tag:blogger.com,1999:blog-24956951991483319832024-02-19T07:07:03.546+05:30யாதும் ஊரே! யாவரும் கேளிர்!முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-14444543567670617582024-01-20T00:10:00.000+05:302024-01-20T00:10:24.820+05:30சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1<p> பீம சங்கர்</p><p><br /></p><p>மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம்.</p><p>1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா</p><p>2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா</p><p>3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா</p><p>4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம்</p><p>5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம்</p><p><br /></p><p>பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார்.</p><p><br /></p><p>திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில் நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை.</p><p><br /></p><p>ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து கிடைக்கும் சத்ரபதி சிவாஜி நகர் பேருந்து நிலையத்துக்குப் போனோம். 5 மணி பேருந்து 5:30க்கு வந்தது. சிலர் முன்பதிவு செய்திருந்தனர். எப்டி, எப்டின்னு கேட்டதுக்கு ரெட்பஸ்ஸில் என்றார்கள். டப்பா வண்டி! 9 மணிக்கு பீமசங்கர் அடைந்தோம். அங்கயே 50 ரூபாய் கட்டணத்தில் குளிச்சிட்டு காலை உணவாய் மிச்சர் தூவிய பட்டாணி மசாலாவைத் தொட்டு மூணு குட்டி பன் சாப்பிட்டோம். பத்து மணிக்கு வரிசையில் நின்று இரண்டு மணி நேரத்தில் சாமி பாத்தோம்.</p><p><br /></p><p>ஒரு மணி அளவில் திரும்பவும் பேருந்து நிலையம். சில குளறுபடிகளால் மூன்று மணிக்குப் பிறகே பேருந்து கிடைத்தது. அதுவும் மும்பை போற பேருந்து. வழியில் இறங்கி பூனா நகர்ப்பேருந்து எல்லைக்குள் வந்து இன்னொரு பேருந்து எடுத்து ரயில் நிலையம் வந்தோம். அன்று காலையில் அவுரங்காபாத் போக செய்திருந்த முன்பதிவு ஆர்ஏசிக்கு வந்திருந்தது. மேல் பெர்த் காரருக்கு கீழ்ஓர இருக்கையைத் தந்து மேலே தாவி நன்கு உறங்கினோம். ஐந்தரைக்கு அவுரங்காபாத்தில் இறங்கினோம். இப்ப சம்பாஜி நகர்ன்னு பேர மாத்திட்டாங்க. பொறுமையாய் டீ குடித்து விட்டு அறை எடுக்கலாம்ன்னு அளாவிக் கொண்டிருந்த போதுதான் என் மொபைலைக் காணோம்ன்றது உறைத்தது.</p><p><br /></p><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-74880941811798863272021-05-26T22:00:00.001+05:302021-05-26T22:00:57.430+05:30 சுனைப்பூ சூடியவள் - மீள்நிகழ்வு<p>என்னடி சோர்ந்து உக்காந்துட்டன்னு கேட்டவாறு குமரி வந்தாள்.</p><p>ஏன் தெரியாதா, நாடன் வேலை தேடிப் போய் இன்னிக்கு பத்து நாளாவுது. என்ன பண்றான்னு தெரியலை.</p><p>இங்க மட்டும் என்ன வாழுது? இன்னிக்குப் பன்னெண்டு நாளாச்சு.</p><p>ஆனா, நாடன் என்னென்ன நினைச்சுகுவான்னோன்னு தான் கவலையா இருக்கு.</p><p>பிரிவுன்னா அப்படித் தான்.</p><p>ஒத்துக்கிறேன். அவனை நினைச்சுக் கவலைப் படக் காரணமிருக்கு.</p><p><b>மீள்நிகழ்வு - சுனைப்பூ தொடலை தை</b></p><p>அன்று ஒருநாள் குமரி வருவான்னு பூஞ்சுனைல குளிக்கக் காத்திருந்தேன். இந்தப் பகுதில காத்து மேலருந்து கீழ வீசி சுனை இருந்த பகுதில திரும்பவும் மேலெழும். அதனால பூக்கள் பலவும் உதிர்ந்து சுனைத்தண்ணில மிதந்து வரும். இந்தப் பள்ளத்துல தான் நீர் தேங்கி வழியும். அதனால் தடாகம் பூ மூடியே இருக்கும். தேர்ந்தெடுத்த பூக்களால் அடுத்தவர் மேல எறிஞ்சு விளையாடுவோம். இப்ப தென்பலா அருகே நாடன் வந்துக்கிட்டு இருக்குறதைப் பாத்தேன்.</p><p>தென்பலா தாண்டுனா ஒத்தையடிப் பாதை பிரியும். நேர வந்தா சுனையை ஒட்டி மேல ஏறலாம். இங்க வருவானான்னு ஆவலா இருந்தது. அவன் கவனத்தை இழுக்க முடிவு பண்ணி தொப்புனு தண்ணில குதிச்சுட்டேன். சத்தம் கேட்டு விரைவாவே எட்டு வைச்சு வந்தான். நான் தனியா தண்ணிக்குள்ள நின்னது வியப்பு அவனுக்கு.</p><p>யாரும் கூட வரலை?</p><p>ரொம்பத் தான் ஆசைன்னு நினைச்சுக்கிட்டு, பூப்பறிக்க வந்தேன்னு சொன்னேன்.</p><p>சுனைலயா பூப்பறிகிறன்னு கிண்டலாச் சிரிச்சான்.</p><p>ம், இந்தா மிதந்து வருதுல்ல அந்தப் பூக்களை எடுத்து மாலை கட்டுவேன்னு சொன்னேன்.</p><p>அதுல மணமிருக்காதேன்னு கேட்டான்.</p><p>பூ செடிக்குச் சொந்தம். பறிக்கிறது அத்துமீறல் தானே என்று அவனை ஆழமாப் பாத்தேன்.</p><p>அவன் பார்வை கீழ போயிருச்சு. அந்த நேரம் குமரியும் வந்துட்டா. அவள்ட்டயும் பேசிட்டு என்னைப் பார்த்தமேனிக்கு கிளம்பிப் போய்ட்டான். பூப்பறிக்க சுனைக்கு வந்ததா நான் சொன்னதை நம்பிட்டானோ!ன்னு இருந்தது.</p><p>===========================================</p><p>ம், உதிர்ந்து சுனைல விழுந்த பூவை இந்தப் பூவை சூடத் தொடுத்ததா அவன் நம்புனான்னா ரொம்பவே உன்ட்ட மயங்கிட்டான்னு தான் பொருள். வேற என்ன கதை வைச்சிருக்க.</p><p>சொல்றேன்.</p><p><b>மீள்நிகழ்வு - புனக்கிளி கடிந்தவள்</b></p><p>மற்றொரு நாள் புனக்காட்டில் இருந்தேன். கேப்பை - கேழ்வரகு போட்டிருந்தோம். புனம்ன்றது சிறுன்ற பொருள் தரும். புனக்காடுன்னா சிறு பகுதிகளாகப் பிரிக்கப் பட்ட நிலம். மலைச்சரிவுல நீண்ட பரப்புடைய நிலமா அமைக்க முடியாது. தவிர, சிறுதானியப் பயிர்களைப் பயிரிடுவதாலும் அது புனக்காடு. சிறுதானியத்தைப் புன்செய்ப் பயிர்கள்ன்னும் சொல்லுவோம். அந்தக் காட்டுல மேய்ற பறவைகள் குருவிகளும் கிளிகளும் தான். குருவிகள் சின்னதா இருக்கதால புனக்கிளின்னு சொல்றமா, இல்ல புனக்காட்டில் மேயும் கிளிகளை புனக்கிளின்னு சொல்றமான்னு யாருக்கும் தெரியாது. பொதுப்பெயர்</p><p>தொலைவுல நாடன் வர்றதைப் பாத்துட்டேன். அவங்க காட்டுக்குப் போறோன் போல. அவனை எப்படிக் கூப்பிடுறது? கவண் வில் எறியலாமா? பாத்துட்டு குருவி விரட்டுறதா நெனைச்சிட்டுப் போயிட்டான்னா? திடீர்ன்னு ஏய், சூ, ஓ, ஆ, அய்யோன்னு கத்துனேன். அவனுக்குக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். நான் எம்பி எம்பிக் கத்தி அளப்பறையக் கூட்டுனேன். ஓடி வந்தான். ஏன் இப்படிக் கத்துறன்னான். நான் எங்கக் கத்துனேன். கிளி விரட்டுனேன்னேன். அதான் கவண் வில் இருக்குல்ல. அதுல கல் ஏத்தி அடிக்க வேண்டியது தானேன்னு பரண் நிழலுக்கு வந்த படி கேட்டான். நானும் உக்காந்துட்டேன். கிளிக்கு அடிபடாதா? கூட்டுல காத்திருக்க குஞ்சுகளுக்கு யார் ஈடு வைக்கிறதுன்னு பார்வையை வேறுபுறம் திருப்பியவாறு கேட்டேன். சரியாப் போச்சு, இந்தப் பட்டம் கேப்பை வீட்டுக்கு வந்த மாதிரி தான் என்றான். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். அவன்ட்ட பேசும் போது மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிறகு அவங்க காட்டுக்குப் போய்ட்டான்.</p><p>====================================</p><p>நீ ரொம்பவே விவரந்தான். கூப்பிடணும் ஆனா அவனா வந்த மாதிரி இருக்கணும்ன்னு திட்டம் போட்டு செயல்பட்ருக்க.</p><p>இப்ப அவன் என்னைப் பத்தித் தான் கவலைப்பட்டுக்கிட்டு இருப்பான். அவன் பெருமூச்சு என் கூந்தலை அளையிற மாதிரி கிட்டத்துல உணர்றேன்.</p><p>சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்</p><p>புனக்கிளி கடியும் பூங்கண் பேதை</p><p>தான்அறிந் தனளோ இலளோ பானாள்</p><p>பள்ளி யானையின் உயிர்த்தென்</p><p>உள்ளம் பின்னும் தன்உழை யதுவே!</p><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-21918854640720301192021-05-23T21:11:00.005+05:302021-05-30T16:01:55.083+05:30சுனைப்பூ சூடியவள் - இன்று மலர்ந்தவை<div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">தேனு, உன்னைய எனக்கு ரொம்பப் புடிக்கும்</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">இன்னிக்கு தான் தோணுச்சாக்கும்</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">எப்பவுமே புடிக்கும் தேனு</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">எனக்கு அப்படித் தெரியலையே</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">மெய்யாலுமே தேனு</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">ம், சரி எவ்வளவு புடிக்கும், ஒரு காப்படி?</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அய்யோ, நான் உண்மையத்தான் சொல்றேன். என் உடம்புல இருக்க ஒவ்வொரு அணுவுலயும் உன்னைத் நிறைச்சிருக்கேன் தெரியுமா!</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">கதை விடற. எப்படி நான் நம்புறது?</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">வேணும்னா என் மூச்சுக் காத்தைக் கேளு.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அப்ப மூச்சுல முடிஞ்சு வைச்சிருக்கன்னு சொல்லு.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">நான் முடிச்சு வைக்கல. உன் நினைப்ப உடம்போட ஒவ்வொரு நாளமும் காத்தா முடிச்சு வைச்சு அனுப்புது.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அப்ப என் நினைவுகள் கொஞ்சநாள்ல தீந்து போயிருமே?</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அப்ப புதுசா காத்தை உள்ள இழுத்து உன் நினைவுகளை முடிஞ்சு உள்ள அனுப்புவேன்.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">உன் பேச்சு தான் என்னய இப்படி கிறுக்கா உக்கார வைச்சிருக்கு.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">இருவரும் பேசவில்லை. ஒரே நேரத்தில் பெருமூச்சு எழுகிறது.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">ம், இப்படி பெருமூச்சு வந்ததே, அது என்னவாம்.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">தீராத ஏக்கம் இருந்துச்சுன்னா ஏக்கம் இன்னும் பல எண்ணங்களை உருவாக்கும். அந்ம எண்ணங்களின் முடிச்சுகள் காத்துல நிரப்பி அனுப்ப நேரமாகும். அதனால மூச்சு பெரிசாயிரும்.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">மகிழ்ந்து சிரிக்கிறாள்.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">உன்னய மடக்க முடியாது.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">நீ எம்மேல நம்பிக்கை இல்லாமத் தானே இவ்வளவு கேள்வி கேக்குற.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அப்படில்லாம் இல்ல. ஆனா உன்னய பாத்தா எனக்கு நிறைய கேக்கத் தோணும்.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அப்படியா, வேற என்ன கேக்கத் தோணுது?</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">என்னய உனக்கு ரொம்பப் புடிக்குமா?</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">பேதைப் பெண் நீ</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">என்னைய முட்டாள்னா சொல்ற</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">நீ முட்டாள்னா உன்ட்ட மனசப் பறிகொடுத்த நான் அறிவாளியா? தெரிஞ்சத திரும்பக் கேக்குறியே அதனால சொன்னேன்.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அப்படின்னா என்னைய விடவும் பேதைமையான பெண் யாரும் இருக்காளா?</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">நீ போட்டு வாங்குற. எனக்கு நேரடியாத் தெரியாது, ஆனா சொல்லிருக்காங்க.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">எனக்கும் சொல்லேன்.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அந்தப் பெண் ஓடையில் பூத்த மலர்களைச் சூடுவாளாம். தினைக்காட்டுல குருவிகளை கல்லால விரட்டாம செல்லமா கடிந்து பேசுவாளாம். அந்தளவு பேதையாம் அவள்.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அடிப்பாவி! இவள வச்சு எப்படிக் குடும்பம் நடத்துறது?</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அவன் சொல்றான், அதைக் கூடப் பொறுத்துக்குவேன். இப்பப் பணம் சம்பாதிக்க அசலூர் வந்துருக்கேன். நான் நாளும் அவளை நினைச்சு நள்ளிரவு தூங்கும் யானையின் மூச்சைப் போல் பேரொலி கிளப்பும் ஏக்கப் பெருமூச்சு விடுவதை பேதை அவள் அறிவாளா? நான் அவள மறந்துட்டேன்னு துன்பப் படுவாளேன்னு கண்ணீர் விடுறான்.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">பாவம் இல்ல! இதை வைச்சுத்தான் இன்னிக்கு மூச்சுல கலந்தவளேன்னு என்ட்ட படம் ஓட்டுனியா?</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">சிரிப்பு.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">உனக்கு எப்படி இந்தக் கதை தெரியும்?</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">ஒரு பாட்டுல படிச்சேன்.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">எனக்கும் சொல்லேன்.</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் </span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">புனக்கிளி கடியும் பூங்கண் பேதை </span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">தானறிந் தனளோ இலளோ பானாள்</span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">பள்ளி யானையி னுயிர்த்தென் </span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span></div><div><span style="color: #202124;"><span style="background-color: white; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே.</span></span></div><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-14157526366889720502021-05-23T20:29:00.002+05:302021-05-30T16:02:52.136+05:30சுனைப்பூ சூடியவள் - பாணாள் பள்ளி யானை உயிர்த்து<p><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">வணக்கம் டாக்டர் எப்படி இருக்கீங்க?</span></p><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">நான் நல்லா இருக்கேன். இதே மாதிரி எங்க போனாலும் முகமூடி போட்டிக்கிட்டு போங்க. அடிக்கடி கைகளைக் கழுவுங்க. வீட்ல எல்லாரும் நலமா?</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">நலம். கரோனானால மூச்சுத் திணறல் ஏன் டாக்டர் வருது?</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">கரோனா கிருமி உள்ள நுழைஞ்சதும் அதைக் கொல்றதுக்காக தற்காப்புத் துறை தன் படைகளை அனுப்பும். அதுல கீட்டோன்சும் உண்டு. மற்ற படைகளால் வெல்ல முடியாதப்ப கீட்டோன்ஸ் கிருமியை சுத்தி வளைச்சு வெடிச்சிருங்க. தற்கொலைப் படை. இந்த வெடிப்புல நுரையீரல் செல்களும் பாதிக்கப் படும். இதே மாதிரி ஒவ்வொரு கிருமியாக் கொல்லும் போது நுரையீரல் பெருவாரியா பாதிக்கப் பட்டிருக்கும். இதனால நுரையீரலால மூச்சுச்சுற்றை முடிக்க முடியாம திணறல் வருது.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">இந்த மூச்சுச் சுற்றை விளக்குங்களேன்?</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">பள்ளிக் கூடத்துல படிச்சது மறந்து போச்சா? (சிரிக்கிறார்) மூச்சும் இதயமும் ஒருங்கிணைந்து செயல்படணும். உடம்புல உள்ள செல்கள்ல ஆற்றல் எரிப்பு தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கும். எரிக்கிறதுக்கு ஆக்சிஜன் வேணும். குருதி தான் ஆக்சிஜனை சுமந்து செல்லும். ஆக்சிஜனை குருதில ஏத்தி விடுறது நுரையீரலின் முதல் சுற்று. இந்தக் குருதியை இதயம் உடல் முழுக்க நல்ல அழுத்ததுல அனுப்பி விடும். செல்கள் எரிக்கிற வேலையைச் செய்யும் போது கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடும். இது திரும்ப குருதில தொத்திக்கிட்டு நுரையீரலுக்கு வரும். நுரையீரல் கார்பன் -டை- ஆக்சைடை பிரிச்சு எடுத்துக்கும் பிறகு ஆக்சிஜனை ஏத்தி விடும்.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">இது மாதிரி எத்தனை சுற்று ஒரு நிமிடத்துக்கு?</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">உடல் அளவைப் பொறுத்து மாறும்.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">ஏன் அப்படி?</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">இதயம் ஒரு தடவை துடிக்கும் போது உடல் முழுக்க ஆக்கிஜன் போய்ச் சேரணும். குழந்தைகளுக்கு உடல் அளவு சிறியதுங்கிறதால விரைவா ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைட் சுற்று முடிஞ்சிரும். அதனால இதயத் துடிப்பும் அதிகமா இருக்கும், மூச்சும் கூடுதலா எடுத்து விடுவாங்க.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அப்ப எலிக்கு இதயத் துடிப்பு ரொம்ப அதிகமா இருக்கும்.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">ஆமா, யானைக்கு ரொம்பக் குறைவு. அவ்வளவு பெரிய உடம்பு முழுக்க ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனைக் குடுத்துட்டு வரணும் இல்லையா?</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">ஓ, நம்மளோட உறுப்புகள் எல்லாத்துக்கும் இருக்கக்கூடிய ஒரே வெளிஉலகத் தொடர்பு இந்தக் காற்று தான் இல்லையா?</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">ஆமாம், காற்றை ஒரு ஊடகமா நினைச்சுக்கிட்டம்னா மூச்சு விடு தூதுன்னு பாட்டு எழுதிரலாம்.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அதேதான் டாக்டர். என் மூச்சில் கலந்தவளேன்னு சொல்றதுக்கு வலுவான அடிப்படை இருக்குறதா உணர்றேன். அப்பப் பெருமூச்சு?</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">மன மயக்கம் ஏற்படும் போது ஆழ்ந்த சிந்தனையில் எண்ண ஓட்டத்திற்கு ஈடு தர முடியாமல் நுரையீரல் செயல்பாடுகள்ல சீர்மை குன்றும். அப்ப இரண்டு மூன்று மூச்சுகள் ஒண்ணு சேர்ந்துரும். இதுக்கு மேல சேர்த்து வைக்க முடியாதுன்னு அங்கங்க இடர் குறிப்போசை (அபாயமணி) அடிக்க நுரையீரல் முழு வேகத்துல காற்றை வெளிய அனுப்பும். இந்த மூச்சு இயல்பை விட ரொம்பவே நீளமானது. அதான் பெருமூச்சுங்கிறோம்.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">மூச்சை ஊடகமாச் சொன்னீங்கள்ல அப்படின்னா பெருமூச்சு ஒரு செல் விடாம எல்லா செல்கள்ட்ட இருந்தும் தகவலைப் பெற்று கோர்த்து மொத்தமா வெளியிடும் நடைமுறைன்னு வைச்சுக்கலாமா?</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">ம், தாராளமா. நினைவுகள் தான் இந்தப் பெருமூச்சைத் தூண்டுதுன்னு வைச்சுக்கிட்டா காதலன் காதலி குறித்த உடல், மனம் இணைந்து வெளிப்படுத்தும் ஏக்கம் தான் பெருமூச்சு.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">நீங்க சொன்னதை அப்படியே கபிலர் குறிப்பிட்டிருக்கார் டாக்டர்.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">புனக்கிளி கடியும் பூங்கட் பேதை</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">தான்அறிந் தனளோ இலளோ பானாள்</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">பள்ளி யானையின் உயிர்த்தென்</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">உள்ளம் பின்னும் தன்உழை யதுவே!</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">பிற உயிர் வருந்துவதைத் தாங்காத பேதைப் பெண்ணின் கணவன் பொருள் தேடி வெளியூர் போயிருக்கான். அங்க அவள் நினைவுகள் அவனை வாட்டுகின்றன. தான் வாடுவதை அறிந்தால் அவளும் வாடுவாளே அதனால் தன் வருத்தம் அவளுக்குத் தெரிந்து விடக் கூடாதுன்னு பெருமூச்சு விடுகிறான். அந்தப் பெருமூச்சை நள்ளிரவில் உறங்கும் யானை விடும் மூச்சின் வேகத்துக்கும் அளவுக்கும் ஒப்புமை வைக்கிறார் கபிலர். அந்த வேகமும் அளவும் தான் அவள் குறித்த எண்ணங்களின் பரிமாணம். செம்மை!</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">என்னால நம்பவே முடியலை. இன்னிக்கு இருக்குற அறிவியல்ல வளர்ச்சில நான் சொன்னது பள்ளிப் பாடம் தான். இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னால இவ்வளவு துல்லியமா எண்ணங்களை மூச்சோடு பொருத்தி அதற்கு யானை குறைவாக விடும் அளவில் நெடிய மூச்சை ஒப்புமை படுத்துனதை எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியலை. அருமை!</span><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-70242224740742977162021-05-23T20:25:00.007+05:302021-05-23T20:26:19.835+05:30சுனைப்பூ சூடியவள் - 1<p><span style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்</span></p><p><span style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">புனக்கிளி கடியும் பூங்கண் பேதை</span></p><p><span style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">தானறிந் தனளோ இலளோ பானாள்</span></p><p><span style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">பள்ளி யானையின் உயிர்த்தென்</span></p><span style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">உள்ளம் பின்னும் தன்னுழை யதுவே!</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">-கபிலர்</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">அவள் ஒரு பேதை. அன்பு நிரம்பியவள். அது அவள் கண்களிலேயே தெரியும். நான் பார்த்திருக்கிறேன். மலர்ந்து மணம் வீசும் மலரைச் சூடும் பெண்களிடையே பூக்களுக்குப் பறிக்கும் துன்பம் தர அஞ்சுபவள். உதிர்ந்து சுனை நீரில் ஓடி வரும் பூக்களைத் தொடுத்தே அணிபவள். இவ்வளவு ஏன், திணைக் காவல் சென்றால் மாலை திரும்பும் போது தொண்டை கட்டிக் கொண்டிருக்கும். ஏய் கிளி, என் காட்டின் கதிர்களை தின்னாதே. எனக்கு இழப்பு ஏற்படுத்தாதே. தின்றது போதாதா என்றெல்லாம் திட்டுவாளே ஒழிய கவண் வில் சுழற்ற மாட்டாள். கிளிகளுக்கு அடிபடுமோ என வாடுவாள். என் மனைவி தான் அவள்.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">இப்போது பொருள் தேடி வெகு தொலைவு வந்து விட்டேன். நெஞ்சில் நின்றாடும் அவள் காதல் பார்வை சுரக்கும் அன்பு பெரும் ஏக்கத்தைத் தருகிறது. அந்த ஏக்கம் நள்ளிரவில் உறங்கும் யானையின் மூச்சினும் நெடியதாய் பேரொலி கிளப்பி என் நினைவுகள் அவளையே சுற்றி வருவதை அறிவாளா என்ற வினாவோடு முடிகிறது.</span><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-32499194786455136792017-12-16T00:01:00.001+05:302017-12-16T00:06:24.420+05:30ஈ என இரத்தல்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
நண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில் போக்குவரத்தே இல்லை. பெட்டிக் கடையின் பின்புறம் ஒருகுடிசை மாதிரி ஒண்டி வீடு இருந்த்து. வாசலில் பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் வெளிப்புற அடுப்பினருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை அங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவன் வந்தான். திடீரென்று 'இந்தக் கை உடைஞ்சி போச்சி' என்று அவன் பேசத் தொடங்கியதும் தான் அவன் இருப்பையே உணர்ந்தேன். பழசாகிப் போன அல்லது அழுக்குச் சேர்ந்த உடைகளை அணிந்திருந்தான். சில நாளாக குளிக்கவில்லை போல. பிச்சை கேட்பானோ? இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால்? ஒருவேளை பணம் கேட்பானோ? அதெல்லாம் இல்லைன்னு சொல்லலாம்னா அவன் இன்னும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை பணம் கேட்டு, தரலைன்னா கையப் புடிச்சுக் கேட்டா? ஒரே அப்பு! ச்சீய், என்ன ஒரு மனநிலை. ஒருவிதமான கூச்சமும் எரிச்சலும் கலந்த அச்சம் தான் என்னிடம் இருந்தது.
<br />
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எங்களை எந்தவித உணர்ச்சியும் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்தவள் தன் வேலையில் மும்முரமானாள். அவளுக்கும் அன்னியன் போல. 'என்ன பண்ணச் சொல்றீங்க?' என் குரல் எனக்கேத் தெளிவாக கேட்க வில்லை. என்னையே சிறிது நேரம் பார்த்தான். 'சித்தப்பா வந்தாருன்னா சேவ் பண்ணச் சொல்வாரு. ஒரு உதவியும் கிடையாது'ன்னு தொடர்ந்தான். பணம் கேட்க அடிபோடுகிறான் என்று நினைத்தேன். ஒருவேளை மிகுந்த மன உளைச்சலில் இருப்பானோ? ஒரு மனிதனின் புலம்பலைக் கேட்கக் கூடவா எனக்கு மனமில்லை. கேட்டு வைக்கலாம்னு அவனைப் பார்த்தேன். 'சித்தியோ ஒண்ணும் பண்ணாது.' சற்று நிறுத்தினான். 'இம்புட்டு சப்பாதிச்சுக் கொடுத்திருக்கேன். இப்ப ஒண்ணும் இல்ல.' எனக்கு வருத்தமாகவே இருந்தது. ஆனாலும் இப்படியே அடுக்கிக் கொண்டு போய் கடைசில பணம் தானே கேப்பான்னு இருவித இகழ்ச்சியும் இருந்தது. அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. வெறுமே பார்த்துக் கொண்டு இருந்தான். திடீரென்று கைவிடப்பட்டவன் போல. இதுவரையிலும் பிச்சை எடுத்துப் பழகாததால் வாய்விட்டுக் கேட்கக் கூச்சமாக இருந்திருக்கும்.
<br />
<br /></div>
<div style="text-align: justify;">
சாப்டீங்களான்னு கேட்கத் தோன்றியது. ஆனாலும் துணியவில்லை. சிகரெட்டைக் கீழே போட்டு விட்டு கிளம்ப ஆயத்தமானேன். அவனைப் பார்ப்பதா வேண்டாமா? 'சரிங்க'ன்னு சொல்லிட்டு, அதுவும் எனக்கு மட்டுந்தான் கேட்டிருக்கும், வண்டியைக் கிளப்பினேன். என்னால் வேகமாக வண்டியைச் செலுத்த முடியவில்லை. ஒருவாய் 'சாப்டீங்களா'ன்னு கூடக் கேட்கலையே. திரும்பிப் போய்க் கேட்கலாமா? 'பிழைச்சேன்னு போவியா....' அப்புறம் தொடர்ந்து சென்று விட்டேன். இன்னமும் பிழைத்தவன் என்ற உறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
</div>
</div>
<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-56105401943220873912009-10-27T14:05:00.000+05:302009-10-27T14:04:32.053+05:30தனி குறும்படம் - பார்வைமுதன் முதலாக ஒரு குறும்படம் பாக்கப் போறோம்னு ஒரு உணர்வு இல்லைனாலும் இருக்கற மாதிரி நினைச்சுக்குறது நல்லா இருந்துச்சு. தனியா இருக்குற ஒரு ஆளை அவனறியாம உத்துப் பாக்குற முயற்சி தான் தனி.<br /><br />அவனோட பொழுதுகள் ஏதோ ஒரு புறக்காரணி தரும் இடையூறுகளால் துவங்குகிறது. எழுந்ததும் அருகே இருக்கிற பொத்தகங்களில் ஒண்ணை வாசிக்கிறான். சலித்து குளியலறைக்குள்ள போகிறான். என்ன பண்றான்னு இயக்குனர் பதிய விரும்பலை. ஆனா, அந்த நேரத்துல ஒரு பெண் அவன் மனசுல வந்து போறா. தலைகவிழ்ந்து அவனை முறைக்கிறா. அவனால அவளை நிமிந்து பாக்க முடியலை. அப்படி என்ன பண்றான் உள்ள? தெரியலை. வேர்த்தாப்புல வெளில வர்றான்.<br /><br />நிறைய மதுப்புட்டிகள். அதுல இருக்குற கடைசி சொட்டுகளை குடிக்கிறான். ப்ச், பத்தலை. வெளில போறான். இப்ப அந்த அறைல திடு,திப்புனு ஒரு பூனை. அந்தப் பூனை மெல்லமா கத்திட்டு அங்க இருந்து வெளில வரப் பாக்குது. மூடிய அறைல இருந்து எப்படி வெளில வர முடியும்? இப்ப அவன் ஒரு மதுப்புட்டியை வாங்கிட்டு வந்துட்டான். குடிக்கிறான். காற்றில் புரளும் பக்கங்களோட படம் முடியுது.<br /><br />இப்ப என்னோட அசை போட்ட பார்வை. படம் மொத்தமா தனியா இருக்க ஒருத்தனோட ஒரு பொழுதைச் சொல்லுதுன்னு எடுத்துக்கலாம். அவ்வளவு தான். அவ்வளவு தான்னா அவ்வளவே தான். இதுக்கு மேல ஒண்ணும் பெருசா ஆராய்ச்சி பண்ணத் தோணலை (அசை போடும் போது).<br /><br />சைதாப்பேட்டையில் இருக்கும் ஏதோ ஒரு வீட்டில் நண்பர்களுடன் குடி இருக்கிறீர்கள். விடுமுறைக்கு ஊருக்குச் செல்லப் பிடிக்கலை. நண்பர்கள் சென்று விட்ட பின்பு நீங்கள் உணரும் தனிமைன்னு பாத்தா பொருந்தும். குறும்படங்கள் அவற்றின் கால அளவில் (இந்தப் படம் 10 நிமிடங்கள் ஓடக்கூடியது) தான் சொல்ல வரும் கருத்தை இப்படித் தான் விவரிக்க முடியும். பெரும்படங்கள் பார்த்துப் பழகிய நமக்கு அவ்வளவு தானா படம் என்ற ஏமாற்றம் துவக்கத்தில் இருக்கலாம். ஆனால், புதுப்பாடல்/புதுமைச் சிறுகதைகளை ஓர்ந்து படித்தவர்களுக்கு இந்த உணர்வு போதுமானதாக இருக்கும்.<br /><br />நுட்பங்கள்னு பாத்தா, காலைல காலதர்(சன்னல்) வழியா கதிர்கள் அழகா அறைக்குள்ள விரியும். தொம், தொம்னு ஓசை கேக்கும். உடனே புரண்டு அப்புறம் எழுந்திருப்பான். புறக்காரணிகள் தான் இப்படி எழுப்புதுங்கறது புரியும். அப்புறம் நடந்த உரையாடலில் அந்த ஓசை யாரோ துணி துவைக்கும் ஓசைன்னு விளங்குனாங்க.<br /><br />அப்புறம் அந்தப் பெண், யாருன்னு தெரியாது. அவங்க பாட்டுக்கு கையைக் கட்டிட்டு நின்னு வெறிச்சுப் பாப்பாங்க. நாமளா என்ன வேணும்னா உணர்ந்துக்கலாம். அடுத்து அந்தப் பூனை. அது படுக்கைல இருந்து துள்ளி எழுந்து சுவரருகே போய் கத்துவது அவனது தனிமையின்/தனிமைப் படுத்தப் பட்டதின் வலிகளைச் சொல்லுவதா எடுத்துக்கலாம். அந்தப் பூனை டக்குன்னு தவ்வி காலதர்க் கண்ணாடிக் கதவுகள்ல ஏறித் திரும்பும். தப்பிக்க நினைக்கிற மனப்பான்மையா??? பாக்குறவங்களைப் பொறுத்தது.<br /><br />ரொம்ப அளக்காமப் (யோசிக்காம) படம் பாத்தா எளிமைப் புரியுங்கறது தான் இந்தப் படம் எனக்கு சொல்லும் சேதியாப் படுது. இதே அணுகுமுறைல புதுப் பாதையில் (நவீனங்கள்) வரும் படைப்புகள் காட்டும் மெல்லிய உணர்வுகளை நுகர முடியும்னு நம்பறேன்.<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-80406794942162700672009-10-26T15:09:00.003+05:302009-10-26T15:27:27.807+05:30இட ஒதுக்கீடு!ஒதுக்கிய ஊரார் ஒதுக்கும் வழக்கம்<br />ஒதுக்கி ஒடுங்கியோ ருக்கென்(று) இடங்கள்<br />ஒதுக்கிய போதும் ஒதுங்கிட(ம்) இன்றி<br />ஒதுங்கும் நிலையை ஒறு.<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-34355157762128444822009-10-26T10:25:00.006+05:302009-10-26T11:45:06.195+05:30"தனி" குறும்பட வெளியீட்டு விழா (சிங்கையில்)கடந்த காரிக்கிழமை நண்பர் பாண்டித்துரையும், அறிவுநிதியும் தயாரித்த (சென்னையில் முன்பே வெளியான) தனி என்ற குறும்பட வெளியீடு அமோக்கியோ நூலக வளாகத்தில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர் (100 பேர்ன்றது சிங்கைல பெரிய கூட்டந்தான்). இயக்கம் அய்யப்ப மாதவன், ஒளிப்பதிவு செழியன். செழியன் இந்த தனி குறும்பட வெளியீட்டு விழாவுக்காகவென்றே சிங்கை வந்திருந்தார்.<br /><br />திருமதி சித்ரா ரமேஷ் கூட்டத்தை நெறிப் படுத்தினார். இவருக்கு அவைக்கூச்சம் என்பதே இல்லை. நம்மிடம் எப்படி உரையாடுவாரோ அதே மாதிரி மேடையில் பேசுவார். அப்ப இணைத் திரைப்படங்கள்னு (parallel cinema) ஒண்ணு தமிழ்ல இல்லவே இல்லைன்னு குறைபட்டுக் கொண்டார். அதனை இது போன்ற குறும்படங்களின் வரவு நிறைவாக்கும்னு சொன்னார். எனக்கு இணைத் திரைப்படம்னு ஒண்ணு இருக்குறதே அப்பத் தான் தெரியும்.<br /><br />பின்னர் ஒரு குறும்பட அறிமுகம் காட்டப்பட்டது. தொடர்ந்து தனி குறும்படம் பற்றிய மதிப்புரை தேர்ந்தெடுத்த சிலரால் வழங்கப்ப்படது. தனி, தனிமை குறித்த வேறுபாடுகளும் பேசப்பட்டது. படத்தைப் பற்றிக் கிட்டத்தட்ட வெவ்வேறு விதமான பார்வைகள் பதியப் பட்டன. எனக்கோ குழப்பமாக இருந்தது. ஒரே படத்தைப் பார்த்தவர்கள் எப்படி வெவ்வேறு விதமாக அணுகினார்கள்னு புரியலை(அடுத்த பதிவுல என்னோட பார்வையச் சொல்றேன்).<br /><br />இடையில் குறும்பட அடர்தட்டு விரும்புவோருக்காக 10 வெள்ளி நன்கொடை பெற்று வழங்கப்பட்டது. நூறு வட்டுகளாவது விற்றிருந்தால் தயாரிப்பாளர் கையை வலுப்படுத்தி இருக்கும். நானும் 5 வட்டுகள் பெற்றுக் கொண்டேன். வர முடியாதவர்களுக்காவும், ஊரில் கொண்டு போய் காட்டலாம்னு தான்.<br /><br />பின்னர் நேரமின்மையால் மிகச்சுருக்கமான கலந்துரையாடல் செழியனுடன் நடந்தது. அதிலும் வழமையான கேள்விகள் தான். திரைப்படங்கள் ஆபாசமா இருக்கு, பாடல்கள் தரக்குறைவா இருக்கு.. இந்த மாதிரி. செழியன் 'படங்கள் வணிகம் சார்ந்தவை. நீங்க படங்களைத் தேர்ந்தெடுத்துப் பாருங்க. சில படங்களின் வெற்றியே நல்ல படங்களின் விழுக்காட்டைக் கூட்டும்'னு சொன்னார்.<br /><br />பதிவர் குழலி குறும்படங்கள் என்றாலே அழுகையும் தனி மனித உணர்ச்சிகளும் மட்டுந்தான் முன்னிறுத்தப் படுவதேன்னு கேட்டார். அதற்கு முதல்ல வரக்கூடிய படங்கள் பெரும்பாலும் இப்படித்தான் ஒருமை சார்ந்ததா இருக்கும். பின்னாடி கலங்கித் தெளியும்னார்.<br /><br />அடுத்த கேள்வியா இதழ்கள்ல சிற்றிலக்கிய வகை இருக்கும் போது அப்படி வணிகம் சாராத படங்கள் வருவதைத் தடுத்தது எதுன்னு கேட்டார். செழியன், அப்படி ஒரு வெற்றிடம் இருப்பது உண்மை தானென்றும் இது போன்ற மாற்றுத் திரைப்படங்கள் குறித்த விழிப்புணர்வு அந்த நிலையை மாற்றும்னு தான் நம்புவதாக்க் குறிப்பிட்டார்.<br /><br />வழக்கம் போல் நூலக நிர்வாகம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர். இனிப்பும், வடையும், தேனீரும் இருந்தன ;-) கேசரிக்கு சட்னி தொட்டு தின்றேன். உடன் வந்த பதிவர்களும் இந்த சேர்க்கை நல்லா இருக்கிறதா சொன்னாங்க! கூட்டம் முடித்து கிளம்பினோம். எங்கன்னு அடுத்த இடுகைல பாப்போம்.<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-92023844681989750932009-10-21T08:20:00.004+05:302009-10-21T09:16:43.727+05:30சச்டி உரை - இரண்டாம் நாள் - இருளும் ஒளியும்இன்றைய நிகழ்ச்சிக்கு உதவித்தொகை (உபயம்) வழங்கியவர் பேச்சாளரின் ஆசிரியரின் பிள்ளை. அந்த ஆசிரியர் அடிக்க மாட்டார் ஆனால் நுள்ளுவார்னு குறிப்பிட்டர். நுள்ளுவார்னா கிள்ளுவார்னு பொருள். இணையத்தில் தேடினால் ஈழத் தமிழர்களின் எழுத்துக்கள் (மட்டுந்) தான் கிடைக்கிறது :-)<br /><br />சைவக் கோயில்களின் கோபுரம் எவ்வளவு தொலைவு வரைத் தெரிகிறதோ, அந்தத் தொலைவை ஆரமாகக் கொண்டு வரையப் படும் வட்டம் கைலாசத்துக்கு ஈடானதாம். இப்பத் தான் தெரியுது ஏன் கோபுரம் உயரமா இருக்குன்னு. அதுக்குன்னு வலி மிஞ்சியும் கோபுரம் கட்ட முடியாது. ஏன்னு பின்னாடி சொல்றேன். ஆனால் இது போன்ற நம்பிக்கைகள் கோயில்கள் எண்ணிக்கை பெருக உதவி இருக்கலாம்.<br /><br />இறைவனின் தோற்றரவுகள் எல்லாமே எதிரியைக் கொல்வதாகத் தான் கதைகள் இருக்கும். ஆனால் கந்தன் எதிரியின் தீய எண்ணங்களால் வளர்த்துக் கொண்ட வல்லமையை ஒடுக்கி எளியவராய் ஏற்றுக் கொள்பவனாம். தீய எண்ணங்களை இருள் என்றும் அகற்றும் ஆயுதங்களை ஒளி என்றும் உருவகித்தார். அதனால் தான் கந்தனின் ஆயுதங்களால் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் வேலாயுதம், தண்டாயுதபாணி,செவ்வேல், கதிர்வேல் என்று. இருளில் இருந்து காக்கும் கலன்கள் இல்லையா! வேற எந்தக் கடவுளின் ஆயுதங்களாலும் பெயர் வைப்பதிலை ஏன்னா இருள் இல்லாத மனிதனே இல்லை, அப்புறம் எப்படி இருள் கொண்ட வீட்டை இடிக்கும் ஆயுதத்தால் பெயர் வைப்பது :-)<br /><br />தட்சன் என்பவன் இருள் நிறைந்த உள்ளம் கொண்ட பிரமனின் மகன். அவன் சிவனிடம் தன் மகளை மணமுடித்துக் கொள்ள வேண்டிய அருள் பெற்றவன். அவனின் மற்ற மகள்களை (27 பேர்) நிலாவுக்கு அனைவரையும் ஒரு சேர பார்த்துக் கொள்ள வேண்டும்னு மணமுடித்துக் கொடுத்தானாம். நிலாவோ இருவரிடம் மட்டும் அன்பாய் இருந்ததால் தட்சன் நிலவை தேய்ந்து அழிய திட்டி விட்டான். நொந்து போய் சிவனிடம் பணிந்த நிலவை வளரும் படி அருள் தந்ததினால் வளர்ந்து, தேய்கிறதாம் நிலா! இந்தக் கதை எதுக்குன்னா மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ளா விட்டால் வாழ்வில் இருள் சூழ்ந்து விடும் என்ற நீதியை உணர்த்தவாம். அப்படின்னா, 27 பேரை மணந்த கொடுமையை எங்கு போய்ச் சொல்வது. பேச்சாளர் நாம் சடங்குகளை, கதைகளை அதன் பொருள் தெரியாது பின் பற்றுகிறோம்னு வருத்தப் பட்டார்.<br /><br />தட்சன் பிரமனிடம் இரண்டு கேள்விகள் கேட்டான். உலகில் பெரியது எது? பெரியவர் யார்? பிறருக்கு பயன் தரும் வகையில் ஈட்டும் செல்வம் பெரியது, அத்தகைய செல்வம் உடையவர்கள் பெரியவர் என்றாராம் பிரம்மா. நல்ல சிந்தனையாகப் பட்டது. இதனுடன் அவர் சொன்ன இன்னொரு விளக்கம் தலைப்புக்குப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் பட்டது.<br /><br />மால், அயன் இருவரில் பெரியவர் யார்னு தெரிஞ்சிக்கிறதுக்காக சிவன் இருவரையும் அடிமுடி கண்டு வரப் பணித்தார் இல்லையா? பிரமனின் நாவில் இருப்பவள் கல்விக் கடவுள். இந்தக் கல்வி அறிவின் துணையோடு பிரமனால் சிவனின் முடியைக் காண முடியவில்லை. கல்வி வெறுமனே குறுக்கு வழியைத் தான் காட்டியது :-) <br /><br />பெருமாளோ செல்வக் கடவுளை நெஞ்சில் நிறுத்தியவர். அவரால் செல்வத்தின் துணையோடு அடியைக் காண முடியவில்லை, குறுக்கு வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த இருவரும் தம்மில் பெரியவர் யார் என்ற அகந்தை இருள் கொண்டதால் கல்வியும், செல்வமும் துணை செய்யவில்லை. அந்த இருளை அகற்றும் விளக்காக, ஓங்கி உயர்ந்தான் ஒளிப் பிழம்பாக அண்ணாமலை. அந்த ஒளி இருவரின் இருளையும் அகற்ற உதவியது. உடன் தாள் பணிந்தார்கள்.<br /><br />இன்னொரு தகவலும் சொன்னார். இறைவனைக் காண நாமெல்லாம் கோவிலுக்குப் போறோம், இறைவன் மூன்று விதங்களில் கோவிலை விட்டு நம்மைத் தேடி வருவார். வேட்டைக்குப் போதல், சப்பரத்தில் வலம் வருதல், தேர் ஊர்வலம். இதில் சப்பரம் என்பது சக கோபுரம்னு சொன்னார். அதனால் தான் சப்பரம் கோவில் கோபுரத்தின் உயரத்துக்கு இணையாக இருக்கணுமாம். இப்பப் புரியுதா ஏன் கோபுரம் ரொம்ப உயரமா வைக்கிறதில்லைனு :-) கைலாச எல்லை விரிவடைஞ்சாலும் தூக்கிட்டுப் போக வலு வேணுமே!! இந்தத் தேர் கருவறை உயரத்துக்கு இருக்கணுமாம். ஏன் இந்த மாதிரின்னு யாராவது விளக்குங்க. இன்றைய சொற்பொழிவு பிடித்தே இருந்தது.<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-12513993697075325302009-10-20T15:20:00.006+05:302009-10-21T06:40:18.088+05:30சச்டி நோன்புச் சொற்பொழிவு - த.சிவகுமாரன் - குறவஞ்சிப் புதிர்நேற்று முதல் சிங்கை சிலோன் சாலை செண்பக விநாயகர் கோவிலில் தமிழருவி த.சிவகுமாரன் அவர்களின் கந்த புராண உரை சச்டிக்காக 6 நாள்கள் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. முன்பும் கம்பவாருதி செயராசின் உரைகளைக் கேட்டுள்ளதால் ஆர்வத்தோடு சென்றேன். இம்முறை கோவில் வளாகத்திலேயே கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கோவில் உள்ளே நுழையவும் உரை துவங்கவும் சரியாக இருந்தது. ஏடும் எழுத்தும் என்ற தலைப்பில் பேசினார்.<br /><br />சச்டி நோன்பிருப்பவர்கள் இழந்ததைப் பெறுவார்கள் என்றும் தேவர்கள் அவ்வாறே அசுரர்களிடம் இழந்ததைப் பெற்றனர் என்று சொன்ன போது 'ஈழத்தில் இழந்ததையும் நோன்பினாலேயே பெற்றிருக்கலாமே'ன்னு ஒரு வறட்சியான எண்ணம் ஓடியது. கந்த புராண நூல் ஆறு காண்டங்களாக வடமொழி நூலில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. காஞ்சி கச்சியப்பரால் எழுதப்பட்ட இந்நூல் தமிழர் சால்பை எடுத்துரைப்பதாகவும் கூறினார்.<br /><br />வேதாந்தம் கடவுளுக்கு உருவம் இல்லை என்கிறது. பரப்பிரும்மமே இறைவன் என்றும் சொல்கிறது. ஆனால் சித்தாந்தமோ கடவுள் உருவம் உடையவர் என்கிறது. இதனால் ஏற்பட்ட குழப்பங்களை கந்த புராணம் பரப்பிரும்மம் உருவெடுத்து கந்தனாக வந்தான் என்று தீர்ப்பதாகக் கூறினார்.<br /><br />எந்த ஒரு பெரிய நூலும் விளக்க மற்றும் தொடர் நிலையில் துணை நூல்களைத் தோற்றுவிக்கும் என்றும் அவ்வகையில் வீரசோழியம் என்னும் இலக்கண நூல் கந்த புராணத்தின் அடிப்படையில் எழுந்ததாகவும் சொன்னார். குற்றாலக் குறவஞ்சியிலும் கந்த புராண நிகழ்வுகள் குறிக்கப் பட்டுள்ளதாகக் கூறி ஒரு பாடலை வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.<br /><pre><br />மீறு மிலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்<br /> வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்<br />ஆறுநாட் கூடி யொருகொக்குப் பட்டது<br /> அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்<br />சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்<br /> தாமுங்கொண் டார்சைவர் தாமுங்கொண் டார்தவப்<br />பேறா முனிவரு மேற்றுக்கொண் டாரிதைப்<br /> பிக்குச்சொல் லாமலே கொக்குப் படுக்கவே<br /></pre><br />குறத்தியைத் துணையாகக் கொண்ட குறவனொருவன் வேட்டைக்குப் போய் ஆறு நாட்கள் கழித்துக் கண்ட கொக்கை சட்டியில் குழம்பு வைத்தான். அந்த குழம்பிற்கு அந்தணரும், சைவர்களும் மற்றும் முனிவர்களும் 'எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும்'னு போட்டியிட்டார்கள்னு பொருள் வரும். இப்பாடலின் பொருள் பற்றி பின்னூட்டத்தில் சொல்லலாம்.<br /><br />இதன் பிறகு தான் ஆய வேண்டிய தகவல்கள் சொன்னர். சச்டி, அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையிலிருந்து ஆறுநாட்கள் கைக்கொள்ளப் படவேண்டும். ஆனால் பிரதமைக்கு முற்பகல் என்றும் குறிப்பு இருக்கிறது. பிரதமை ஞாயிறு பிற்பகலில் இருந்து திங்கள் காலை வரை இருக்கும். அப்படிப் பார்த்தால் திங்களன்று தான் சச்டி துவங்க வேண்டும். ஆனால் ஞாயிறன்றே திருச்செந்தூரில் தவறுதலாகத் துவங்கி விட்டார்கள்.<br /><br />திருஞ்செந்தூரில் சூரன் கொல்லப் பட்டதால் அதையே முன்னோடியாகக் கொண்டு நிறைய இடங்களில் தவறாகத் துவங்கி இருக்கின்றனர். ஆறாம் நாளிலேயே நோன்பு முடிந்து விடாதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் சூரனுடனான போர் திருச்செந்தூரில் நடைபெறவில்லை என்றும் ஈழத்தில் கதிர்காமம் அருகே இன்று விகாரையாக இருக்கும் சூரன் கோட்டைக்கு வெளியில் தான் சண்டை நடந்ததாகவும் சொன்னார். மகேந்திரபுரி இலங்கைக்குத் தெற்கே இருந்ததாகவும் சூரன் கொல்லப் பட்டபின் வீரபாகுவை அவ்வூரை கடலில் அமிழ்த்தச் சொல்லி விட்டதாகவும் கூறினார்.<br /><br />கூட்டம் முடிந்து அங்கேயே உணவையும் (10 மணிக்குப் போய் யாரு சமைப்பா;-) முடித்துக் கொண்டு வீடு திரும்பினேன். இன்று இருளும் ஒளியும் என்ற தலைப்பில் பேச இருக்கிறார்.<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-70931848696870805382009-07-02T22:38:00.006+05:302009-07-03T11:24:33.310+05:30பணம் பத்தாகுது!<img style="CURSOR: hand" onclick="javascript:window.open('http://www.sgtamilbloggers.com/')" alt="Manarkeni 2009" src="http://www.sgtamilbloggers.com/images/widget200X200.gif" align="left" border="0" />ஒவ்வொரு நாடும் பணம் அச்சடிக்க பெருவாரியாக செலவு செய்கின்றன. போலியாக உருவாக்க முடியாதவாறு பல்வேறு நுட்பங்களைப் புகுத்துவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவது வரை என கிட்டத் தட்ட அச்சடிக்கப் படும் பணத்தின் மதிப்பில் கணிசமான அளவு செலவாகி விடும். பின் எப்படி அரசால் நிர்வகிக்க முடிகிறது? உண்மையில் அரசு தான் வெளியிடும் ஒவ்வொரு பணத்திலிருந்தும் பல மடங்கு வருமானத்தை மீட்டு எடுக்கிறது. எப்படின்னு பாப்போம்.<br /><br />எடுத்துக் காட்டாக, அரசு வெளியிடும் ஒரு நூறு பணத்தை (அதாங்க உரூவா) எடுத்ததுக் கொள்வோம். அதை ஒருவருக்கு சம்பளமாக வழங்கும் போது 15 (தோராயமாக)பணத்தை வரியாக எடுத்துக் கொள்கிறது. அவர் 85 பணத்தில் வீட்டுக்குப் பொருட்கள் வாங்கும் போது 15% (குறைந்த அளவாக) பெட்ரோல் வரி, சாலை வரி, சுங்கத் தீர்வை, விற்பனை வரி, விற்பவரின் வருமான வரி என அனைத்து வரிகளையும் மறைமுகமாகக் கட்டுகிறார்.<br /><br />இப்படி உற்பத்தியாளரிடம் செல்லும் பணம் மீண்டும் ஒருவரின் சம்பளமாக மறு சுழற்சியிலும் சிறுகச் சிறுக அரசிடம் சென்று சேர்கிறது. சில சுழற்சியிலேயே அச்சடித்த நூறு பணமும் முழுமையாகச் சென்று சேர்ந்து விடும். அது சில திங்கள்களிலேயே பல மடங்காக அரசிடம் சேருகிறது. அப்படின்னா நாம பணம் சம்பாதிக்கிறது வெறும் உள்ளுணர்வா, உண்மை இல்லயான்னு கேட்டா அதுக்கு விடை, நாம் நமது நாட்டுக்காக (நமக்காக) உழைக்கிறோம். உழைப்பின் வெகுமதியாக நம் செலவினங்களுக்காக கையெழுத்துப் போட்ட தாள்களைத் தருகிறது. அதை எண்ணிக்கையால் சிறிதுன்னும் பெரிதுன்னும் சொல்லிக் கொள்கிறோம். உணவு, உடை, உறையுள்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாட்டு மக்களின் உழைப்பின் அளவு தான் GDP என்று கணிக்கப் படுகிறது. வரவு செலவுத் திட்ட அறிக்கை ஒரு நாட்டு மக்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. அதைத் திறம்பட நிர்வகிக்கிறார்களா என்பது வேறு.<br /><br />நாமிருவரும் இதுபோல் கையெழுத்துப் போட்டு தாள்களைப் பகிர்ந்து கொண்டு, அதனை மதித்து நடந்தால் அதுவும் பணமே, நம்மிருவரைப் பொறுத்த வரை! என்ன அரசின் பணம் போல் பத்து நூறாகாது:-)<br />====================================================================================<br />குமுகாயம், மொழி மற்றம் அறிவியல் என்று மூன்று பிரிவுகளில் போட்டி அறிவிக்கப் பட்டிருக்கிறது. உங்கள் திறன் வாய்ந்த கருத்துகள் கொண்ட தலைப்பு எதுவென்று தேர்ந்து படைப்புகளை அனுப்புங்கள். மறக்காது <a href="http://www.sgtamilbloggers.com/rules.php">விதிமுறைகளை</a>யும் ஒருமுறை பாருங்கள்.<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-27134579979529122022009-06-29T21:13:00.012+05:302009-07-01T08:06:20.943+05:30விசயம்<div style="text-align:justify"><img style="CURSOR: hand" onclick="javascript:window.open('http://www.sgtamilbloggers.com/')" alt="Manarkeni 2009" src="http://www.sgtamilbloggers.com/images/widget200X200.gif" align="left" border="0" />தனித் தமிழில் பேசிப் பழக வேண்டும் என்று முடிவுக்கு வந்த போது பிற மொழிச்சொற்களை இனங்காண முற்பட்டேன். சில சொற்களை எளிதாக மாற்ற முடிந்தது. உபயோகம், பிரயோசனம் போன்றவற்றை பயன்பாடு கொண்டு நீக்கிட்டேன். சில சொற்கள் எளிதாக அடையாளம் கண்டாலும் பயன்பாட்டில் கொண்டு வருவது அரிதாக இருந்தது. வார்த்தை அதில் ஒன்று.<br /><br />இன்னும் சில சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்த தடங்கலாக இருந்தது. இந்த சொற்றொடரில் (வாக்கியமில்லை) தடங்கல்/தடை என்பதற்குப் மாற்றாக சிரமத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். தடையைக் கொண்டு வருவது அரிதாக இருகிறது. அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும். ஆனால் தடையைப் பொருட்படுத்தாது பயன்படுத்துவது அரிதான செயலாகத் தான் இருக்கிறது.<br /><br />மிகுந்த தடங்கலை ஏற்படுத்திய சொல் விசயம். இதற்கு ஈடான சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. பாவாணரைப் பார்த்தால் பற்றியம் என்கிறார். அதாவது ஒன்றைப் பற்றிய செய்தி/தகவல் என்பதால். மற்றபடி, இடத்துக்கேற்றவாறு பல சொற்களை ஈடாகப் பயன் படுத்த முடிந்தது.<br /><br />புழக்கத்தில்: என்ன விசயமா வந்தீங்க?<br />மாற்று: என்ன வேலையா வந்தீங்க?<br /><br />புழக்கத்தில்: சொல்ல வந்த விசயத்தை சட்டுன்னு சொல்லுங்க.<br />மாற்று: சொல்ல வந்த செய்தியை சட்டுன்னு சொல்லுங்க.<br /><br />புழ: விசயந் தெரியாமப் பேசாத.<br />மாற்று: உண்மை தெரியாமப் பேசாத.<br /><br />புழ: உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லணும்.<br />மாற்று: உங்ககிட்ட ஒரு தகவல் சொல்லணும்.<br /><br />புழ: அவங்கிட்ட கத்துக்க நிறைய விசயம் இருக்கு<br />மாற்று: அவங்கிட்ட கத்துக்க நிறைய திறமை இருக்கு.<br /><br />புழ: அவர் விசயத்தை விடு<br />மாற்று: அவர் கதையை விடு<br /><br />இன்னும் பல. விசயம் வரும் இடங்களில் எல்லாம் matter என்ற ஆங்கிலச் சொல்லையும் பயன்படுத்தலாம். தமிழில்அப்படி ஒரு சொல் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் மேலே உள்ள தொடர்களை எல்லாம் மீண்டும், மீண்டும் அசை போட்டதில் விசயத்துக்கு அந்த இடத்தில் வேலையே இல்லை என்பதை உணர முடிந்தது.<br /><br />என்னவா வந்தீங்க?<br /><div>சொல்ல வந்ததை சட்டுன்னு சொல்லுங்க.</div><div>ஓண்ணு/எதுவுந் தெரியாமப் பேசாத.</div><div>உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்.</div><div>அவங்கிட்ட கத்துக்க நிறைய இருக்கு</div><div>அவரை விடு</div><div><br /></div><div>விசயம் என்ற சொல்லோடு என்ன வேற்றுமை உருபு (ஐ,ஆல்,கு,இன்,அது,கண்) வந்ததோ, அந்த வேற்றுமை உருபை அதற்கு முன் உள்ள சொல்லோடு இணைத்தால் விசயமே தேவைப் படலை. தேவைப் படாததற்கு (விசயத்துக்கு!!) எதுக்கு சொல் தேடணும்னு விட்டுட்டேன்.</div><div><br /></div><div>ஆமா, விசயம்னா, அதன் மூல மொழியில் என்ன பொருள்னு யாருக்காவது தெரியுமா?</div><div><br /></div><div>=================================================================</div><div>சிங்கைப் பதிவர்கள் தமிழ்வெளி திரட்டியுடன் நடத்தும் போட்டி இன்று தொடங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தலைப்புகளுக்கும் ஏனைய தகவல்களுக்கும் <a href="http://sgtamilbloggers.com/">இங்கே </a>செல்லுங்கள்.</div><br /></div><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-20597071904990868022009-06-28T13:53:00.005+05:302009-06-29T12:00:14.243+05:30பதிவர்கள் பாதித்த பாராளுமன்றத் தேர்தல்<p class="MsoNormal"><span style="font-family:'Latha','sans-serif';">கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வலைபதிவர்கள் பெரும்பான்மையாக ஈழத்தமிழர் நலன் சார்ந்த கட்டுரைகள் வெளியிட்டு வந்தனர். மைய அரசு தமிழர் நலனைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதாகவும், அந்தக் கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் பரப்புரைகள் செய்யப் பட்டன. மாற்றம் வேண்டும் என்பதை முன்னிறுத்தி குழுக்களாகவும் செயல்பட்டனர்.<?xml:namespace prefix = o /><o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-family:'Latha','sans-serif';">அதற்கு எதிர்வினைகளும் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று வலைபதிவர்கள் கருத்துகள் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது. தேர்தல் முடிவுகளை உற்றுப் பார்த்தால் பதிவர்கள் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.<o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-family:'Latha','sans-serif';">முன்பு நடந்த தேர்தல்களில் படித்தவர்கள் நிறைந்திருப்பதால் நகரப் பகுதிகள் திமுகவுக்கு ஆதரவானதாக கருதப்படும். இந்தத் தேர்தலில் நகரப் பகுதிகள் பெரும்பான்மையாக திமுக கூட்டணியைக் கை விட்டு விட்டன. மாநகராட்சிகளில் நெல்லை, மதுரை தவிர அனைத்து மாநகராட்சி அடங்கிய தொகுதிகளையும் அதிமுக பெற்றிருக்கிறது. பதிவர் நடவடிக்கைகள் நிறைந்த தொகுதிகள் இவை. பதிவர் கருத்துகள் மக்களிடம் சேர்ந்துள்ளன. அவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.<o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-family:'Latha','sans-serif';"><o:p></o:p>சென்னையில் வலுவான பின்னனி கொண்ட திமுக, தமிழ் நாட்டிலேயே கல்வி அறிவு நிறைந்த தென் சென்னையைக் கோட்டை விட்டிருக்கிறது. வட சென்னையும் திருப்பெரும்புதூரும் தொழிலாளர் நிறைந்த தொகுதிகள். காஞ்சிபுரம் அதிமுக முன்னனியில் இருந்து பின்னுக்குப் போன தொகுதி. அங்கு சட்ட மன்றத் தொகுதிவாரியாகப் பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியலாம்.<o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-family:'Latha','sans-serif';">தென் சென்னை, மதுரை போன்ற தொகுதிகளில் பணத்தை விட தனிப்பட்ட உழைப்பும், ஆளுமையுமே வெற்றி பெற்றுத் தந்ததாக நினைக்கிறேன். தூத்துக்குடி, கன்னியாகுமரி படித்தவர்கள் நிறைந்த தொகுதிகள். ஆனால் தேர்தல் என்று வந்தால் சாதி, மத அடிப்பபடையில் மட்டுமே வாக்களிப்பதால் அவற்றை இங்கே பெரிதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.</span></p><p class="MsoNormal"><span style="font-family:'Latha','sans-serif';"><o:p>வெற்றி பெறா விட்டாலும் தென் சென்னையில் போட்டியிட்ட சரத்பாபு பரவலாக அறிமுகம் பெற்றது பதிவர்களால் தான். ஈழச்செய்திகள் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப் பட்டபோது அச்செய்திகளை பரவலாக அறியத் தந்ததும் இந்த மாற்று ஊடகமே.</o:p></span></p><p class="MsoNormal"><span style="font-family:'Latha','sans-serif';"><o:p>பதிவர்களை விட படிப்பவர்கள் தான் கூடுதலாக இருக்கிறார்கள். பதிவுகளைச் சுட்டி எனக்கு வரும் அஞ்சல்களில் பெரும்பான்மை பதிவர் அல்லாதவர்களிடம் இருந்து தான் வருகிறது. அவர்கள் மூலமாக பதிவின் கருத்துகள் இட்டீடிற்கு (விவாதம்) உள்ளாகி மேலும் பரவி இருக்கும் வாய்ப்புகளும் உண்டு.</o:p></span></p><p class="MsoNormal"><span style="font-family:'Latha','sans-serif';">பதிவர்கள் இன்னும் ஆக்கத்துடன் பரவலாக செயல்பட்டால் வருங்காலத்திலும் தேர்தலில் சிறப்பாக பங்காற்ற முடியும். மேலும் முயன்றால் தேர்தலில் வென்று சட்டமியற்றும் மையங்களுக்கு தேர்ந்தெடுக்கப் படலாம் என்றே கருதுகிறேன். மற்ற நாடுகளில் பதிவர்கள் என்ற அடையாளத்துடன் வேட்பாளர்கள் வென்றிருக்கிறார்கள். ஆர்வமுள்ளோருக்கு வாழ்த்துகள்.</span></p><p class="MsoNormal"><span style="font-family:Latha;">=====================================================</span></p><p class="MsoNormal"><span style="font-family:'Latha','sans-serif';"><o:p>பதிவிடுவதால் என்ன நன்மை என்று கருதி உங்கள் கருத்துக்களை வெளியிடாது இருப்பவரா? இந்தச் <a href="http://www.sgtamilbloggers.com/">சுட்டியை </a>ஒரு பார்வை பார்த்துடுங்களேன் ;-)</o:p></span></p><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-78661805623502595972008-09-20T09:00:00.003+05:302008-09-20T09:12:51.070+05:30இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2<a href="http://sivamgss.blogspot.com/2008/03/3.html">இராமன் கதை இங்கே</a><br /><br /><span style="color:#6600cc;">சிந்தனையால் செலுத்தப்பட்ட மனிதர்கள்.</span><br /><br />கூர்முள் உடைய குதிரை, தலைவனொடு<br />பார்வை பிரிந்தநற் பாவைஉடன் ஓர்சொல்<br />இழந்த இளவல் எனவகைப் பட்டார்<br />அழுந்தும் கடிவாளம் காண்.<br /><br />கூர்முள் - குதிரை செலுத்தும் கருவி<br /><br /><span style="color:#6600cc;">இலக்குவன் வருத்தத்தை சீதை மாறுபட்டு புரிந்து கொள்ளுதல்</span><br /><br />உறுவல் அழுந்த ஒருவன் இளவல்<br />மறுகரை சேர்ந்தான் மனதும் மறுக<br />முறுவல் அணிந்த குலப்பெண் உவனைத்<br />தறுக உணர்ந்தாள் தனித்து.<br /><br />தறுக - தவறாக<br /><br />ஆறுதல் கூற அமைதியாய் நோக்கினாள்<br />'தேறுதல் அடைவாய், தெரிந்துநான் மாறுதல்<br />கொண்டேன், மயக்கம் குறைந்து; பரிசினைத்<br />தந்தேத் திரும்பலாம் தாழ்ந்து'.<br /><br /><span style="color:#6600cc;">அன்பின் அழுத்தம் தாங்காது இலக்குவன் நடந்தவை உரைத்தல்</span><br /><br />இன்னும் கலங்கினான் இவ்வளவும் நேர்ந்தன<br />சொன்னான் பிதற்றும் தொனியொன்ற - கண்கள்<br />தாழ்ந்தே இயல்பு தடுமாறி போர்தனில்<br />வீழ்ந்தவன் போல்தான் விளர்ந்து.<br /><br />விளர்தல் - வெளுத்தல், வெட்குதல்<br /><br /><span style="color:#6600cc;">சீதையின் கைவிடப்பட்ட நிலை கண்ட துறவோர்கள் வால்மீகி குடிலுக்கு அழைத்துச் சென்றனர்</span><br /><br />'சுமக்கும் வயிற்றின் சுமைதளர் காலம்<br />உமக்கும் பொறுக்க முடிந்ததோ' - விம்மலாய்ச்<br />சுட்டினாள் இளவலிடம் ஒண்ணா(து) உணர்த்திட<br />கட்டறுந்த கண்கள் கசிந்து.<br /><br />வேறாரு மில்லா வெறுமையால் தன்குரல்<br />வீறிட்(டு) அழுதாள்; விசும்பினாள் காறலுற.<br />ஏதில் ஒலிசார்ந்(து) இரிந்தனர் கான்துறவோர்<br />பேதை இருந்த இடத்து.<br /><br />ஏதில் – அந்நியமான<br />இரிதல் - விரைதல்<br /><br />அழுதவர் யாரென்(று) அறிந்தநன் நோலார்<br />குழுமினர் வால்மிகிமுன்; ஒட்பச் செழுமையால்<br />யாவையும் ஊகித் தறிந்துரைத்தார் பேருயிராள்<br />தேவைகள் பார்க்கப் பணித்து.<br /><br />ஒட்பம் - அறிவாற்றல்<br />பேருயிராள் - ஒன்றுக்கு மேற்பட்ட உயிர் சுமந்தவள் (இரட்டை கரு என்பது அறியப் படாததால் ஈருயிர் (அ) மூவுயிர் எனக் குறிக்கவில்லை)<br /><br /><span style="color:#6600cc;">இரட்டையர் பிறப்பு</span><br /><br />பொறுக்காத போதும் பொறையெனும் பண்பு<br />துறக்காமை தாய்வழி யுற்ற சிறப்பெனினும்<br />அத்தன்மை ஏற்கா(து) அவள்வயி(று) ஈன்றதே<br />முத்தனைய வித்துகளி ரண்டு.<br /><br />புல்லால் களைந்தார் புரைகளை, சேயுள்மேற்<br />புல்மே வியமே னியனிலவன் - புல்லடி<br />ஓடிய செல்வன் குசனென்றார் வால்மீகி,<br />சூடிய மாலைகள் தொட்டு.<br /><br />இரண்டாவது அடி பதம் பிரித்து<br />புல் மேவிய மேனியன் இலவன்<br />அடிப்புல் – புல்லடி<br /><br />நித்தில மைந்தர் இருவரும் கற்றனர்<br />வித்தைகள் யாவையும் வெட்புடன் - அத்திறம்<br />காட்டி அவையை அசைத்த சிறுவர்தாம்<br />காட்டிற் பிறந்த கரும்பு.<br /><br /><a href="http://mugavairam.blogspot.com/2008/09/raghu-venba-3-1.html">முந்தைய பகுதி</a> <a href=""></a><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-22203814174784974992008-09-19T21:41:00.003+05:302008-09-19T22:05:06.028+05:30அலைபேசி உலவிகளும் தமிழும்நண்பர் ஐ-போன் 3ச்சி(ஜி) கொண்டு வந்திருந்தார். ஆவல் குறுகுறுக்க தமிழ்மணம் வலைப்பக்கத்தைத் திறந்தேன். சிறு பிழைகளைத் தவிர பக்கத்தின் உள்ளடக்கத்தை வாசிக்க முடிந்தது. ஆனால் தமிழில் எவ்வாறு எண்ணங்களை உள்ளிடுவது எனத் தெரியவில்லை.<br /><br />இணைய உலாவியில் தமிழ் 99 எழுதிகள் இருந்தால் உள்ளிடலாம். அலைபேசிகளுக்கு என தமிழ் மென்பொருள்கள் இருக்கின்றனவா? உயர்கட்ட குழப்பமாக அலைபேசிகளிலும் சிம்பியான், விண்டோச்(ஸ்), மேக் என வெவ்வேறு இயங்கு தளங்கள் உள்ளன. தமிழ் எழுதிகளில் இந்த இயங்கு தளங்களுக்கான ஒப்புமை(Compatibility) இருக்க வேண்டும்.<br /><br />இதையெல்லாம் விட, விண்டோச் மொபைல் 6.1 இயங்கு தளத்தைக் கொண்ட சாம்சங் ஓம்னியா அலைபேசியில் ஐஈ உலவியில் தமிழ்மணம் கட்டங்கட்டப் பட்டுத் தெரிகிறது. Encoding ஒருங்குறி எனத் தேர்வு செய்தும் பயனில்லை. ஓபரா உலவியிலும் இதே கதை தான்.இந்த அலைபேசிகளில் 3ச்சி தொழில்நுட்பம் இருந்தும் என்ன பயன்? <br /><br />சிங்கையில் ஐ-போன் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னர் டுடே என்னும் நாளிதழ் அலைபேசிகளுக்கான தனிப்பட்ட இணைய பக்கங்களை வெளியிட்டது. அதுபோன்ற விழிப்புணர்வுடனான செயல்பாடுகள் தமிழ் மட்டத்தில் மேற்கொள்ளப் படுகின்றனவா? ஆம் என்றால் மிக்க மகிழ்ச்சி தரும் செய்தியே! அலைபேசியில் தமிழ் மென்பொருள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-51760228191943205292008-09-15T19:02:00.013+05:302008-09-20T09:13:32.097+05:30இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -1<a href="http://sivamgss.blogspot.com/2008/03/3.html">இராமன் கதை இங்கே</a><br /><br />எதற்குப் பிரிந்தார் எனும்கதை சொல்வேன்<br />புதையும் மனமே பொறைகொள் - வதமுடித்த<br />கோமகன் மக்கள் குறையற ஆண்டனன்<br />தாமரைப் பூமக ளோடு.<br /><br />கருவுந் தரித்தாள் களிகூர்ந்த வாழ்வில்<br />பெருங்குசை உற்றதே கோவில் - நறுமுகை<br />ஏந்தினாள் நாதனை வேண்டினாள் நற்றவஞ்செய்<br />நன்னிலஞ் செல்ல நசிந்து.<br /><br />குசை - மகிழ்ச்சி<br />கோவில் - அரண்மனை<br /><br />கொண்டான் வியப்பெனினும் பூமகளு வப்பவள்<br />எண்ணம்போல் அத்த(ம்) அனுப்பத்தன் பின்னனை<br />ஏவல் அழைத்தான்; இளவல் இயம்பினான்<br />வேவுரைத்த ஊர்மக்கள் கூற்று.<br /><br />அத்தம் - காடு<br /><br />என்னே அரசர்? செறுநர் கவர்ந்தபெண்ணை<br />பொன்னே எனச்சேர்தல் ஒவ்வாதே முன்னோர்கள்<br />சொன்ன படியென்றே புல்லறிவாற் போந்தார்<br />மன்னன் மனம்வருந்து(ம்) ஆறு.<br /><br />சிறைமீண்ட பூசுதை சீர்மிகுந்த போதும்<br />நிறையிலை என்பார் இருக்க - பொறையறு<br />மன்னன் புரையெனத் தேர்ந்தான் இரியலால்<br />குன்றில் உருண்டதாம் கல்.<br /><br />இரியல் - விரைந்து, நிலை தடுமாறி<br /><br />தூற்றலஞ்சி இல்லாள் உவந்தபடி கானகம்<br />மாற்றத் துணிந்திள வல்செய(ல்) - ஆற்றப்<br />பணித்து விளக்கியுரைத் தான்வேந்தன் ஆங்கே<br />பணிந்தான் இளவல் பழிக்கு.<br /><br />பிணங்கு தலன்றே உடன்பொருந்த; வாழ்வில்<br />அணங்கினைச் சேர்தல் அரிதென்(று) உணர்ந்தான்,<br />சுணங்கினான் சோர்வாய்; ஒருமையில் ஆழ்ந்தான்,<br />முணங்கும் மனம்வழி ஒத்து.<br /><br />முணங்கு - முணு, முணுத்தல்<br /><br />ஞாயிறு தோன்றுமுன் ஞாலம் விழிக்குமுன்<br />சேயுற்ற மாதுடன் சேவகன்போல் தேய்ந்து<br />சுமந்திரன் தேரில் இருந்தான் இலக்குவன்<br />உம்பலாம் தோள்களும் சோர்ந்து.<br /><br />உம்பல் - வலிமையுடைய, எழுச்சி மிகுந்து<br /><br /><a href="http://mugavairam.blogspot.com/2008/06/raghu-venba-2_2973.html">முந்தைய பகுதி</a> <a href="http://mugavairam.blogspot.com/2008/09/raghu-venba-3-2.html">அடுத்த பகுதி</a><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-71999549619028383622008-08-05T15:06:00.002+05:302008-08-05T15:12:01.209+05:30ஆகஸ்டு - சிங்கை பதிவர் கூட்டம் - அங் - மோ - கியோஇது தொடர்பான முந்தைய பதிவு: <a href="http://govikannan.blogspot.com/2008/08/blog-post_03.html">காலம்: சிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் !</a><br /><br />இயல்பான பேச்சும், இனிப்பான உணவும் பதிவர் கூட்டத்தைச் சிறப்பாக்கின. அங்கே பகிர்ந்து கொள்ளப் பட்ட சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன். பல்வேறு திசைகளில் பயணித்த பேச்சு ஒரு கட்டத்தில் தமிழில் பெயர் சூட்டுவதைப் பற்றி நின்றது.<br /><br />தமிழில் பெயர் சூட்டுவது என்னமோ இந்து என்று கருதப் படுபவர்களுக்கு மட்டும் உண்டான கடமை இல்லை. மற்ற மதத்தவர்களும் முயலலாம் என்று விவாதம் தொடங்கியது. பால்ராஜ், புனிதர் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட விரும்புவதால் ஆங்கிலப் பெயர்களாக அமைந்து விடுகின்றன என்றார். வியட்நாமில் கிறித்துவர்கள் வியட்நாமியப் பெயர்களைத் தான் சூட்டுகின்றனர் என ஜோ அழகாக மறுத்தார். மேலும், தமிழில் பெயர் வைப்பதில் தடை என்று எதுவும் இல்லை, அவரவர் விருப்பத்தை பொறுத்து என்றார். நானும், இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் அரபிப் பெயர்களை வெகுவாக பயன்படுத்துவதில்லை. பின் ஏன் நாம் மட்டும் ஆங்கிலத்திலும், அரபியிலும் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினேன். மேலும் விரிவாக விவாதிக்க எனக்கும் தயக்கமாக இருந்தது. பரிந்துரை என்ற அளவிலேயே அந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டோம்.<br /><br />காலத்திற்கொவ்வாத தனித்தமிழ் முயற்சிகளினால் என்ன பயன் என்று அரசு வினவினார். எனக்குப் பொறுக்க வில்லை. நாம இப்படி கூடுவதால் மட்டும் என்ன பயன் என்று கடுப்படித்தேன். உண்மையில் தனித் தமிழ் முயற்சிகளின் தேவை மிக விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய, வரலாற்றுடன் பிணைந்த பொருள். இப்படி ஒரு வட்ட பண்டப்பேழையில் (மேசை) அமர்ந்து கொண்டு என்னத்த பேசுவது என்று விட்டு விட்டேன். பார்க்கலாம், அரசுவுடன் இந்த தலைப்பில் அமராது விடுவது இல்லை. இப்பத் தான் அமுதாவும் கூட இருக்காரே, நல்ல நாளாப் பாத்து கட்டம் கட்டிடலாம்.<br /><br />அடுத்ததும் அரசு குறித்த துணுக்குத் தான். மிக நேரந்தாழ்த்தி, ஆகக் கடைசியாத் தான் வந்தாப்ல. இவருக்குன்னு வச்சிருந்த அல்வால பாதிய எறும்புங்க சாப்பிட்டுருச்சு. வந்து உக்காந்ததும், ஜெகதீசன் 'மிச்சத்தை யெல்லாம் இவருக்கு குடுங்க'னு போண்டாவையும், அல்வாவையும் குடுத்ததும் முகம் தொங்கிப் போச்சு. 'இல்லைங்க, உங்களுக்குன்னு எடுத்து வைச்சது'ன்னு சொன்னதும் மனசைத் தேத்தி சாப்பிட்டாரு.<br /><br />போன தடவை ஜெகதீசன் பேசலைன்னு கரிச்சுக் கொட்டினா, இந்தத் தடவை கோவியும், கிரியும் வாயைத் திறக்கவே இல்லை. ஜெகதீசன் பேசினார், அவ்வளவு தான். மற்ற பதிவர்கள் அனைவரும் மடை திறந்தாற் போல் பேசினார்கள். (இப்போதைக்கு) வாசகர் பாஸ்கர் காட்டிய ஆர்வம் வியப்பளித்தது. அவரிடமிருந்து துறை சார்ந்த பதிவுகள் நிறைய எதிர் பார்க்கலாம். பதிவாரா? வடுவூர் குமார், கடைசி முறையாக சிங்கைப் பதிவர் கூட்டத்தில் கலந்து கொள்வதாகச் சொன்னார். அவருடைய எதிர்காலப் பணிகள், முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்கள். சிங்கை நாதன் வழக்கம் போல எங்களுக்கு அல்வாவும், பாஸ்கருக்கு புதிரும் தந்தார். என்னமோ பக்கத்து வீட்டுல இருந்து எட்டிப் பாத்தவர் மாதிரி பாஸ்கரைப் பத்தி ஒவ்வொரு தகவலா சொல்லி அவரைத் திகைக்க வைச்சார்.<br /><br />ஏற்கெனவே, மூணு ஜோ இருக்கறது கண்ணைக் கட்டுது. இப்ப இன்னொரு 'ஜோ'சப் வர்றாரு. மீண்டும் கூடுவதற்கு காரணம் இருக்குல்ல.... மகிழ்ச்சி தான். வாங்கையா, வாங்க. அடுத்த முறை இடத்தேர்வு செந்தில் நாதன் முறை. அவர் புகிட் கோம்பாக் என்ற இடத்தில் கூடலாம்னு சொன்னார். அறிவிப்புக்கு காத்திருக்கிறோம்.<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-80792775601390487922008-06-30T18:37:00.010+05:302008-06-30T21:05:23.407+05:30திங்கள் சத்யா -> அசுரன் -> தொடரும் சோகம்; தீர்வு?<a href="http://poar-parai.blogspot.com/2008/06/blog-post_27.html">அசுரன்: ''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்!</a> (<a href="http://photobala.blogspot.com/2008/05/blog-post_23.html" title="இந்தக் கையாலதான் சோறு தின்றோம்">திங்கள் சத்யா</a>)<br /><br />மேலே உள்ள சுட்டியைப் படித்து விட்டு தொடருங்கள்.<br /><br />திங்கள் சத்யாவின் இது போன்ற <a href="http://photobala.blogspot.com/2007/04/blog-post.html">இன்னொரு பதிவினை</a> (இன்னொரு) <a href="http://msathia.blogspot.com/2007/06/good-links.html">சத்யா</a> குறிப்பிட்டிருந்தார். படித்து விட்டு பல நாட்கள் மனம் கலங்கிப் போயிருந்தது. இப்போது ஓராண்டுகள் கழித்து அதே சோகம் இன்னொரு இடுகையாக சற்றும் மாற்றமின்றி. இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் இந்த நிலை தொடரத்தான் போகிறதா?<br /><br />1. ஆயிரமாயிரம் பெருமைகள் கொண்டாடும் நம்மால் ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு சுகாதாரமான முறையில் வேலை செய்ய வழியேற்படுத்த முடியவில்லை. எதனால்?<br /><br />2. மேலைநாடுகளில் இந்த வேலை எவ்வாறு கையாளப்படுகிறது?<br /><br />3. அரசின் கவனத்தை ஈர்ப்பது எப்படி?<br /><br />4. அரசுகள் கையாலாகதவை என்றால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாம் எவ்வாறு உதவ முடியும்?<br /><br />இதை இப்படியே தொடர விடக் கூடாது. இயலவில்லை என்றால் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்று தொட்டுத் தொடரும் நாகரிகம் என்று வெட்கமின்றி கூறித் திரிபவர்களாகவே பார்க்கப் படுவோம்.<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-40578463200868651752008-06-25T09:51:00.003+05:302008-06-25T10:07:29.372+05:30எறும்புடன் ஒரு பயணம் - புனைவுஇன்று காலையில் தான் அந்த விநோதம் நிகழ்ந்தது. வழக்கம் போல் தாமதமாக அலுவலகத்துக்கு புறப்பட்டேன். உலகமே அழிந்தாலும் தன் கடமை தவறக்கூடாது எனக் கருதும் என் மனைவி எனக்குக் கட்டுச்சாப்பாட்டை தந்து விட்டு பெப்போவை (என் பையங்க) பால்வாடிக்கு அழைத்துச் சென்றார். நான் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் 24ம் எண் பேருந்தைப் பிடித்தேன். அதுவும் வழக்கம் போல் ஊர்ந்தே நகர்ந்தது.<br /><br />நான் இருக்கும் லொராங் சுவானிலிருந்து பாயா லேபா தொடர் வண்டி நிலையம் செல்ல அரை மணி நேரம் ஆகும். அங்கிருந்து 8 நிமிட தொடர் வண்டிப் பயணம் தானா மேரா நிலையத்திற்கு. அந்த சந்திப்பில் பொதுவாக 10 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வரும் சாங்கி செல்லும் தொடர் வண்டியைப் பிடித்தால் அலுவலகம் அடையலாம். இதுக்குள்ள ஒரு மணி நேரமாகி விடும்.<br /><br />இன்னும் பேருந்தில் தான் இருந்தேன். நிமிடக் கணக்கு, நொடிக்கணக்கு எல்லாம் பார்த்தும் 10 மணிக்கு முன் அலுவலகம் அடைய முடியாது என்ற உண்மை வெறுப்பேத்தியது. ஒலி பண்பலையில் ஆனந்தம் ப்ரூவுடன் ஓடிகொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடங்களில் இந்திப் பாட்டு போட்டு விடுவார்கள். நினைக்கும் போதே இன்னமும் வெறுப்பாக இருந்ததது.<br /><br />அப்போது தான் அந்த எறும்பைக் கவனித்தேன். என் சாப்பாட்டுப் பையின் மேல் ஒரு கடி எறும்பு (சிவப்பா இருக்குமே அது தான்) ஊர்ந்து கொண்டிருந்தது. இது எப்படி இங்கே? பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது தொத்திக் கொண்டிருக்க வேண்டும். இப்படியே பேருந்தில் விட்டால் யார் காலிலாவது பட்டு நசுங்கி விடும். பையின் விளிம்புக்கு வரும் போதெல்லாம், அதைப் பிடித்து மீண்டும் நடுவில் விட்டு கண்காணித்துக் கொண்டிருந்தேன். இறங்க வேண்டிய நிறுத்ததில் ஏதாவது செடியின் மேல் விட்டு விடலாம் என்று முடிவு.<br /><br />இரண்டு நிமிடங்கள் கூட என்னால் இப்படித் தொடர முடியலை. விரலில் ஏறிய எறும்பு விரலசைவில் தன் சமநிலை தவறி காற்றில் மெல்ல அசைந்து இருக்கைக்கும், பேருந்தின் உட்புறச்சுவருக்கும் இடையே தன் கைகளை பிடிமானத்துக்காக விசிறியவாறு விழுந்தது. அது கைகளை விசிறிய போது அப்படியே மெதுவாக உருமாறி என் பெப்போவைப் போல் தெரிந்தது. 'அய்யோ, என்ன செய்வேன்' என்று பதறி ஒரு நொடியில் கீழே விழுந்த பெப்போவைத் (அதாங்க, எறும்பு) தேடலானேன். பக்கத்தில் அமர்ந்திருந்த சீனப் பெண் 'என்னாச்சு, இவனுக்கு' என்பது போல் பார்த்தார். அசடு வழிந்த நான் இருக்கையில் அமர்ந்த படி கால்களை அகட்டிக் கொண்டும், பையை நகர்த்திக் கொண்டுமிருந்தேன். கடுப்பாகி, அந்தப்பெண் வேறு இருக்கைக்கு மாறிக் கொண்டார்.<br /><br />எல்லோரும் என்னைப் பார்த்த போதும், இப்போது கொஞ்சம் வசதியாய் இருக்கவே நன்றாக குனிந்து தேடினேன். அகப்பட்டுக் கொண்டது. மகிழ்ச்சியுடன் கையில் எடுத்து உத்துப் பார்த்தேன். ஏதாவது அடி பட்டிருக்கப் போவுது. உற்றுக் கவனித்ததில் அது பெப்போ இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன். நிறுத்தம் வந்தவுடன் அந்த எறும்பை அங்கிருந்த மதில் சுவர் செடியில் விட்டு, விட்டு 'அப்பாடா'ன்னு சாலையைக் கடந்து தொடர் வண்டி நடை மேடைக்கு வந்தேன். எல்லாம் போன ஞாயிறு 'honey, I shrunk the kids' சன் தொலைக்காட்சியில் பார்த்ததால் வந்த உள்ளக் குளறல். எப்படியோ ஒரு எறும்பை காப்பாத்தி இருக்கேன். :-)<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-27231550472329623612008-06-24T11:56:00.006+05:302008-09-15T19:56:39.303+05:30இரகு வெண்பா - காவியம் பாடல்<a href="http://sivamgss.blogspot.com/2008/03/2.html">இராமன் கதை இங்கே</a><br /><br /><strong>நாரதர் சொன்ன கதையை காவியமாய் வால்மிகி பாடுதல்<br /></strong><br />நாரதன் ஓதினான் நம்பியின் கதையினை<br />பாரதம் ஏத்துப் படித்திடவே - சாரதியற்(று)<br />ஆயிரம் காட்சிகள் ஆய்ந்தன யாவையும்<br />பாயிரமாய்ச் செய்தார் பரிந்து.<br /><br /><strong>இலவ-குசனை அழைத்து பாடப் பணித்தல்</strong><br /><br />இயற்றிய செய்யுள் இசைக்கப் பணித்தார்<br />வயதில் இளையோரை ஈர்த்து - வியன்புவியும்<br />வானமும் உள்ளளவும் வாழ்த்துமே காட்டிடைத்<br />தேனனையும் பாக்களைத் தான்.<br /><br /><strong>புகழுறப் பாடி அவைதனை அடைதல்</strong><br /><br />பாடிய ஊரெல்லாம் பாராட்டப் பெற்றனர்<br />தேடிய உண்மை தெளிந்ததாய் நாடிய<br />மக்கள் திளைத்தனர்; ஆன்றோர் அவையிலும்<br />ஒக்கவே சென்றார் உவந்து.<br /><br />இசைத்த இளையோர் இருவரும் மன்றில்<br />அசைத்த அகமொரு வாரி - விசையுறு<br />வாசகம் கேளுமின் வேந்தனின் மக்களே<br />யாசகம் பாடும் சிறார்.<br /><br /><em>வேள்வியில் இடையே பாடலைக் கேட்டவர், பாடலை கேட்க இடைவெளி பெற்றனர். </em><br /><br />மன்னன் நடத்திய மாபெரும் வேள்வியை<br />இன்னிசை பாடியே எட்டினர் - பண்ணுடையப்<br />பாடலை அந்தணர் போற்றினர் வேள்வியில்<br />இடைவெளி வேண்டியேப் பெற்று.<br /><br /><strong>சிறுவர் பற்றி அறிந்த இராமன் தம்முன் பாட அழைத்தது</strong><br /><br />முன்னம் பிரிந்தார் முகங்கொள நேர்ந்தது<br />மன்னன் அழைத்தான் மகவினை - இன்னும்<br />அறியா திருந்தவன் ஆழ்ந்தான் கதையில்<br />சிறிதும் கலையா(து) இருந்து.<br /><br /><a href="http://mugavairam.blogspot.com/2008/06/raghu-venba-1.html">முந்தைய பகுதி</a> <a href="http://mugavairam.blogspot.com/2008/09/raghu-venba-3-1.html">அடுத்த பகுதி</a><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-60689097624051626872008-06-20T22:46:00.007+05:302008-06-24T07:49:20.485+05:30இரகு வெண்பா - வால்மீகி<a href="http://sivamgss.blogspot.com/2008/03/1.html">இராமன் கதை இங்கே</a><br /><p><br /><span style="FONT-WEIGHT: bold">காட்டில் கொள்ளையராய் வாழ்ந்த வலியனை நாரதர் சந்தித்தல்</span><br /><br />கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்;<br />கள்ளம் நிறைந்த வலியனை வெல்லும்<br />தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான்<br />'கருமப் பழியார் உடைத்து?'<br /><br /><span style="FONT-WEIGHT: bold">வலியன் மறுமொழி</span><br /><br />துச்சமென்பார் எம்குலத்தோர் என்பழியை ஏற்றிடவே<br />அச்சமில்லை எப்பொழுதும் மேதினியில் - மிச்சமின்றி<br />கூவிடுவேன் யாவரையும்; என்பழிக்காய் போட்டியிட<br />மேவிடுவோர் எண்ணிக்கை மேல்.<br /><br /><span style="FONT-WEIGHT: bold">பழி ஏற்க யாருமின்றி வால்மிகியாக துறவறம் தழுவுதல்</span><br /><br />அல்லன ஆற்றுவான் ஈட்டு(ம்)பழி ஒப்புவர்<br />இல்லை உவனிடம், உள்பட பொல்லாமை<br />நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன்<br />இங்ஙனம்இல் வாழ்வு துறந்து.<br /><br />உள்பட - உண்மை உள்ளத்தில் பட<br /><br /><span style="FONT-WEIGHT: bold">இனியவர் தேடி இரகுவினை அறிதல்</span><br /><br />முனிவராய் வாழ்ந்த வலியுமே கேட்டார்<br />'இனியவர் யாருளர் இங்கே?' - இனிவரும்<br />காதையில் தன்னை மறந்தார்; கலைத்ததே<br />காடையின் கதறும் ஒலி!<br /><br /><span style="FONT-WEIGHT: bold">வேடனை வெருண்டு முதல் பாடல் விளம்புதல்</span><br /><br />கண்ணுற நேர்ந்ததே கண்ணீரில் காடையை<br />புண்ணுற வீழ்ந்ததே உந்தியும் - தன்னிலை<br />விண்ணுற தீஞ்சொல் மொழிந்தாரே வேடற்கு<br />மண்ணுற வாழும் முதல்.<br /><br />உந்தி - துணை, பறவை<br />முதல் - தொடக்கம்<br /><br />பறவை உயிரைப் பறித்த தருணம்<br />துறவி பலுக்கும் இராகம் முதலில்<br />அமைத்து படிக்கப் பணித்தார் உலகம்<br />சுவைக்க இராமன் கதை. </p><p><pre><a href="http://mugavairam.blogspot.com/2008/06/ramayanam-venba-intro.html">அறிமுகம்</a> <a href="http://mugavairam.blogspot.com/2008/06/raghu-venba-2.html">அடுத்த பகுதி</a></pre><p></p><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-54755257592245202662008-06-18T07:32:00.006+05:302008-06-20T22:40:40.628+05:30இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்<p>என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் <a href="http://payananggal.blogspot.com/">இயன்ற வரையில் இனிய தமிழில்</a> பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. <a href="http://groups.google.com/group/yAppulagam/">பேராசிரியர் பசுபதியின்</a> கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன்.</p><p>இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க.</p><p>அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரிந்து கொள்வதற்காக) உரை எழுதும் பணியில் இருந்தோம். வெண்பாவின் வீச்சும், செப்பலோசையின் நடையும் என்னை மிகவும் கவர்ந்தது. நண்பர்கள் குழுமத்தில் அவ்வப்போது <a href="http://jcet.blogspot.com/2008/06/blog-post.html">வெண்பா</a> எழுதி துன்புறுத்தியது உண்டு. இப்பொழுது <a href="http://venbaaeluthalaamvaanga.blogspot.com/">அகரம் அமுதாவின்</a> வெண்பாப் பாடங்களையும் கவனமாகப் படித்து வருகிறேன். இப்படி பிறரின் தொடர்ந்த ஊக்கமும் என்னை இன்னும் முயற்சிக்கவே தூண்டியது.</p><p>படிச்சா மட்டும் போதுமா? திறம் அறிய வேண்டாமா? இதோ, <a href="http://sivamgss.blogspot.com/2008/03/1.html">கீதா சாம்பசிவம்</a> அவர்களின் இராமாயணத் தொடரை அதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொண்டேன். வாழ்த்தும், முதல் இடுகையும் வெண்பாவில் எழுதி பின்னூட்டி விட்டேன். அதில் சில அடிப்படைப் பிழைகள். ஆசிரியர் ஒருவர் சுட்டிக் காட்டினார். இந்த தொடரில் அவர் பின்னூட்டத்தில் வெளிப்படுவார் என நம்புகிறேன். கீதாம்மாவின் ஒவ்வொரு இடுகையையும் வெண்பாவால் தொடரவே இந்தத் தொடர். இசைவு தெரிவித்த அவருக்கு என் சிறப்பான நன்றிகள் பல.</p><p>பிழைகளைப் பொறுத்து, திருத்துமாறும் கேட்டுக் கொண்டு, அவருக்கு எழுதிய வாழ்த்துடன் தொடரைத் துவக்குகிறேன்.</p><p>பொதுவாய் எழுதும் பதிவில் இராமன்<br />மெதுவாய் எழுவான் கதையாய் - எதுவாய்த்<br />திடினும் உசாத்துணை என்றே எழுதத்<br />துடிக்கும் உமக்கேஎன் வாழ்த்து! </p><div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-30405394674290712052008-06-16T14:06:00.003+05:302008-06-16T14:21:09.812+05:30தசாவதாரம் - பார்க்கலாம்!'அடியேன் இராமானுஜதாசன்'ன்னு அறிமுகமாகும் போது கண்ணில் நீர் கசிவதைத் தவிர்க்க முடியவில்லை. கமலுக்கு மட்டும் ஏன் திரைப்படங்கள் மீது இந்த வெறி! அவர் கடின உழைப்பு ஒவ்வொரு சட்டத்திலும்(frame) தெறி(க்)கிறது. வைணவர்களின் நம்பிக்கையை உடைத்து வரதராஜப் பெருமாள் பெயர்க்கப் படும்போது, அவர்களுக்காக பரிதாபப் படமுடிகிறது. இப்படித் தான் எல்லோருக்கும் இருக்கும் என்ற உண்மை நெளிய வைக்கிறது.<br /><br />அடுத்த பத்து நிமிடத்தில் தொடங்குகிறது குட்டிக் கரணங்கள். Roller Coaster - இல் அமர்ந்ததைப் போல் திரையில் யாரெல்லாம் கமல் என சரியாத் தெரியாமல், கதையிலும், அருமையான வசனங்களிலும் ஒட்ட முடியாமல் வியப்பின் ஊடாக படம் பார்க்கிறோம். அதுவும், விமான நிலையத்தில் அவ்தார் சிங் வாந்தி எடுப்பதை கவனிப்பதா, வெள்ளைக் காரன் விஞ்ஞானியைக் கடத்துவதைப் பார்ப்பதா இல்லை நம்ம நாயுடு இந்தியப் பாரம்பரியத்தை கடைபிடிப்பதை நொந்து கொள்வதா எனத் தெரியாமல் காட்சியாடு சேர்ந்து ஒரு சுத்து சுத்துறோம். எல்லோருமே கமல் ஆனதால் இப்படி தொடர முடியாமல் தவிக்கிறோம்னு நினைக்கிறேன். ஒருவேளை பர, பரப்பான திரைக் கதைன்னு ஆறுதல் பட்டாலும் இது போன்ற காட்சிகளில் முன்பு இவ்வாறு குழம்ப நேர்ந்ததில்லை.<br /><br />பாட்டி கமலிடம் நுண்ணுயிர்க்குப்பி மாட்டுவதில் இருந்து துவங்குகிறது இழுவை.... கதைக்கு தொடர்பே இல்லாமல் கலிஃபுல்லாவும், பூவராகவனும் வருகிறார்கள். எப்படா, இந்த குழப்பம் முடியும்னு ஆகிப் போச்சு. அதுவும் கலிஃபுல்லா பேசுவது எளிதில் விளங்கவில்லை. பூவராகவன் அஞ்சல் பெட்டி 520 சிவாஜியை நினைவுபடுத்துகிறார்.<br /><br />ஜப்பானிய கமலைக் காட்டும் போதே இறுதிக் காட்சி இவருக்கும், ஃபிளட்சருக்கும் தான் என ஊகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த சண்டைக் காட்சி அருமையாக இருந்தது. தோல்வியடைந்து, சாகும் தருவாயில் ஹாலிவுட் பாணியில் 'என் சாவை உன்னால் தீர்மானிக்க முடியாது' என்று ஃபிளட்சர் குப்பியை கடிக்கும் போது அந்த கதைஉருவின் மேல் சற்று மதிப்பு ஏற்படுகிறது.<br /><br />அசரடிக்கும் உழைப்பு. வியக்க வைக்கும் தொழில் நுட்பம். ஆனால் அவை எவ்வகையிலும் தரத்திற்கு உதவவில்லை. நெருக்கமான காட்சிகளில் கண்களை ஒட்டி இருக்கும் ஒப்பனை ஒட்டப் பட்டதாகவே தெரிகிறது. இயல்பான மாந்தர்களுடன் ஒப்பனை புனையப்பட்டவர் வரும்போது ஒப்பனையின் 'அழகு' தெள்ளெனத் தெரிகிறது. (நாயுடு ஒப்பனை மட்டும் செம்மையாக இருக்கிறது.) வரைந்து இணைக்கப் பட்ட காட்சிகள் (graphics), மற்ற தமிழ் படங்களுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட தரம் என்றாலும் உயர் தரம் என்று ஒப்புவதற்கில்லை. வரதராஜரை கடலில் போடுவது, சுனாமியில் சிதறுண்ட களம் இவையெல்லாம் கடும் உழைப்பை வெளிப்படையாகக் காட்டுகின்றன. அதுவே அவற்றின் குறையாகவும் அமைந்து விடுகிறது. இறுதிக் காட்சியில் புஷ் மேடையில் இடம் வலமாக நடப்பது, கே. எஸ். ரவிக்குமாரின் கவுண்டமணி நடனம்... சரி, சரி அதெல்லாம் ரசிகர்களுக்கான தூவல், கண்டு கொள்ள வேண்டியதில்லை.<br /><br />எல்லா தோற்றங்களுக்கும் ஏற்றவாறு திறம்பட உடல் அசைவுகளை வெளிப்படுத்துகிறார் உலக நாயகன். அவரைப் பாராட்டி வேண்டுமானால் தனிப் பதிவு போடலாம். கமலின் ஒப்பனைத் தோற்றங்களைத் தவிர மற்ற அனைத்து நடிகர்களையும் NaCl க்குக்கூட பயன்படுத்தவில்லை. அதனாலேயே திரும்பத் திரும்ப கமலையே பார்த்து அலுத்துச் சலித்துப் போகிறோம்.<br /><br />தரம், உலகத் தரம்னு எல்லாம் படிச்சுட்டு போனது தான் தப்பு. மத்த படி படம் ஒரு முறை பார்க்கலாம் வகை.<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-44173891522104555462008-06-16T09:21:00.004+05:302008-06-16T10:46:46.203+05:30சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!<a href="http://govikannan.blogspot.com/2008/06/5.html">காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு !</a><br /><br />மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு.<br /><br />'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்'<br /><br />'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.'<br /><br />இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது.<br /><br />'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முகம் கழுவப் போனேன். அப்பவே மணி 5:15. இனிமே ஃபேர்பிரைஸ் போயி எதுவும் வாங்க முடியாது. காப்பிய குடிச்சுட்டு பட, படன்னு ஆயத்தமாகி இருந்த ஒரு அரிசி வடை பொட்டலத்தை (packet? அது பேரும் தெரியலை, சீனத்துல எழுதி இருந்துச்சு) எடுத்துட்டு சாலைக்கு விரைந்தேன். வாடகை வண்டி எடுத்தப்ப 5:50 - 6 மணி இருக்கும். இடையில கோவி அண்ணாட்ட அலைபேசி வர்றேன்னு உறுதிப் படுத்திட்டேன்.<br /><br />20 நிமிஷப் பயணத்துல அங்க போய் சேர்ந்தேன். யாரையும் முன்னப் பின்ன பாத்தது இல்லை. எப்படி எடுத்துக்குவாங்களோன்னு ஒரு மாதிரி பயந்துட்டே போனேன். கோமளா'ஸ் பின்புறம் கடற்கரையைப் பாத்தாப்புல பேசிட்டு இருந்தாங்க. என்னையப் பாத்ததும் எல்லோருமே இயல்பா கை குலுக்கி அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். யாரும் தாமத்ததிற்கு காரணம் கேக்கலை. 'அப்பாடா'ன்னு இருந்தது. இல்லைனா பொய் ஏதாவது சொல்லணுமே. தூங்குனேன்னு சொல்லத் தயக்கம். அப்படியே எழுந்து கடற்கரையை ஒட்டி கிடையைப் போட்டோம்.<br /><br />அரசுவின் சில பதிவுகள் படிச்சுருக்கேன். அதனால அவர்ட்ட பேச கொஞ்சம் அச்சமா கூட இருந்தது. கொள்கைப் பிழம்புல சூடு விழுந்துடும்னு நினைச்சுக்கிட்டே போயி...., சரியா அவர் பக்கத்துலேயே உக்காந்தேன். பேசாம விசைப் பலகை ஒட்டிகளை வாங்கிட்டு விலகிடலாம்னு பாத்தா இப்படி ஆயிருச்சேன்னு வரிசைல வந்த அல்வாவை வாயில வைச்சுக்கிட்டு அமைதி ஆயிட்டேன். ஆனா, அரசு என் எதிர்பார்ப்பை பொய்யாக்கிட்டார். ஒவ்வொரு பொருள்லயும் தெளிவாக, புன்னகை மாறாமல், அடுத்தவர் பேச வாய்ப்பளித்து என்னை இயல்பா பேச வைச்சுட்டார். இடையில நாங்க எல்லாம் சேர்ந்து போட்ட மொக்கையையும் ரசிச்சார்.<br /><br />சிவராம் முருகன் தன் வலைபதிவு நேர்வுகளை விவரிச்சு எல்லோரையும் கல, கலப்பூட்டினார். அதுவும் 'டேய், இது உனக்குத் தேவையான்னு கேட்டு சேமிச்சு வைச்ச பதிவை அழிச்சுருவேன்' ன்னு வடிவேலு மாதிரி சொன்னதும் சாப்பிட்ட அல்வா வெளிய வர்ற மாதிரி சிரிச்சோம். குமார் துபாய் போறதைப் பத்தியும், அதற்கான நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் சொன்னார். எவ்வளவு கெஞ்சியும் ஜெகதீசன் பேசவே இல்லை. சாப்பிடப் போனப்ப தான் 'எனக்கு ஒரு தோசை' ன்னு சொன்னார். கிரியும், நானும் வெற மாதிரி துணுக்குத் தோரணத்தைக் கட்டினோம்.<br /><br />'உங்க வேலையிடம் எந்தப் பகுதில இருக்கு?' பதில் சொல்லவும்<br /><br />'அங்க தான் என் அலுவலகமும் இருக்கு. எந்த கட்டிடம்', பதில் சொல்லவும்<br /><br />'அங்க தான் நானும் வேலை பாக்குறேன். எந்த நிறுவனம்?'<br /><br />'ஆ! நானும் அங்க தான் வேலை பாக்குறேன்!'<br /><br />வேற, வேற பிரிவுகள்ல வேலை செய்யுறோம். அதனால தான் இன்னும் ஒருத்தரை ஒருத்தர் பாக்கலை.<br /><br />பிறகு சாப்பிடப் போனோம். எல்லோரும் வேணுங்கிறதை கேட்டு வாங்கிட்டு வந்தாச்சு. கடைசி தட்டை எடுக்கும் போது நானும், அரசுவும் கோவிண்ணாட்ட 'போண்டா என்னாச்சு'ன்னதும், அவர் முகத்துல தெரிஞ்ச கலவரத்தைப் பாக்கணுமே! வேக, வேகமா போயி சீட்டு வாங்கற இடத்துல கேட்டார். போண்டா இல்லைன்னு சொன்னதும் அவருக்கு ஏமாற்றம்னாலும், 'அப்பாடா, என் தப்பு இல்லை' ன்றா மாதிரி ஒரு பெருமூச்சு விட்டார்.<br /><br />சாப்பிட்ட பின் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பறிமாறி கொண்டு கிளம்பினோம். மற்ற எல்லோரும் பெடோக் போகணும், நானும் அரசுவும் அமோக்கியோ செல்வதால் தனியாகப் பிரிந்தோம். அங்கே வராத பேருந்துக்காக (ஞாயிறு மட்டுந்தான் வருமாம்) ஒரு மணி நேரம் காத்திருந்தோம். ஆனால் நேரம் போனதே தெரியவில்லை. இனிமையான சந்திப்பின் முத்தாய்ப்பாக அந்த ஒருமணி நேர உரையாடல் அமைந்தது. பின்னர் வேறு பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம். மணி அப்போது 11ஐத் தாண்டி இருந்தது!<br /><br />டோன் லீ வருவார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அவர் பதுங்கு குழிக்குள்ளேயே இருந்து விட்டார் போல. என்னைக் கவர்ந்த அறிமுகப் பதிவர்களில் அவரும் ஒருவர்.<div class="blogger-post-footer">செய்தி ஓடையில் வாசிப்பதற்கு நன்றி, நண்பரே!</div>முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com19