Skip to main content

பணம் பத்தாகுது!

Manarkeni 2009ஒவ்வொரு நாடும் பணம் அச்சடிக்க பெருவாரியாக செலவு செய்கின்றன. போலியாக உருவாக்க முடியாதவாறு பல்வேறு நுட்பங்களைப் புகுத்துவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவது வரை என கிட்டத் தட்ட அச்சடிக்கப் படும் பணத்தின் மதிப்பில் கணிசமான அளவு செலவாகி விடும். பின் எப்படி அரசால் நிர்வகிக்க முடிகிறது? உண்மையில் அரசு தான் வெளியிடும் ஒவ்வொரு பணத்திலிருந்தும் பல மடங்கு வருமானத்தை மீட்டு எடுக்கிறது. எப்படின்னு பாப்போம்.

எடுத்துக் காட்டாக, அரசு வெளியிடும் ஒரு நூறு பணத்தை (அதாங்க உரூவா) எடுத்ததுக் கொள்வோம். அதை ஒருவருக்கு சம்பளமாக வழங்கும் போது 15 (தோராயமாக)பணத்தை வரியாக எடுத்துக் கொள்கிறது. அவர் 85 பணத்தில் வீட்டுக்குப் பொருட்கள் வாங்கும் போது 15% (குறைந்த அளவாக) பெட்ரோல் வரி, சாலை வரி, சுங்கத் தீர்வை, விற்பனை வரி, விற்பவரின் வருமான வரி என அனைத்து வரிகளையும் மறைமுகமாகக் கட்டுகிறார்.

இப்படி உற்பத்தியாளரிடம் செல்லும் பணம் மீண்டும் ஒருவரின் சம்பளமாக மறு சுழற்சியிலும் சிறுகச் சிறுக அரசிடம் சென்று சேர்கிறது. சில சுழற்சியிலேயே அச்சடித்த நூறு பணமும் முழுமையாகச் சென்று சேர்ந்து விடும். அது சில திங்கள்களிலேயே பல மடங்காக அரசிடம் சேருகிறது. அப்படின்னா நாம பணம் சம்பாதிக்கிறது வெறும் உள்ளுணர்வா, உண்மை இல்லயான்னு கேட்டா அதுக்கு விடை, நாம் நமது நாட்டுக்காக (நமக்காக) உழைக்கிறோம். உழைப்பின் வெகுமதியாக நம் செலவினங்களுக்காக கையெழுத்துப் போட்ட தாள்களைத் தருகிறது. அதை எண்ணிக்கையால் சிறிதுன்னும் பெரிதுன்னும் சொல்லிக் கொள்கிறோம். உணவு, உடை, உறையுள்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாட்டு மக்களின் உழைப்பின் அளவு தான் GDP என்று கணிக்கப் படுகிறது. வரவு செலவுத் திட்ட அறிக்கை ஒரு நாட்டு மக்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. அதைத் திறம்பட நிர்வகிக்கிறார்களா என்பது வேறு.

நாமிருவரும் இதுபோல் கையெழுத்துப் போட்டு தாள்களைப் பகிர்ந்து கொண்டு, அதனை மதித்து நடந்தால் அதுவும் பணமே, நம்மிருவரைப் பொறுத்த வரை! என்ன அரசின் பணம் போல் பத்து நூறாகாது:-)
====================================================================================
குமுகாயம், மொழி மற்றம் அறிவியல் என்று மூன்று பிரிவுகளில் போட்டி அறிவிக்கப் பட்டிருக்கிறது. உங்கள் திறன் வாய்ந்த கருத்துகள் கொண்ட தலைப்பு எதுவென்று தேர்ந்து படைப்புகளை அனுப்புங்கள். மறக்காது விதிமுறைகளையும் ஒருமுறை பாருங்கள்.

Comments

தலைப்பை பணம் பத்தாது என்பதாக படித்துவிட்டேன்.

:)

//சம்பாதிக்கிறது//

ஈட்டுகிறது.
//நாமிருவரும் இதுபோல் கையெழுத்துப் போட்டு தாள்களைப் பகிர்ந்து கொண்டு, அதனை மதித்து நடந்தால் அதுவும் பணமே//

நல்ல யோசனை தான்

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி