்கள். அதனால் தான் அவர்கள் வள்ளல்கள், காலம் பல கடந்தும்.
அந்த வரிசையில் நமக்கு வாய்த்தவர் தான் கொடுத்துச்சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் என்றும் பொன்மனச்செம்மல் என்றும் அன்போடு அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள். அவரை வள்ளல் என அழைக்கப் போதுமான காரணிகள் பல இருப்பினும் எடுத்துக்காட்டிற்கு ஒன்று இங்கே.
அது 1983 ஆம் ஆண்டு. இலங்கையில் இருந்து வந்த இளைஞர்கள் (பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம்) இனம் காக்க உதவி வேண்டிய பொழுது, தன் சொந்தத் பணத்தில் இருந்து 2 கோடி ரூபாயை வழங்கினார். அரசு மூலமாக வழங்கலாமே என அவர்கள் கேட்டதற்கு 'அரசு மூலம் பணம் வழங்க கால தாமதம் ஏற்படும் எனவே என் பணத்தில் இருந்து தருகிறேன்' என பதிலளித்து வியப்பிலாழ்த்தினார் நம் வள்ளல். எண்ணிய உடன் செய்வதற்கு வள்ளல்களுக்குத் தானே மனம் வருகிறது.
அள்ளிப் போட்ட தகவல் இல்லை, ஆதாரம் உரைப்பவர் நன்றியுடன் நினைவு கூறும் பிரபாகரன் அவர்கள்.
Comments
எண்ணிய உடன் செய்பவன் வள்ளல்".
nacchunu irukku. there is so much truth in these two lines. bussula seat vittukudukkumbodu irukkara thrupti, porandanallaniku anadi illathula seyyarada vida konjamundu jasti...