இனம்புரியா இச்சை ஒன்று, இலந்தைப் பழம் போல் என்னுள்! உரித்துத் தின்ன இயலாது; முற்றும் முழுங்கவும் முடியாது; மிச்சம் வைத்து பிறகொரு முறை திண்பதும் கூடாது! அடங்கி உறுத்தும் ஆவல், தினந்தோறும்.
நாளொரு திட்ட அறிவிப்பு, நாடே குலுங்குது விவாதத்தில்! என்னை முன்னேற்றுவதே குறிக்கோள் என்கிறார்கள். எனக்கொன்றும் தேறியதில்லை, எப்பொழுதும். நான் இப்படியே இருந்தால் தானே அவர்கள் அப்படியே பேச முடியும், இந்தக் கவிதையும் எழுத முடியும்!