Skip to main content

இரகு வெண்பா - வால்மீகி

இராமன் கதை இங்கே


காட்டில் கொள்ளையராய் வாழ்ந்த வலியனை நாரதர் சந்தித்தல்

கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்;
கள்ளம் நிறைந்த வலியனை வெல்லும்
தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான்
'கருமப் பழியார் உடைத்து?'

வலியன் மறுமொழி

துச்சமென்பார் எம்குலத்தோர் என்பழியை ஏற்றிடவே
அச்சமில்லை எப்பொழுதும் மேதினியில் - மிச்சமின்றி
கூவிடுவேன் யாவரையும்; என்பழிக்காய் போட்டியிட
மேவிடுவோர் எண்ணிக்கை மேல்.

பழி ஏற்க யாருமின்றி வால்மிகியாக துறவறம் தழுவுதல்

அல்லன ஆற்றுவான் ஈட்டு(ம்)பழி ஒப்புவர்
இல்லை உவனிடம், உள்பட பொல்லாமை
நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன்
இங்ஙனம்இல் வாழ்வு துறந்து.

உள்பட - உண்மை உள்ளத்தில் பட

இனியவர் தேடி இரகுவினை அறிதல்

முனிவராய் வாழ்ந்த வலியுமே கேட்டார்
'இனியவர் யாருளர் இங்கே?' - இனிவரும்
காதையில் தன்னை மறந்தார்; கலைத்ததே
காடையின் கதறும் ஒலி!

வேடனை வெருண்டு முதல் பாடல் விளம்புதல்

கண்ணுற நேர்ந்ததே கண்ணீரில் காடையை
புண்ணுற வீழ்ந்ததே உந்தியும் - தன்னிலை
விண்ணுற தீஞ்சொல் மொழிந்தாரே வேடற்கு
மண்ணுற வாழும் முதல்.

உந்தி - துணை, பறவை
முதல் - தொடக்கம்

பறவை உயிரைப் பறித்த தருணம்
துறவி பலுக்கும் இராகம் முதலில்
அமைத்து படிக்கப் பணித்தார் உலகம்
சுவைக்க இராமன் கதை.

அறிமுகம்            அடுத்த பகுதி

Comments

///அல்லது ஆற்றுவான் ஈட்டும்பழி ஒப்புவர்///

இவ்வரிகளை உற்று நோக்கினீரா?

ஈட்டும்பழி-நேர்நேர் நிரை-தேமாங்கனி

கனிச்சீர் வெண்பாவில் வராதல்லவா? இதற்கும் நம்ம பழம்புலவர்கள் ஒரு டெக்னிக் வெச்சிருக்காங்க.

அது என்ன?

அதுதாங்க ஒற்றுநீக்கி அலகிடுதல்.

ஈட்டும்பழி -இச்சொல்லில் உள்ள ம்-என்ற ஒற்று நீக்கின் தேமாங்காய்ச் சீராகிவிடும்.

இதுபோல் ஒற்று நீக்கி அலகிட வேண்டிய இடத்தில் ஈட்டு(ம்)பழி என்று பிராக்கெட் போட்டுவிட்டால் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்

அனைத்து வெண்பாக்களும் அருமை. பாராட்டுக்கள். குறிப்பாய் இறுதிவெண்பா என்னை மிகவும் கவர்ந்தது.

///அல்லது ஆற்றுவான் ஈட்டும்பழி ஒப்புவர்///
அந்த சீரில் பொழிப்பு மோனையும் அமையவில்லை அதனை உற்று நோக்கி கனியை கவனிக்காது விட்டு விட்டேன். பிழை திருத்தியாகி விட்டது. நன்றி.

பழியை ஈற்றுச் சீருடன் இணைத்திருக்கலாம், முதலில் நீங்கள் குறிப்பிட்டதால் முன்னுரிமை அதற்கே;-)

Popular posts from this blog

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக...

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி...

ஆகஸ்டு - சிங்கை பதிவர் கூட்டம் - அங் - மோ - கியோ

இது தொடர்பான முந்தைய பதிவு: காலம்: சிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் ! இயல்பான பேச்சும், இனிப்பான உணவும் பதிவர் கூட்டத்தைச் சிறப்பாக்கின. அங்கே பகிர்ந்து கொள்ளப் பட்ட சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன். பல்வேறு திசைகளில் பயணித்த பேச்சு ஒரு கட்டத்தில் தமிழில் பெயர் சூட்டுவதைப் பற்றி நின்றது. தமிழில் பெயர் சூட்டுவது என்னமோ இந்து என்று கருதப் படுபவர்களுக்கு மட்டும் உண்டான கடமை இல்லை. மற்ற மதத்தவர்களும் முயலலாம் என்று விவாதம் தொடங்கியது. பால்ராஜ், புனிதர் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட விரும்புவதால் ஆங்கிலப் பெயர்களாக அமைந்து விடுகின்றன என்றார். வியட்நாமில் கிறித்துவர்கள் வியட்நாமியப் பெயர்களைத் தான் சூட்டுகின்றனர் என ஜோ அழகாக மறுத்தார். மேலும், தமிழில் பெயர் வைப்பதில் தடை என்று எதுவும் இல்லை, அவரவர் விருப்பத்தை பொறுத்து என்றார். நானும், இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் அரபிப் பெயர்களை வெகுவாக பயன்படுத்துவதில்லை. பின் ஏன் நாம் மட்டும் ஆங்கிலத்திலும், அரபியிலும் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினேன். மேலும் விரிவாக விவாதிக்க எனக்கும் தயக்கமாக இருந்தது. பரிந்துரை என்ற அளவிலேயே அந்த வி...