Skip to main content

Posts

Showing posts from October, 2007

அன்றாடங்காய்ச்சி

நாளொரு திட்ட அறிவிப்பு, நாடே குலுங்குது விவாதத்தில்! என்னை முன்னேற்றுவதே குறிக்கோள் என்கிறார்கள். எனக்கொன்றும் தேறியதில்லை, எப்பொழுதும். நான் இப்படியே இருந்தால் தானே அவர்கள் அப்படியே பேச முடியும், இந்தக் கவிதையும் எழுத முடியும்!

தொழிலாளியின் பிண்டம்

உறங்கியும் திரும்பாத உற்சாகம், உழைத்துக் களைத்தவனுக்கு. மீளாத உறக்கத்தில் விழுந்தபின் மகன் செய்தான் பிண்டம் மெலிவாக! 'அப்படித் தானே இருந்தார்' என்றான், அப்பாவியாய்.

அக்டோபர் மாத போட்டிக்கு

நேரமில்லாது போனதால் இம்முறை என் மனைவி எடுத்த படங்கள். வெண்பா போட்டு அப்புறம் விளக்குறேன். இந்த போட்டிக்காக மட்டுந்தான் என்னோட வலைப்பூ இப்ப இருக்கு போல.