Skip to main content

Posts

Showing posts with the label வால்மீகி

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2

இராமன் கதை இங்கே சிந்தனையால் செலுத்தப்பட்ட மனிதர்கள். கூர்முள் உடைய குதிரை, தலைவனொடு பார்வை பிரிந்தநற் பாவைஉடன் ஓர்சொல் இழந்த இளவல் எனவகைப் பட்டார் அழுந்தும் கடிவாளம் காண். கூர்முள் - குதிரை செலுத்தும் கருவி இலக்குவன் வருத்தத்தை சீதை மாறுபட்டு புரிந்து கொள்ளுதல் உறுவல் அழுந்த ஒருவன் இளவல் மறுகரை சேர்ந்தான் மனதும் மறுக முறுவல் அணிந்த குலப்பெண் உவனைத் தறுக உணர்ந்தாள் தனித்து. தறுக - தவறாக ஆறுதல் கூற அமைதியாய் நோக்கினாள் 'தேறுதல் அடைவாய், தெரிந்துநான் மாறுதல் கொண்டேன், மயக்கம் குறைந்து; பரிசினைத் தந்தேத் திரும்பலாம் தாழ்ந்து'. அன்பின் அழுத்தம் தாங்காது இலக்குவன் நடந்தவை உரைத்தல் இன்னும் கலங்கினான் இவ்வளவும் நேர்ந்தன சொன்னான் பிதற்றும் தொனியொன்ற - கண்கள் தாழ்ந்தே இயல்பு தடுமாறி போர்தனில் வீழ்ந்தவன் போல்தான் விளர்ந்து. விளர்தல் - வெளுத்தல், வெட்குதல் சீதையின் கைவிடப்பட்ட நிலை கண்ட துறவோர்கள் வால்மீகி குடிலுக்கு அழைத்துச் சென்றனர் 'சுமக்கும் வயிற்றின் சுமைதளர் காலம் உமக்கும் பொறுக்க முடிந்ததோ' - விம்மலாய்ச் சுட்டினாள் இளவலிடம் ஒண்ணா(து) உணர்த்திட கட்டறுந்த கண்கள் கசிந்து. வேற...

இரகு வெண்பா - வால்மீகி

இராமன் கதை இங்கே காட்டில் கொள்ளையராய் வாழ்ந்த வலியனை நாரதர் சந்தித்தல் கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்; கள்ளம் நிறைந்த வலியனை வெல்லும் தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான் 'கருமப் பழியார் உடைத்து?' வலியன் மறுமொழி துச்சமென்பார் எம்குலத்தோர் என்பழியை ஏற்றிடவே அச்சமில்லை எப்பொழுதும் மேதினியில் - மிச்சமின்றி கூவிடுவேன் யாவரையும்; என்பழிக்காய் போட்டியிட மேவிடுவோர் எண்ணிக்கை மேல். பழி ஏற்க யாருமின்றி வால்மிகியாக துறவறம் தழுவுதல் அல்லன ஆற்றுவான் ஈட்டு(ம்)பழி ஒப்புவர் இல்லை உவனிடம், உள்பட பொல்லாமை நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன் இங்ஙனம்இல் வாழ்வு துறந்து. உள்பட - உண்மை உள்ளத்தில் பட இனியவர் தேடி இரகுவினை அறிதல் முனிவராய் வாழ்ந்த வலியுமே கேட்டார் 'இனியவர் யாருளர் இங்கே?' - இனிவரும் காதையில் தன்னை மறந்தார்; கலைத்ததே காடையின் கதறும் ஒலி! வேடனை வெருண்டு முதல் பாடல் விளம்புதல் கண்ணுற நேர்ந்ததே கண்ணீரில் காடையை புண்ணுற வீழ்ந்ததே உந்தியும் - தன்னிலை விண்ணுற தீஞ்சொல் மொழிந்தாரே வேடற்கு மண்ணுற வாழும் முதல். உந்தி - துணை, பறவை முதல் - தொடக்கம் பறவை உயிரைப் பறித்த தருணம் துறவி பலுக்கும் ...