Skip to main content

Posts

Showing posts with the label நினைவுகள்

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்....

இரு மாதங்களுக்கு முன் பள்ளிக்கூடம் படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். ஆனால் இந்த பதிவு படத்தைப் பற்றியது அல்ல. (இன்னும் படம் பார்க்கவில்லை) சில காட்சிகளே என்னை உலுக்க போதுமானதாக இருந்தது. உண்மையில் 'முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சரி'ன் தொடர்ச்சி அது. என் பள்ளிகளையும், எனக்கு கற்றுவித்த ஆசிரியர்களையும் சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நின்றது. ஆனால் மனதிற்குள் ஏகப்பட்ட கேள்விகள். என்னை நினைவில் வைத்திருப்பார்களா? திடீரென்று எப்படி பார்ப்பது? திரைப்படத்தை எதிர்மறையாக உரைத்தவர்களிடம் ஒரு திரைப்படத்தின் உந்துதலால் வந்தேன் எனக்கூறினால் மலிவாக இருக்காதா? பரிசு என்ன வாங்கிச் செல்வது? ஒருவேளை, பள்ளிக்கு நிதி வழங்க வேண்டுமோ? இல்லை, விரிவாக்கத் திட்டத்துக்கு உதவ வேண்டுமா? இன்னும் பல தத்துப்பித்தான கேள்விகள் ஓடின. இத்தனை தயக்கத்தையும் தாண்டி நினைவுகளை தேடிச் செல்வேனா? செடியை வளர்த்தவர்கள் முன் மரமாய் நிற்க ஏன் தயக்கம்? பதில் தெரியும். ஒப்புக்கொள்ளத்தான் தயக்கம். முதலில் நாளை எழுதுவதாக கூறி பாதியில் விட்ட பதிவுகளை நிறைவு செய்ய வேண்டும். உங்கள் நினைவுகளை மேலும் உரச செல்வேந்திரனைய...